Monday, March 8, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மோடியரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கைவழி வேளாண்மை பொருட்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

Oredesam by Oredesam
October 3, 2020
in இந்தியா, செய்திகள்
0
மோடியரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கைவழி வேளாண்மை பொருட்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.
1.5k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

கோவிட் 19 பொது ஊரடங்கானது உள்ளூர் அளவில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.  வேளாண்மை துறை உள்ளிட்ட உள்ளூர் அளவிலான உற்பத்திக்கு சுயசார்பு கொண்ட ஆத்ம நிர்பார் இந்தியா ஊக்குவிக்கிறது என்று பேசியதுடன் உள்ளூருக்கு குரல் கொடுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்தார். செப்டம்பர் மாதத்தை ஊட்ட சத்து மாதம்-போஷன் மா என கடைபிடித்தோம்.  நுண்ணூட்ட சத்து தாவரங்களுடன் கூடிய சமையலறை தோட்டத்தை பிரபலமடையச் செய்யும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இயற்கை முறையிலான காய்கறிகள் மற்றும் இயற்கை பண்ணை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேளாண்மையில் ரசாயனங்கள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிக்காமல் இருப்பதை இயற்கை வழி பண்ணை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் ஆரோக்கியமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதும் மற்றும் எந்தவித உடல்நலக்கோளாறுகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. உலக இயற்கை வழி வேளாண்மை நிலப்பரப்பில் உலக அளவில் இந்தியா 8-வது இடம் வகிக்கிறது. மொத்த உற்பத்தி பொருட்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது.

READ ALSO

15 வயது சிறுவனிடம் காவல் ஆய்வாளர் நடைபெறும் முறையைப் பாருங்கள்

சசிகலா அறிவிப்பு பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா ?

கரும்பு, தானியங்கள்&சிறுதானியங்கள், பருத்தி, பருப்பு வகைகள், நறுமண & மருத்துவ தாவரங்கள், தேயிலை, காஃபி, பழங்கள், மசாலா பொருட்கள், உலர் பழங்கள், காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட  அனைத்து வகையான உணவுப் பொருட்கள் என 2.75 மெட்ரிக் டன் சான்று பெற்ற இயற்கை வழி பொருட்களை கடந்த ஆண்டு இந்தியா உற்பத்தி செய்தது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி அதிகார அமைப்பானது ஏபிஈடிஏ, தேசிய இயற்கை உற்பத்தி திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டமானது சான்றமைப்புக்களுக்கு அங்கீகாரம் அளித்தல், இயற்கை வழி வேளாண்மைக்கான தரநிலைகள்,இயற்கை வழி பண்ணை மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.  கடந்த மார்ச் 31ம் தேதியுடன் இந்த திட்டத்தின் கீழ் 3.67 மில்லியன் ஹெக்டேர் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் விவசாயிகள் இயற்கை வழியில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை ஊக்கத்தொகை வழங்குகிறது. தமிழகத்தில் காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2500 வழங்கப்படுகிறது.

தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், சுரைக்காய், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் விளைவிப்பதற்கு ஊக்கத் தொகை தரப்படுகிறது. திருமதி பத்மா கிரண் என்ற வங்கி அதிகாரி கூறுகையில், தாம் தோட்டப்பணிகளை ரசிப்பதாகவும், சமையலறைத் தோட்டம் தமக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும் கூறினார். பசுமாட்டு சாணத்தை உரமாக உபயோகிப்பதாகவும் மற்றும் எந்தவித ரசாயண உரங்களையோ அல்லது பூச்சிக்கொல்லிகளையோ உபயோகிப்பதில்லை என்று கூறினார்.

தோட்டக்கலைத்துறையில் இருந்து வெண்டைக்காய். பாகற்காய் போன்றவற்றுக்கான விதைகள் பெறுவதாக கூறினார்.  திருமதி அறிவுச்சுடர் கூறுகையில், தமது மாடிப் பகுதியை இயற்கை வழி பண்ணைக்காக உபயோகிப்பதாக கூறினார். தமது வீட்டின் புழக்கடையில் அமைத்துள்ள தோட்டத்தில் சமைப்பதற்கான காய்கறித் தேவைகளைப் பெறுவதாக கூறினார்.

ஸ்ரீரங்கம் மேலூர் பழத்தோட்டத்தில் உள்ள மா விவசாயிகள் உலர்ந்த இலைகள் மற்றும் இயற்கை உரங்களை உபயோகித்து இயற்கை முறையில் மா மரங்களை வளர்த்து வருகின்றனர். தொடர்ந்து வருகை தரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த மாங்காய்களுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகள் விளைவிக்கும் இயற்கை முறையிலான காய்கறிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இலைகாய்கறிகள் குறிப்பாக கீரைகள் மற்றும் பசலைக்கீரை போன்றவற்றை கிராம்பபுறங்களில் இருந்து வரும் பெண்கள் நகர்புறங்களில் விற்பனை செய்கின்றனர்.

கிராமங்களில் வேப்பம் இலைகள் இயற்கை பூச்சிக்கொல்லியாக உபயோகிக்கப்படுகின்றன. மண்ணில் நுண்ணூட்டசத்து அதிமாக உருவாக, மண்புழு உரக்குழிகளை அமைக்க வேளாண்மை துறை ஊக்குவிக்கிறது. இயற்கை வழி பண்ணையில் இருந்து கிடைக்கும் நல்ல பயன் என்பது, நமது வீட்டின் புழக்கடையில் சுகாதாரமான ஆரோக்கியமான உணவு கிடைப்பதாக இருக்கிறது.

கோவிட் 19- பெருந்தொற்று பொது ஊரடங்கின் போது பல நகர் பகுதிகள் காய்கறிப் பற்றாக்குறையை நோக்கிச் சென்றது. திருச்சியில், அருகில் உள்ள கிராமங்களில் தங்கள் நிலங்களில் விளைவித்த புதிய இலை வகைகாய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்தனர். இயற்கை பண்ணை முறை, சமூகத்தின் சுய நோய் எதிர்ப்புத்திறனை வலுப்படுத்த உதவும் நுண்ணூட்ட சத்துகள் மற்றும்இயற்கை உணவை நிச்சயமாக உறுதி செய்கிறது.  பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றில் இருந்து மாசுபடுவதில் இருந்து இயற்கை எனும் தாயை பாதுகாக்கவும் உதவுகிறது.

Tags: Agriculturalagricultureagriculture and organic farmingModi China's problemModiSarkkar2. ModiGovtModisarkkar2.0TamilTamil mediaTAMIL NEWSTamilnaduTamilNews

Related Posts

செய்திகள்

15 வயது சிறுவனிடம் காவல் ஆய்வாளர் நடைபெறும் முறையைப் பாருங்கள்

March 8, 2021
அரசியல்

சசிகலா அறிவிப்பு பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா ?

March 4, 2021
அரசியல்

தி.மு.கவின் கணக்கு சிதறும் சிறிய கட்சிகள் ! ம.தி.மு.க வி.சி.க சசிகலாவிடம் சரணடையுமா!

March 3, 2021
திமுக ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் ஃப்ரீ! நம்மால இந்த வாக்குறுதி மட்டும்தான் குடுக்க முடியும்! வைரலாகும் பேச்சு!
அரசியல்

இதுக்கா திமுக கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை காண ஆவலோடு எதிர்பார்த்திருகின்றது தமிழகம் ?

March 3, 2021
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,
உலகம்

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

March 2, 2021
அரசியல்

ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் மாற்றியமைத்த தமிழக பாஜக இளைஞரணி மாநில மாநாடு !!!

February 24, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

மணல் கடத்துவோருக்கு இனி முன் ஜாமின் கிடையாது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

மணல் கடத்துவோருக்கு இனி முன் ஜாமின் கிடையாது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

September 4, 2020
விருப்பப்படி தீர்ப்பு தரவில்லை என்றால் எதிரி! காங்கிரசை காய்ச்சி எடுத்த ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்!

காங்கிரஸ் லாபிகளை வெளிப்படுத்தி அதிரடி காட்டிய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்!

March 23, 2020
குடும்ப தொழில் செய்யும் சூர்யா கூறும் மனுநீதி என்ன?

குடும்ப தொழில் செய்யும் சூர்யா கூறும் மனுநீதி என்ன?

September 16, 2020

என்னடா இது ஏசுகிருஸ்துக்கு வந்த சோதனை

March 7, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • 15 வயது சிறுவனிடம் காவல் ஆய்வாளர் நடைபெறும் முறையைப் பாருங்கள்
  • சசிகலா அறிவிப்பு பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா ?
  • தி.மு.கவின் கணக்கு சிதறும் சிறிய கட்சிகள் ! ம.தி.மு.க வி.சி.க சசிகலாவிடம் சரணடையுமா!
  • இதுக்கா திமுக கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை காண ஆவலோடு எதிர்பார்த்திருகின்றது தமிழகம் ?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In