ராஜஸ்தான் சட்டசபைக்கான தேர்தல் வரும் 25ல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் (நவ.,23) முடிவடைய உள்ள நிலையில், தியோகர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாரதிய ஜனதா கட்சியின் பலத்தை அறியாமல் பல பேர் இருக்கின்றனர். மோடியை தவறாக பயன்படுத்தினால் தங்கள் வேலை முடிந்துவிடும் என நினைக்கின்றனர். ஆனால் எங்கள் தொண்டர்கள் ரத்தமும், வியர்வையும் சிந்தி பா.ஜ.,வை உருவாக்கியது அவர்களுக்கு தெரியாது.
எங்கள் மகள்கள், சகோதரிகள், தாய்மார்கள் பா.ஜ., கொடியை உயர்த்திய விதம் பாராட்டுக்குரியது. இதனை ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பார்த்தேன். ராஜஸ்தானில் உள்ள பெண்கள் இவ்வாறு செய்வதை காங்கிரஸ் கட்சியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தற்போதுள்ள அரசு ஆட்சியில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளன. ராஜஸ்தானில் கெலாட் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது. இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















