Tuesday, April 13, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கிராமப்புற இளைஞர்கள் முன்னேற கூடாது என்பதே திமுக காங்கிரஸ் கட்சிகளின் திட்டமா ?

Oredesam by Oredesam
August 24, 2020
in செய்திகள்
0
876
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

ரயில்வே, வங்கி, மத்திய அரசு பணியாளர் பணிகளுக்கு, அதாவது, கெசட்டட் அதிகாரி அல்லாத குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளுக்கு தற்போது அந்தந்த துறைசார்ந்த பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

மத்திய பணியாளர் வாரியம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு மையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, முதல் நிலை தகுதிக்கான பொதுவான தகுதித் தேர்வு நடத்தும் வகையில், தற்போது ‘தேசிய பணியாளர் தேர்வு முகமை’ அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 2020-21 நிதி நிலை அறிக்கையிலேயே இது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரூபாய் 1517. 57 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

READ ALSO

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

மூன்று தேர்வு வாரியங்கள் ஒருங்கிணைக்கப்படுவதால் வேலைதேடுவோர் தனித்தனியாகத் தேர்வு எழுத வேண்டியதில்லை. பணியாளர் தேர்வு நடைமுறைகளை இந்த தேசிய முகமை எளிதாக்குவதோடு, கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் இந்த தேர்வுகளுக்கு அவர்கள் செலவிடும் நேரம் மற்றும் பயண சுமையை குறைக்கும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வு நடத்தப்படும் என்பது சிறப்பானது. தேர்வு மைய வசதிகள் தொடர்பான பிரச்சினைகளை பெருமளவில் குறைக்கும். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறும் என்பதும், ஆன்லைன் மூலமாகவே திறனறி தேர்வுகள் நடத்தப்படும் என்பதும் கூடுதல் சிறப்பு.

இதில் பெறும் மதிப்பெண்கள், மூன்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

தங்களுடைய மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள விரும்புவோர், எவ்வளவு முறை வேண்டுமானாலும் வயது வரம்புக்குட்பட்டு தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுவதோடு, அதில் பெற்ற அதிகமதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

அதே போல், பட்டதாரிகள், பத்தாம் வகுப்பு படித்தவர்கள், மேல்நிலை பள்ளி முடித்தவர்களுக்கு தனித்தனியாக தேர்வு நடத்தப்படும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வி தாள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமலில் உள்ள இடஒதுக்கீடு முறை தொடரும் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளது.

ஒரே தேர்வு நடத்துவதன் மூலம் தற்போதைய நீண்ட கால தேர்வு முறை அகற்றப்பட்டு பணியாளர் தேர்வு விரைந்து நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள மூன்று துறைகளுக்கான தேர்வாக இவை இருந்தாலும், எதிர்காலத்தில், ‘விருப்பப்பட்டால்’ மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் கூட இந்த தகுதி தேர்வின் அடிப்படையில், தங்கள் நிறுவனங்களின் பணியாளர் நியமனங்களை முடிவு செய்வது, தொடர்புடைய அமைப்புகளின் பணியாளர் தேர்வுக்கான கால விரயம் மற்றும் நிதி விரயத்தை அதிகளவில் குறைக்கும்.

கல்வியறிவு அதிகமுள்ள தமிழகத்தில் கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு வகைகளில் நலன் பயக்கும் இந்த ‘தேசிய பணியாளர் தேர்வு முகமை’ அமைக்க ஒரு சில கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பை தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சீர் திருத்தமானது, மாநில உரிமைகளை பறிக்கும் என்றும் மொழி ரீதியான பிரச்சினைகளை உருவாக்கும் என்றெல்லாம் உள்நோக்கத்தோடு விமர்சனங்களை செய்வதன் மூலம், சீர்திருத்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கின்றவர்களின் எண்ணங்களை மக்கள் தவிடு பொடியாக்குவார்கள் என்பது உறுதி.

கட்டுரை:- நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர்,
தமிழக பாரதிய ஜனதா கட்சி.

Tags: AdmkBJP leaderBJPTAMILNADUCongress MLADMKDMKCCTVHindu Templenational congrees

Related Posts

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்தியா

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

April 13, 2021
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்
செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

April 13, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!

April 13, 2021
இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.
ஆன்மிகம்

இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.

April 13, 2021
பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?
செய்திகள்

பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?

April 12, 2021
தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்
இந்தியா

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

April 12, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

இந்திய வரலாற்றில் முதல் முறையாக… கலவரக்காரர்கள் 6 பேர், கலவரத்தில் தாங்கள் சேதப்படுத்திய உடைமைகளுக்கு இழப்பீடு யோகியிடம் அளித்தனர்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக… கலவரக்காரர்கள் 6 பேர், கலவரத்தில் தாங்கள் சேதப்படுத்திய உடைமைகளுக்கு இழப்பீடு யோகியிடம் அளித்தனர்.

March 19, 2020
சம்பந்தம் இல்லாமல் ஈரோடு ஏன் முடக்கப்பட்டது…

சம்பந்தம் இல்லாமல் ஈரோடு ஏன் முடக்கப்பட்டது…

March 23, 2020

ஊழலின் மறு உருவம் திமுக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அதிரடி.

November 25, 2020
திமுகவுக்கு தோல்வியை அளிக்கும் பிரசாந்த் கிஷோர் !

திமுக கூட்டணியில் உள்ள தொகுதி பங்கீடு பிரச்சினை ஆரம்பம்..

January 7, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!
  • கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
  • இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In