403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எ ஐ எம் ஐ எம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கி உள்ளன.
பா.ஜ.க இன்று தனது தேர்தல் அறிக்கை ‘லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா’வை வரவிருக்கும் உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில பிரிவு தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் ஆகியோர் சேர்ந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
முன்னதாக பிப்ரவரி 6 அன்று தேர்தல் அறிக்கை வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் அன்றைய தினம் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவினால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள சில முக்கிய அறிவிப்புகள்:
-அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.
-மாநிலத்தில் 6 மெகா உணவுப் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
-ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு ₹1 லட்சம் வரை நிதியுதவி.
-மாநிலத்தில் 30,000 மேல்நிலைப் பள்ளிகள் நவீனமயமாக்கபடும்.
-பொது போக்குவரத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு இலவச பயணம்.
மேலும் இது போன்ற இன்னும் பல அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். ‘லோக் கல்யான் சங்கல்ப் பத்ரா’ என்று அழைக்கப்படும் அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வறுமாறு;-
* லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு பத்தாண்டு தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்
* அடுத்த ஐந்தாண்டுகளில் விவசாயிகளுக்கு பாசனத்திற்கு இலவச மின்சாரம்
* விவசாயிகளுக்கு 14 நாட்களில் கரும்புத் தொகை வழங்கப்படாவிட்டால், சர்க்கரை ஆலைகள் வட்டியுடன் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும்.
* மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த உள்கட்டமைப்புடன் கூடிய அரசு மருத்துவமனை கட்டப்படும்
* அடுத்த 5 ஆண்டுகளில், கோதுமை மற்றும் நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உறுதிப்படுத்தப்படும்
* திறமையான மாணவிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற, ராணி லக்ஷ்மிபாய் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும்.
* சுவாமி விவேகானந்த் யுவ ஷசக்திகரன் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு கோடி டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும்.
* மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்
* ஹோலி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு 2 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்
* 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பஸ் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்
* மீரட், ராம்பூர், கான்பூர் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு கமாண்டோ படைகள் அமைக்கப்படும்.
மேற்கண்ட முக்கிய அம்சங்கள், உத்தர பிரதேச தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















