Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

அடேங்கப்பா தலைசுத்துதே 1,250 கோடி வரி ஏய்ப்பு செய்த தி.மு.க.எம்.பி.,ஜெகத்ரட்சகன்..வரியே இவ்ளோனா சொத்து எவ்ளோ இருக்கும்….

Oredesam by Oredesam
October 19, 2023
in செய்திகள், தமிழகம்
0
அடேங்கப்பா தலைசுத்துதே 1,250 கோடி வரி ஏய்ப்பு செய்த தி.மு.க.எம்.பி.,ஜெகத்ரட்சகன்..வரியே இவ்ளோனா சொத்து எவ்ளோ இருக்கும்….
FacebookTwitterWhatsappTelegram

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

திமுக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் அலுவலகம் நிறுவனங்களில் 5 நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த மாதம் இவர்தான் தலைப்புச் செய்தியாக இருந்து வருகிறார். ஏனென்றால் அவரின் சொத்து மதிப்பு அப்படி. சாதாரணமாக தொடங்கிய அரசியல் வாழ்க்கை தற்போது ஆலமரமாக கல்வி தந்தை, தொழிலதிபர்,மத்திய அமைச்சர், என கால் பாதிக்காத இடமில்லை
திமுகவின் முக்கிய புள்ளி இவர்தான்.

அவருக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.அ.தி.முகவில் தொடங்கி பின்னர் கலைஞருக்கு விஸ்வாசியாக அம்பானி அதானி வரிசையில் இருக்கும் திமுக திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர்.

தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சவீதா கல்வி குழுமங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், 1,250 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக கணக்கு காட்டப்பட்டு, வரி ஏய்ப்பு நடந்துள்ள விபரத்தை, வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதாக, போலி கணக்கு காட்டப்பட்ட இருப்பதும் சோதனையில் அம்பலமாகியுள்ளது.

அரக்கோணம் தொகுதி தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான பாரத், பாலாஜி மருத்துவக் கல்லுாரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள்…ஈரோடைச் சேர்ந்த டாக்டர் வீரையனுக்கு சொந்தமான சவீதா கல்வி நிறுவனங்கள், வீடுகள், விடுதிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றில், இம்மாதம் 5ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை ஐந்து நாட்கள் நடந்தது. இதில், கணக்கில் வராத ஆவணங்களும், கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சகம் சார்பில், வருமான வரித்துறை, புதுடில்லியில் இருந்து, சோதனை விபரங்களை செய்திக் குறிப்பாக நேற்று இரவு வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் இரண்டு குழுமங்களில், கடந்த 5ம் தேதி சோதனை நடத்தினர்.

இந்தக் குழுமங்களுக்கு சொந்தமான மருத்துவ கல்வி நிறுவனங்கள், மதுபான ஆலை, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவமனைகள், விடுதிகள் போன்றவற்றில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம், 100 இடங்களில் சோதனை நடந்தது.

இதில், வருமான வரி ஏய்ப்புக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. உதிரியான கணக்கு தாள்கள், டிஜிட்டல் ஆவணங்கள் போன்றவையும் இதில் அடங்கும்.இந்த சோதனையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தி, வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கல்வி கட்டணத்தை கணக்கில் காட்டாமலும், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கியது போன்றும், போலியாக கணக்கு காட்டியது தெரியவந்துள்ளது. மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தில் ஒரு பகுதியை கணக்கில் காட்டவில்லை; மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கியது போன்று போலியாக தயாரிக்கப்பட்ட ரசீதுகளும் ஆதாரங்களாக கிடைத்துள்ளன.

இந்த வகையில், 400 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டாமல் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. கல்வி உதவி தொகை பெயரில், 25 கோடி ரூபாய்க்கு போலி கணக்கு காட்டப்பட்டுஉள்ளது.ஒரு நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், இடைத்தரகர்கள் வாயிலாக மாணவர் சேர்க்கை நடந்ததும், அதற்காக இடைத்தரகர்களுக்கு, 25 கோடி ரூபாய் கமிஷன் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

மதுபான ஆலையில், 500 கோடி ரூபாய் அளவுக்கு போலியாக செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதாவது, மதுபாட்டில்கள், அதற்கான சேர்ப்பு பொருள், கூடுதலாக ஆல்கஹால் போன்றவற்றை வாங்கியதாகவும், போக்குவரத்துக்கு கூடுதல் செலவு செய்ததாகவும், பொய் கணக்கு காட்டப்பட்டு உள்ளது.

இந்த கொள்முதல் மற்றும் செலவுக்கான ‘இன்வாய்ஸ்’ ஆவணமோ, இருப்பு பதிவேடோ இல்லை. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வாயிலாக, கணக்கில் வராத பணத்தை, வேறு வழிகளில் வரவு வைத்து பணமாக்கியிருப்பது தெரிகிறது.

அதாவது, செயல்படாத அல்லது இல்லாத நிறுவனங்கள் பெயரில் காசோலை வழங்கப்பட்டு, அதை முதலீடு என்ற வகையில், வேறு வழியில் மீண்டும் திரும்ப பெற்றதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன.அதேபோல், வியாபார ரீதியாக அனுமதிக்கப்படாத செலவுகளும், வரிக்கணக்கில் காட்டப்பட்டுஉள்ளன.
அறக்கட்டளைகளில் இருந்து, அறங்காவலர்களுக்கான தனிப்பட்ட செலவாகவும், வணிக முதலீடாக வழங்கப்பட்டதாகவும், 300 கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இதில், ஒரு நிறுவனம், ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனம் ஒன்றை வாங்க, அறக்கட்டளை வழியே நிதி பரிவர்த்தனை செய்ததும் தெரிய வந்துள்ளது.இந்த நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், 32 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் வராத ரொக்கப்பணமும், 28 கோடி ரூபாய் அளவுக்கு தங்க கட்டிகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜி வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகளில் சிக்கி, கைதாகி சிறையில் உள்ளார்.

இந்நிலையில், தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகன் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியிருப்பதால், தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பாகிஸ்தானுக்காக இந்தியாவை வேவு பார்த்த தூதரக ஊழியர்கள் அபீத் ஹூசைன், தாஹிர்கான் கைது!

பாகிஸ்தானுக்காக இந்தியாவை வேவு பார்த்த தூதரக ஊழியர்கள் அபீத் ஹூசைன், தாஹிர்கான் கைது!

June 1, 2020
ரயில்வே ஊழியர்கள் ரூ.151 கோடி நிவாரண நிதி!

ரயில்வே ஊழியர்கள் ரூ.151 கோடி நிவாரண நிதி!

March 30, 2020
கூத்தாண்டவர் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தேர்த் திருவிழா.

கூத்தாண்டவர் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தேர்த் திருவிழா.

June 7, 2023

ஆர்எஸ்எஸின் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் அவர்களின் உரையிலிருந்து 5 முக்கிய கருத்துக்கள்.

April 26, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x