Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

6,000 என்.ஜி.ஓ.க்களின் உரிமம் ரத்து…அமித் ஷாவின் அதிரடி சம்பவம்…புலம்பும் மிஷினரிகள்…

Oredesam by Oredesam
January 2, 2022
in இந்தியா, செய்திகள், தமிழகம்
0
6,000 என்.ஜி.ஓ.க்களின் உரிமம் ரத்து…அமித் ஷாவின் அதிரடி சம்பவம்…புலம்பும் மிஷினரிகள்…
FacebookTwitterWhatsappTelegram

மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்த வெளிநாட்டு நன்கொடை சட்ட (FCRA 2020) திருத்தங்களை எதிர்த்து பல என்.ஜி.ஓக்கள் நீதிமன்றம் நாடியிருந்தார்கள். அந்த வழக்கு விசாரணையின் போது, “வெளிநாட்டு நன்கொடை என்பது என்.ஜி.ஓக்களின் அடிப்படை உரிமை கிடையாது. சட்டத்துக்கு பணிந்தால் மட்டுமே நன்கொடை பெறலாம்” என்று மத்திய அரசு காரசாரமாக வாதம் செய்ய, உச்சநீதிமன்றமும், “எந்த நோக்கத்துக்காக நன்கொடை வாங்குகிறோம் போன்ற விவரங்கள் தராத என்.ஜி.ஓக்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெற முடியாது” என தொண்டு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் புதுடில்லி-ஜாமியா மிலியா இஸ்லாமியா, இந்திய மருத்துவ சங்கம், நேரு நினைவு அருங்காட்சியகம் உட்பட 6,000 அமைப்புகள் மற்றும் என்.ஜி.ஓ.,க்கள் எனப்படும், அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் எப்.சி.ஆர்.ஏ., உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

இந்த நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்காததால் ரத்து செய்யப்பட்டதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டில் இயங்கும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளை பெற, எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.

மேலும் புதிப்பிக்காத தொண்டுநிறுவங்கள் ஏன் புதுப்பிக்கவில்லை. என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து விசாரணை மேற்கொண்டு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள அமித் ஷா ஆலோசித்து வருகிறார்.

அன்னை தெரசாவின் ‘மிஷினரி ஆப் சாரீட்டீஸ்’ என்ற அறக்கட்டளையின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ‘கிறிஸ்துவர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. அன்னை தெரசாவின் தியாகம் மற்றும் தொண்டுக்கு செய்யப்பட்ட அவமரியாதை’ என, எதிர்க்கட்சிகள் கூக்குரலிட்டன. இது பற்றி மிஷினரி ஆப் சாரிட்டீஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:எப்.சி.ஆர்.ஏ., உரிமத்தை புதுப்பிக்க கோரி நாங்கள் கொடுத்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. அதனால் தான் எங்கள் வங்கி கணக்குகளை முடக்கி வைக்கும்படி ஸ்டேட் வங்கிக்கு கோரிக்கை விடுத்தோம். அதையேற்று வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகையில், ‘பதிவு உரிமத்தை புதுப்பிக்கக் கோரி மிஷினரி ஆப் சாரீட்டீஸ் கொடுத்த மனுவில் சில தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் மனு நிராரிக்கப்பட்டது’ என, தெரிவிக்கப்பட்டது.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நாடு முழுதும், 6,000 என்.ஜி.ஓ.,க்களின் எப்.சி.ஆர்.ஏ., உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: நாட்டில் 22 ஆயிரத்து 762 என்.ஜி.ஓ.,க்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் எப்.சி.ஆர்.ஏ., உரிமம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்து விட்டது.எப்.சி.ஆர்.ஏ., உரிமத்தை டிசம்பர் 31க்குள் புதுப்பிக்கக்கோரி, அரசு சாரா அமைப்புகள் மற்றும் இந்த நிறுவனங்களுக்கு பல முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனாலும் பலரும் விண்ணப்பிக்கவில்லை.

அதனால் ஜாமியா மிலியா இஸ்லாமியா, இந்திய மருத்துவ சங்கம், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் உட்பட 5,933 அமைப்புகள் மற்றும் என்.ஜி.ஓ.,க்களின் எப்.சி.ஆர்.ஏ., உரிமம் காலாவதியாகி விட்டன. இந்த நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் தற்போது எப்.சி.ஆர்.ஏ., கீழ் பதிவு செய்யப்பட்டு உரிமம் பெற்றுள்ள என்.ஜி.ஓ.,க்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 829 ஆக குறைந்துள்ளது.இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எப்.சி.ஆர்.ஏ., உரிமம் ரத்து செய்யப்பட்ட என்.ஜி.ஓ.,க்களில் இமானுவேல் மருத்துவ சங்கம், இந்திய காசநோய் சங்கம், மகரிஷி ஆயுர்வேத பிரதிஷ்டாதன், பாரதிய சம்ஸ்கிருத பரிஷத், டி.ஏ.வி., கல்லுாரி அறக்கட்டளை, இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. டில்லி ஐ.ஐ.டி.,யின் எப்.சி.ஆர்.ஏ., உரிமமும் காலாவதியாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிப்பிக்காத தொண்டுநிறுவங்கள் ஏன் புதுப்பிக்கவில்லை. என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து விசாரணை மேற்கொண்டு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள அமித் ஷா ஆலோசித்து வருகிறார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

முதல்வா் ஸ்டாலின் வீட்டின் எதிரே பறையா் பேரவைத் தலைவா் தீக்குளிப்பு! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! வாய் திறக்காத ஊடகங்கள்!

முதல்வா் ஸ்டாலின் வீட்டின் எதிரே பறையா் பேரவைத் தலைவா் தீக்குளிப்பு! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! வாய் திறக்காத ஊடகங்கள்!

October 5, 2021
1 கோடிக்கும் அதிகமான விமானப் பயணிகள் பயன் பெற்ற மத்திய அரசு புதுதிட்டம்….

1 கோடிக்கும் அதிகமான விமானப் பயணிகள் பயன் பெற்ற மத்திய அரசு புதுதிட்டம்….

July 27, 2022
தமிழக மக்களுக்கு ஷாக் மேல் ஷாக்!  நீட் பிரச்னை முடியவில்லை அதற்குள் மின்கட்டண பிரச்சனை!  விழிபிதுங்கும் திமுக!

தி.மு.க-வில் ‘சமூகநீதி’ எப்போது கடைபிடிக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே??

September 6, 2021
அச்சரப்பாக்கம் மலையில்  பசுபதீஸ்வரர் ஆலயம் இடித்து சர்ச்சு…..

அச்சரப்பாக்கம் மலையில் பசுபதீஸ்வரர் ஆலயம் இடித்து சர்ச்சு…..

March 11, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x