அமெரிக்கா, எகிப்து நாடுகளில் அரசு முறை பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பிய நிலையில், இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவு உலகிற்கு நன்மை பயக்கும் என சமூகவலைத்தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தன் மூன்று நாள் அரசு முறைப்பயணத்தை முடித்துக் கொண்டு, இரு நாள் அரசு முறைப் பயணமாக எகிப்து சென்றார். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று(ஜூன்26) புதுடில்லி விமான நிலையம் வந்தடைந்தார். நாடு திரும்பிய பிரதமர் மோடியை பா.ஜ., தலைவர் நட்டா உள்ளிட்ட எம்.பி.,க்கள் வரவேற்றனர்.
இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவு உலகிற்கு நன்மை பயக்கும். அமெரிக்காவில் தான் மேற்கொண்ட சுற்றுப்பயணம் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















