Tuesday, April 13, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

உலக அரங்கில் தனி முத்திரையினை வல்லரசு நாடுகளுக்கு இணையாக பதித்து வல்லரசு என நிமிர்ந்து நிற்கின்றது.

Oredesam by Oredesam
January 17, 2021
in இந்தியா, செய்திகள்
0
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
540
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா உலக அரங்கில் தனி முத்திரையினை வல்லரசு நாடுகளுக்கு இணையாக பதித்து வல்லரசு என நிமிர்ந்து நிற்கின்றது

ஆம், கொரோனாவிற்கு தடுப்பூசி என வெகு சில வல்லரசுகளே தயாரித்திருக்கின்றன. சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இந்த மூன்று நாடுகளிடம் மட்டுமே கொரொனாவுக்கான தடுப்பூசி உண்டு

READ ALSO

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

அந்த வரிசையில் இந்தியாவும் இணைந்து அசத்துகின்றது, உலகளவில் மிகபெரிய சாதனையாக இந்தியா கொரோனாவுக்கு தடுப்பு போடுவது உலக அளவில் மிகபெரிய அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் பார்க்கபடுகின்றது

அமெரிக்காவின் பைசர் மருந்து, ரஷ்யாவின் ஸ்புட்னிக் மருந்து, சீனாவின் சின்னபோம் மருந்தினை போல இந்தியாவும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் எனும் இரு மருந்துகளை தயாரித்துவிட்டது

தயாரித்து தன் மக்களுக்கு விநியோகித்து பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கிவிட்டது

40 கோடிக்கும் கீழான மக்கள் தொகையினை கொண்ட அமெரிக்கா தடுமாறிகொண்டிருக்கும் பொழுது, அதே அளவில் பாதி கொண்ட அதாவது சுமார் 15 கோடி மக்களை கொண்ட ரஷ்யாவும் தடுமாறும் பொழுது 120 கோடி மக்களை கொண்ட இந்தியா மிக அழகாக தன் குடிமக்களை காக்க தொடங்கிவிட்டது

சீனாவின் மக்கள் தொகை பெரிது அங்கு சீன தடுப்புமருந்து கொடுக்கபட்டாலும் அதன் தன்மை தெரியவில்லை இன்னொன்று எவ்வளவுபேருக்கு செலுத்தபட்டது எனும் தகவலுமில்லை

அது விற்கபட்ட நாடுகளில் வரவேற்புமில்லை

இந்தியாவின் மருந்து நம்பகமானது என உலக நாடுகள் கருதுகின்றன, வரபோகும் காலங்கள் அதை உறுதிபடுத்தும்

மோடி அரசின் ஆக சிறந்த சாதனை இது, உலகபோர் ஒன்றில் இருந்து மக்களை மீட்ட அதிசயம் இது

வளைகுடாவின் பணக்கார நாடுகள், கிழக்காசியாவின் செல்வ வள நாடுகள் , ஐரோப்பிய நாடுகளெல்லாம் இந்தியாவினை பார்த்து ஏக்க பெருமூச்சு விடுகின்றன. என்ன விலை கொடுத்தாலும் வாங்க தயாராகின்றன‌

ஆனால் எம் மருந்து எம் குடிமக்களுக்கே என இந்தியருக்கு வழங்கி கொண்டிருகின்றது இந்தியா

இதே பாஜக அரசு இல்லாமல் இன்னொரு அரசு அதுவும் கூட்டணி குழப்பங்களில் நிரம்பிய அரசு ஒன்று இந்த கொடுமையான நேரம் அமைந்திருந்தால் என்னாயிருக்கும் தெரியுமா?

கொரோனா மருந்துக்காக வெளிநாட்டிடம் கையேந்தி நிற்போம், இந்தியரை சுரண்டி சம்பாதித்தே வழக்கபட்ட வெள்ளை கோஷ்டி பல மில்லியன் டாலரை சுரண்டி கொண்டு மருந்தை கொடுக்கும்

இன்னும் சேவை என வரும் மிஷனரி கும்பல் ஊசிக்கு மதம்மாற்றும் வேலையினை செவ்வனே செய்யும், அவர்களுக்கும் பாரத ரத்னா விருது கொடுத்து அரசுகள் கவுரவிக்கும்

தனியார் மருத்துவமனைகள் கோடி கோடியாக சம்பாதிக்கும் எட்டா விலையில் தங்கத்துக்கு நிகராக அம்மருந்து விற்கபடும்

உச்சமாக “கொரோனா ஊழல்” என்றொரு மாபெரும் ஊழல் வெடிக்கும் அந்த வழக்கு பல தலைமுறைக்கு நீடிக்கும்

இதை எல்லாம் தனிபெரும் கட்சியாக வந்த மோடி அரசு, தேசபணியில் ஊழல் எனும் பேச்சிக்கே இல்லாமல் தேசபற்று மக்கள் பணி என ஒன்றையே பிராதனமாக கொண்டு செயல்படும் மோடி அரசு தடுத்து மக்களையும் அவர்கள் நலத்தையும் நாட்டையும் நாட்டு பணத்தையும் மீட்டிருகின்றது

இதில் அம்பானி அதானி என யாரும் வரவுமில்லை வரவும் முடியாது

2019 நவம்பரிலே முந்தி கொண்டு இந்தியா மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு 2021 முதல் வாரத்தில் வெற்றிபெற்று இப்பொழுது மக்களுக்கும் தர தொடங்கிவிட்டது.

உலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை காத்திருக்கின்றார் மோடி, ஏதோ ஒரு சக்தி அவரை இரண்டாம் முறையாக அமர்த்தி பெரும் காவலை தேசத்துக்கு கொடுத்திருக்கின்றது

பீகார் தேர்தலில் நிர்மலா சீத்தாராமன் சொன்னான் “மருந்து தயாரானவுடன் மக்களுக்கு இலவசமாக தரப்படும்” என்றார்

அதை ஆளாளுக்கு கேலி பேசினார்கள்

இதோ மருந்து தயாராகி மக்கள் பயன்பாட்டுக்கும் வந்தாயிற்று, கேலி பேசியவன் எவனையும் காணவில்லை, முகத்தையே காட்டமாட்டான்

அன்று தேசமக்கள் ஏற்றிய விளக்கின் மொத்த ஆன்மபலம் இப்பொழுது மாபெரும் விடிவாய் வந்துவிட்டது, உலகம் இந்தியாவினை ஏக்கமாய் நோக்குகின்றது

இந்த மருந்து அம்பானி அதானி டாட்டா என எந்த கனரக தொழிற்சாலையிலும் தயாரிக்கபடவில்லை மாறாக மேக் இன் இந்தியா எனும் திட்டத்தின் மூலம் இந்தியாவில் தயாரிக்கபட்டிருக்கின்றது

ஆம் எல்லா துறை பொருட்களையும் இந்தியாவில் வந்து இந்திய அரசின் அனுமதியுடன் தயாரிக்க மோடி கொடுத்த திட்டமே இந்த மருந்து துறையிலும் இந்த அதி உன்னதமான் உலகம் வியக்கும் வெற்றியினை கொடுத்திருக்கின்றது

பின் தங்கிய தேசம் என்றும் எக்காலமும் ஐரோப்பாவினை நம்பியிருக்க வேண்டிய தேசம் எனும் பிம்பத்தை இந்தியா சுக்கு நூறாக உடைத்து தள்ளியிருக்கின்றது

மாபெரும் சாதனை செய்துவிட்டாலும் இது விஞ்ஞானிகளுக்கான வெற்றி என சொல்லி தன் கடமையினை கொஞ்சமும் கர்வமில்லாமல் தொடர்கின்றார் மோடி

ஆம், தவம் போல் தொடர்கின்றார் அந்த தவமுனி, அந்த பெருமகன் இருக்கும் வரை இந்தியாவுக்கு இனி எந்த பேராபத்தும் வரபோவதில்லை.

தொடரட்டும் அவரின் தவகோலம், செழிக்கட்டும் தேசம்

தேசம் பெருமை கொள்ளும் இத்தருணம், உலக அரங்கில் தன் குடிகளை காத்து இந்தியா மகாபெரிய இடத்தில் நிற்கும் இந்த தருணம் பாரதியின் வரிகளால் அந்த பெருமகனை போற்றுவதே சரியானதாகும், அது ஒன்றே மிக சரியான வரிகள், அதை இந்த பொன்மகனுக்காகவே பாடி வைத்தான் நெல்லை பாரதி

“எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய்
மந்திரியாய்
நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய் ‍ கண்ணன்”

Tags: FakeNewsModisarkkar2.0Narendramodi DinamalarNEWSNEWS TVNEWSNiravModiONLINE TAMIL NEWSonlinetamilnewsTamil naduTODAY NEWSTREND NEWS

Related Posts

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்தியா

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

April 13, 2021
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்
செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

April 13, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!

April 13, 2021
இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.
ஆன்மிகம்

இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.

April 13, 2021
பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?
செய்திகள்

பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?

April 12, 2021
தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்
இந்தியா

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

April 12, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

திருமாவளவன் தொகுதியில் கற்பழிக்கப்பட்ட மாணவி! கற்பழித்தவனை கைது செய்ய கூடாது என விசிக ரகளை! வி.சி.க வின் மனுதர்மம்

திருமாவளவன் தொகுதியில் கற்பழிக்கப்பட்ட மாணவி! கற்பழித்தவனை கைது செய்ய கூடாது என விசிக ரகளை! வி.சி.க வின் மனுதர்மம்

October 27, 2020
தெய்வமாக கருதக்கூடிய சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்தது மிகவும் கண்டனத்துக்குரியது- அர்ஜுன் சம்பத்

தெய்வமாக கருதக்கூடிய சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்தது மிகவும் கண்டனத்துக்குரியது- அர்ஜுன் சம்பத்

May 11, 2020

நிர்பயாவுக்கு இன்று நீதி கிடைத்துள்ளது தாய் ஆஷா தேவி

March 20, 2020

ஜெ பாணியில் பாஜகவின் வானதிசினிவாசன் சொந்த செலவில் பெண் குழந்தை திட்டங்களை துவங்கினார்.

November 16, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!
  • கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
  • இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In