எம்.ஜி.ஆர் ஆட்சியை மக்களுக்கு கொடுப்பேன் ரஜினிகாந்த். கருப்பு எம்ஜிஆர். விஜயகாந்த். எம்.ஜி.ஆர் மறு உருவம்தான் நான்.கமல்ஹாசன். எம்.ஜி.ஆரின் பரம ரசிகன் நான்.மு.க.ஸ்டாலின். இந்தத் தேர்தல் எம்.ஜி.ஆர் முக்கிய...
பியூட்டி பார்லரில் பெண்களைத் தாக்குவது, நில அபகரிப்பு, கள்ளத் துப்பாக்கி, தோட்டாக்கள் தயாரிப்பது என பல்வேறு சமூக விரோத குற்ற செயல்களில் தொடர்புடைய திமுகவினர் மீது, பேஸ்புக்-ல் ஆபாச...
ராகுல்காந்தியை அதிகம் ஆதரிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகுக்கிறது. ராகுல்காந்தி 46% மோடி 28% மக்கள் ஆதரிக்கின்றனர் என சிவோட்டர் செய்தி ஸ்தாபனம் வெளியிட்டுள்ளதை சன் நீயுஸ்...
சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் கடத்தி வந்த ரூ.36.52 லட்சம் மதிப்பிலான 722 கிராம் தங்கம், சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். உளவுத் தகவல் அடிப்படையில், துபாயிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் சங்கர் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் 836 கிராம் தங்கப் பசையை, 3 பொட்டலங்களாக ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தார். அதிலிருந்து 722 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.36.52 லட்சம். இதையடுத்து மணிகண்டன் சங்கர் கைது செய்யப்பட்டதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து இண்டிகோ 6இ66 என்னும் விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ஜாஹிர் உசைன் (35) என்பவரை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனை செய்ததில் அவரது உடலில் 390 கிராம் எடையிலான தங்கப்பசை அடங்கிய ஒரு பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ. 16.81 லட்சம் மதிப்பில் 329 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அநாகரிக பேச்சுக்களை தொடங்கி வைத்ததே திராவிட கும்பல்கள் என்பது முக்கால உண்மை அதுவரை அவையில் பேசுதல் பொதுஇடத்தில் பேசுதல் என்பதில் பலமரபுகள் இருந்தன, பாரத கண்டத்து...
சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழகம் சென்று கொண்டு இருக்கும் நிலையில் களங்களில் இருந்து வரும் செய்திகள் அதிமுக கூட்டணி ஏறு முகத்தை நோக்கியும் திமுக கூட்டணி இறங்கு...
முதல்வர் எடப்பாடியின் சவாலை ஏற்று விவாதிக்க நான் தயார் என்று சொல்லிவிட்டு பிறகு ,"ஊழல் புகார்களை விசாரிக்க ஆளுநர் அனுமதி தர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்....
சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் பிறக்கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்றும், அதிமுக...
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், ஜனவரி 5, 6ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாகிஸ்தான் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள், தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதியில் புயல் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதோடு வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்தில், வடக்கு பஞ்சாப்பில் இருந்து வடகிழக்கு அரபிக் கடல் வரை காற்று சங்கமும் இன்று காணப்பட்டது. இதன் காரணமாக வடமேற்கு இந்தியாவில் ஜனவரி 5ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமானது முதல் தீவிர மழை பெய்யும். பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் தில்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் 3 மற்றும் 4ம் தேதிகளிலும், ஜம்மு காஷ்மீர், லடாக், முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ஜனவரி 5, 6ம் தேதிகளில், இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது.