Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

4 கோடி ஆட்டைய போட்ட பாதிரியார் ! 50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ! தட்டி தூக்கிய காவல்துறை

Oredesam by Oredesam
September 5, 2020
in செய்திகள், தமிழகம்
0
4 கோடி ஆட்டைய போட்ட பாதிரியார்  ! 50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ! தட்டி தூக்கிய காவல்துறை
FacebookTwitterWhatsappTelegram

சத்தியமூர்த்தி என்பவர் திருச்சி நகரத்தை சேர்ந்தவர். இவர் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். பள்ளியின் பெயர் கமலா நிகேதன் இவர் சில நாட்களுக்கு முன்னர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், சென்னை வேளச்சேரி அட்வென்ட் கிறிஸ்தவ சபையின் பிஷப் ஆக இருக்கும் எஸ்.டி.டேவிட் என்பவர் தனக்கு சென்னையில் கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான ஒரு நிலத்தை பத்திரம் எழுதித்தருவதாக கூறி என்னிடம் ரூ.4 கோடி வாங்கினார். ஆனால் பேச்சுவார்த்தைப்படி அவர் எனக்கு அந்த நிலத்தை கிரயம் செய்து கொடுக்கவில்லை. இதுபற்றி நான் கேட்டபோது இழுத்தடித்து வந்துள்ளார். பணத்தையும் திரும்ப தரவில்லை. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நிலத்தை விற்பதற்காக ரூ. 3.75 கோடி மோசடி செய்த சென்னை அட்வென்ட் சர்ச் பிஷப்பை, திருச்சி போலீஸ் கைது செய்தது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் அட்வென்ட் சர்ச் அமைப்பு இயங்கிவருகிறது. இந்த அமைப்புக்குச் சொந்தமாக ஏராளமான பள்ளிகள் மற்றும் சர்ச்கள் உள்ளன.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

இதன் சென்னை மாவட்ட பிஷப்-ஆக இருப்பவர் டேவிட். இவருடைய கட்டுப்பாட்டில் 107 சர்ச்கள், 50 பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவை தவிர திருப்போரூர் பகுதியில் இயங்கிவரும் அட்வென்ட் பள்ளிகளுக்குத் தாளாளராகவும் இருந்துவருகிறார் டேவிட்.அட்வென்ட் சர்ச்சுக்குச் சொந்தமான இடம் ஒன்று வேளச்சேரியில் இருக்கிறது. இதன் மதிப்பு 50 கோடி ரூபாய். இந்த நிலத்தைத் திருச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்வதாகக் கூறி ரூ. 3.75 கோடியை முன்பணம் வாங்கியிருக்கிறார் டேவிட்.

அந்தப் பணத்தை சர்ச் வங்கிக் கணக்கில் போடாமல், இன்னொருவருடைய கணக்கை போலியாகத் தொடங்கி, பிஷப் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதன் பின்னர் நிலத்தையும் அவர் விற்பனை செய்யவில்லை. மேலும், அவரின் பிஷப் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டது.தற்போது அவர் பணி நீட்டிப்பில் இருந்துவருகிறார்.

அவரின் பணி நீட்டிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவருகிறது. இந்த நிலையில் அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து, திருச்சி மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் சம்மந்தப்பட்ட நபர் புகார் செய்திருக்கிறார். அந்தப் புகாரை தொடர்ந்து திருச்சி போலீஸார் பிஷப் டேவிட்டை சென்னையில் கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்து விசாரித்துவருகின்றனர்.


அட்வென்ட் சர்ச் பொருளாளர் பன்னீர்செல்வம், செயலாளர் ஸ்டீபன், புரோக்கர் நெல்லை சாமுவேல் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்க வேண்டும்- பிரதமர்

கொரோனவை பற்றி சிந்தியுங்கள்! பிரதமர் சொன்னதை செய்யுங்கள்! எதற்காக 21 நாட்கள் ஊரடங்கு !

March 25, 2020
தமிழகத்திற்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.183.67 கோடி விநியோகம்.

தமிழகத்திற்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.183.67 கோடி விநியோகம்.

August 10, 2021
பங்குனி உத்திரத்தன்று,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு-தேதி மாற்றி அறிவிக்க இந்துக்கு முன்னணி கோரிக்கை

பங்குனி உத்திரத்தன்று,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு-தேதி மாற்றி அறிவிக்க இந்துக்கு முன்னணி கோரிக்கை

March 25, 2025
SENTHIL-BALAJI

செந்தில் பாலாஜி அரசியலுக்கு உலை வைத்த நீதிபதி ! அமைச்சர் பதவி அம்போ! செந்தில் பாலாஜி வக்கீல்களை ஓடவிட்ட நீதிமன்றம்.. !

April 26, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x