ஸ்டாலினால் 100 நாட்களில் கச்சத் தீவை மீட்டுத் தர முடியுமா? அதிமுக எம்.எல்.ஏ கேள்வி.

மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாஎனது சட்டமன்ற தொகுதியில் சாலைகள் போடப்படவில்லை என பேசிய திமுக எம்.பி கனிமொழி, எந்த இடத்தில் சாலை போடப்படவில்லை என்பதை கூறவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மக்களின் குறைகளை தீர்க்க ஸ்டாலின் 100 நாட்கள் கேட்பதாகவும், ஆனால், அதிமுக ஆட்சியில் ஒரே நாளில் மக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், திமுக ஆட்சியில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என குறிப்பிட்ட ராஜன் செல்லப்பா, கச்சத் தீவை மீட்டுத் தர வேண்டும் என ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் 100 நாட்களில் அவரால் மீட்டுத்தர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

திமுகவினர் பொய்களை மட்டுமே பேசுவது வழக்கமாகி வைத்துள்ளார்.

Exit mobile version