வேளாண் திட்டத்தை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல பட்டதாரி இளைஞர்கள் ஆர்வம்.
பாஜக விவசாய அணி சார்பாக சேலம் மாவட்டத்தில் மகுடஞ்சாவடி, ஓமலூர்,கொளத்தூர்,எடப்பாடி ஆகிய நான்கு இடங்களில் உழவர் சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த உழவர் சேவை மையத்திற்கு பட்டதாரி இளைஞர்கள்,பெண்கள் ஆர்வமாக பங்கேற்று உழவர்களுக்கு சேவை செய்ய முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ், மாநில துணை தலைவர் திரு.V.P.துரைசாமி,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.K.P.ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு உழவர் சேவை மையத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















