பா.ஜ.க தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மாநிலத்தின் கிராமம் தான், உலகின் நம்பர் ஒன் பணக்கார கிராமம்! 5000 கோடி டெபாசிட்!

பாஜக தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மாநிலத்தின் கிராமம்தான்,
உலகின் நம்பர் ஒன் பணக்கார கிராமம்.

பா.ஜ.க ஆளும் 22 ஆண்டுகளாக ஆண்டு வரும் குஜராத் மாநிலதத்தில் உள்ள ஒரு கிராமம் தான் இந்த மதபார் கிராமம்.குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. கிராமம் முழுவதும் பசுமையாக தோற்றமளிக்கும். விவசாயம் தான் இவர்களின் முக்கிய தொழில்.

உலகில் உள்ள கிராமங்களில் குஜராத்தில் உள்ள மதாபர் கிராமம் உலகின் பணக்கார கிராமமாக உருவெடுத்துள்ளது. 43.67 கி,மீ சுற்றளவு கொண்ட இந்த பணக்கார கிராமத்தில் 7600 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

மதபார் கிராமம் மிகவும் வசதி படைத்த கிராமமாக இருக்கிறது. இந்த கிராமத்தில் உள்ள 7,600 வீடுகளுக்கு . 17 க்கும் மேற்பட்ட வங்கிகளில் உள்ளது. ஆம் மற்ற நகரமோ அல்லது கிராமத்தில் ஒரு வங்கியில் 10000 கணக்குகள் இருக்கும். ஆனால் இங்கு 7600 வீடுகளுக்கு தெருக்கு தெருக்கு வங்கிகள் உள்ளது.

இங்கு வாழ்ந்து வரும் கிராம மக்கள் வங்கிகளில் ரூ.5 ஆயிரம் கோடி டெபாசிட் செய்துள்ளனர். வெளிநாடுகளில் பதுக்கவில்லை முறையாக இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள். முறையான கணக்கை காட்டுகிறார்கள். தமிழக நடிகர் போல் இல்லாமல் முறையாக வரி காட்டுகிறார்கள்.

சராசரியாக 447 குடும்பங்களுக்கு 1 வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கிகளில் மொத்தம் இந்த கிராம மக்கள் மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாயை சேமித்து வைத்து இருக்கிறார்கள். ஆம் இந்த 7600 குடும்பங்களின் மொத்த சேமிப்பு மட்டும் 5000 கோடி ரூபாய். சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் 65 லட்சம் ரூபாய் வரை வங்கியில் சேமித்து வைத்து இருக்கிறது. இது சராசரி கணக்குதான். சில குடும்பங்கள் குறைவாகவும், சில குடும்பங்கள் 1 கோடிக்கு அதிகமாகவும் வங்கியில் சேமித்து வைத்து இருக்கிறார்கள்.

இந்தியாவை பொறுத்த வரை முக்கிய நகர மக்கள் தான் மிகப்பெரிய செல்வேந்தர்களாக இருப்பது வழக்கம். குஜராத்தில் கிராமத்தின் செல்வந்தர்களாக உள்ளனர். இங்கு 17 பொது வங்கிகள் மட்டுமல்ல, தனியார் வங்கிகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மாதபர் கிராமத்தில் பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார மையங்கள், கோவில்கள், அணைகள், பசுமை மற்றும் ஏரிகள் உள்ளன. இவை அனைத்தையும் தவிர நவீன வசதிகளைக் கொண்ட கோசாலையும் (state-of-the-art gaushala) உள்ளது.

முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் மதாபர் கிராமத்தில் மக்களின் முக்கிய தொழில் கட்டுமான துறை, டைல்ஸ் பதிப்பது போன்ற இன்டிரியர் வேலைகள்தான். இந்தியாவிலேயே.. ஏன் உலகிலேயே இதுதான் பணக்கார கிராமம். வங்கியில் மக்கள் வைத்து இருக்கும் பண இருப்பு அடிப்படையில் இந்த கிராமத்தை பணக்கார கிராமம் என்று வரையறுக்கிறார்கள்.

இந்த கிராமம் இந்தியாவின் மற்ற கிராமங்களிலிருந்து எப்படி வேறுபடுகிறது?., ஏனென்றால், பெரும்பாலான கிராமத்து வீட்டு உறுப்பினர்களும் அவர்களது உறவினர்களும் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர். இதனால் கிராமத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற அனைவரும் ஒரு கணிசமான தொகையை மாதப்பரில் தங்கியிருக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அனுப்புகிறார்கள்

குடியிருப்பு அல்லாத இந்தியர்களில் பலர் (என்ஆர்ஐ) வெளிநாடுகளில் பெரும் தொகையை சம்பாதித்து நாடு திரும்பினர். அவர்கள், வெளிநாட்டில் பணம் சம்பாதித்து இக்கிராமத்தில் சொந்தத் தொழிலும் செய்கின்றனர். மதாபர் கிராமம் சங்கம் என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பு லண்டனில் 1968 இல் நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கம் வெளிநாட்டில் வசிக்கும் மதாப்பரைச் சேர்ந்தவர்களின் சந்திப்பை எளிதாக்குவதாகும் என கருதப்படுகிறது.

கிராம மக்களிடையே மென்மையான இணைப்பை ஏற்படுத்துவதற்காக, இதே நோக்கத்துடன் அந்த கிராமத்திலும் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டது. கிராமவாசிகள் வெளிநாட்டில் வாழ்ந்து, வேலை செய்தாலும், அவர்கள் எப்போதும் தங்கள் வேர்களை மத்தாப்பரின் மண்ணில் ஆழமாகப் பதித்து வைத்திருக்கிறார்கள். இதில் சொந்த தொழில்களும் செய்து வருகிறார்கள்.

மேலும், அவர்கள் இப்போது வசிக்கும் நாட்டிற்கு பதிலாக, தங்கள் கிராமத்தின் வங்கிகளில் தங்கள் பணத்தை சேமிக்க விரும்புகிறார்கள். கிராமத்தின் முக்கிய தொழில் இன்னும் விவசாயம், மற்றும் உற்பத்தி மும்பைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது.

எப்படி வருமானம் ஈட்டுவது.. அதை எப்படி சேமித்து பொருளாதாரத்தை பெருக்குவது.. சிறிய வருமானத்தை கூட எப்படி முதலீடாக மாற்றுவது என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக இந்த கிராமம் உருவெடுத்துள்ளது. காரணம்..?நரேந்திர மோடி 13 ஆண்டுகள் முதல்வராகவும், அதைதொடர்ந்து பிஜேபி ஆட்சியில் இருப்பதாலும்தான்.

அதிலும் 5000 கோடி சேமிப்பு எல்லாம் கொஞ்சம் கூட நினைத்து பார்க்க முடியாத ஒன்று. உலக பொருளாதார வல்லுநர்களுக்கு.. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், குஜராத்தில் இருக்கும் மதாபர் கிராமம் ரோல் மாடலாக உருவெடுத்துள்ளது.

Exit mobile version