Saturday, December 6, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

அடேங்கப்பா தலைசுத்துதே 1,250 கோடி வரி ஏய்ப்பு செய்த தி.மு.க.எம்.பி.,ஜெகத்ரட்சகன்..வரியே இவ்ளோனா சொத்து எவ்ளோ இருக்கும்….

Oredesam by Oredesam
October 19, 2023
in செய்திகள், தமிழகம்
0
அடேங்கப்பா தலைசுத்துதே 1,250 கோடி வரி ஏய்ப்பு செய்த தி.மு.க.எம்.பி.,ஜெகத்ரட்சகன்..வரியே இவ்ளோனா சொத்து எவ்ளோ இருக்கும்….
FacebookTwitterWhatsappTelegram

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

திமுக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் அலுவலகம் நிறுவனங்களில் 5 நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த மாதம் இவர்தான் தலைப்புச் செய்தியாக இருந்து வருகிறார். ஏனென்றால் அவரின் சொத்து மதிப்பு அப்படி. சாதாரணமாக தொடங்கிய அரசியல் வாழ்க்கை தற்போது ஆலமரமாக கல்வி தந்தை, தொழிலதிபர்,மத்திய அமைச்சர், என கால் பாதிக்காத இடமில்லை
திமுகவின் முக்கிய புள்ளி இவர்தான்.

அவருக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.அ.தி.முகவில் தொடங்கி பின்னர் கலைஞருக்கு விஸ்வாசியாக அம்பானி அதானி வரிசையில் இருக்கும் திமுக திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர்.

தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சவீதா கல்வி குழுமங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், 1,250 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக கணக்கு காட்டப்பட்டு, வரி ஏய்ப்பு நடந்துள்ள விபரத்தை, வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதாக, போலி கணக்கு காட்டப்பட்ட இருப்பதும் சோதனையில் அம்பலமாகியுள்ளது.

அரக்கோணம் தொகுதி தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான பாரத், பாலாஜி மருத்துவக் கல்லுாரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள்…ஈரோடைச் சேர்ந்த டாக்டர் வீரையனுக்கு சொந்தமான சவீதா கல்வி நிறுவனங்கள், வீடுகள், விடுதிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றில், இம்மாதம் 5ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை ஐந்து நாட்கள் நடந்தது. இதில், கணக்கில் வராத ஆவணங்களும், கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சகம் சார்பில், வருமான வரித்துறை, புதுடில்லியில் இருந்து, சோதனை விபரங்களை செய்திக் குறிப்பாக நேற்று இரவு வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் இரண்டு குழுமங்களில், கடந்த 5ம் தேதி சோதனை நடத்தினர்.

இந்தக் குழுமங்களுக்கு சொந்தமான மருத்துவ கல்வி நிறுவனங்கள், மதுபான ஆலை, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவமனைகள், விடுதிகள் போன்றவற்றில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம், 100 இடங்களில் சோதனை நடந்தது.

இதில், வருமான வரி ஏய்ப்புக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. உதிரியான கணக்கு தாள்கள், டிஜிட்டல் ஆவணங்கள் போன்றவையும் இதில் அடங்கும்.இந்த சோதனையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தி, வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கல்வி கட்டணத்தை கணக்கில் காட்டாமலும், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கியது போன்றும், போலியாக கணக்கு காட்டியது தெரியவந்துள்ளது. மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தில் ஒரு பகுதியை கணக்கில் காட்டவில்லை; மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கியது போன்று போலியாக தயாரிக்கப்பட்ட ரசீதுகளும் ஆதாரங்களாக கிடைத்துள்ளன.

இந்த வகையில், 400 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டாமல் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. கல்வி உதவி தொகை பெயரில், 25 கோடி ரூபாய்க்கு போலி கணக்கு காட்டப்பட்டுஉள்ளது.ஒரு நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், இடைத்தரகர்கள் வாயிலாக மாணவர் சேர்க்கை நடந்ததும், அதற்காக இடைத்தரகர்களுக்கு, 25 கோடி ரூபாய் கமிஷன் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

மதுபான ஆலையில், 500 கோடி ரூபாய் அளவுக்கு போலியாக செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதாவது, மதுபாட்டில்கள், அதற்கான சேர்ப்பு பொருள், கூடுதலாக ஆல்கஹால் போன்றவற்றை வாங்கியதாகவும், போக்குவரத்துக்கு கூடுதல் செலவு செய்ததாகவும், பொய் கணக்கு காட்டப்பட்டு உள்ளது.

இந்த கொள்முதல் மற்றும் செலவுக்கான ‘இன்வாய்ஸ்’ ஆவணமோ, இருப்பு பதிவேடோ இல்லை. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வாயிலாக, கணக்கில் வராத பணத்தை, வேறு வழிகளில் வரவு வைத்து பணமாக்கியிருப்பது தெரிகிறது.

அதாவது, செயல்படாத அல்லது இல்லாத நிறுவனங்கள் பெயரில் காசோலை வழங்கப்பட்டு, அதை முதலீடு என்ற வகையில், வேறு வழியில் மீண்டும் திரும்ப பெற்றதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன.அதேபோல், வியாபார ரீதியாக அனுமதிக்கப்படாத செலவுகளும், வரிக்கணக்கில் காட்டப்பட்டுஉள்ளன.
அறக்கட்டளைகளில் இருந்து, அறங்காவலர்களுக்கான தனிப்பட்ட செலவாகவும், வணிக முதலீடாக வழங்கப்பட்டதாகவும், 300 கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இதில், ஒரு நிறுவனம், ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனம் ஒன்றை வாங்க, அறக்கட்டளை வழியே நிதி பரிவர்த்தனை செய்ததும் தெரிய வந்துள்ளது.இந்த நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், 32 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் வராத ரொக்கப்பணமும், 28 கோடி ரூபாய் அளவுக்கு தங்க கட்டிகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜி வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகளில் சிக்கி, கைதாகி சிறையில் உள்ளார்.

இந்நிலையில், தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகன் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியிருப்பதால், தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இணைய வர்த்தகம் விவசாயிகளுக்கு சரியான விலையைப் பெற இ-நாம் அதிகாரம் அளிக்கிறது.

இணைய வர்த்தகம் விவசாயிகளுக்கு சரியான விலையைப் பெற இ-நாம் அதிகாரம் அளிக்கிறது.

May 18, 2020

கார்த்திகை மாத பௌர்ணமியில் நமக்கு கிடைக்கப்போகும் பயன்கள் என்ன

November 24, 2020
posco

கடலூரில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை.. அத்து மீறிய காவல்கார அப்பா.. போக்சோவில் கைது

May 5, 2024
நரிக்குறவ பெண் அஸ்வினி

ஸ்டாலின் வீட்டுக்கு வந்து சென்ற பிறகு ரவுடியிசம்! கொலை முயற்சி வழக்கில் நரிக்குறவ பெண் அஸ்வினி கைது!

August 17, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x