Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு அடித்து நொறுக்கும் அமலாக்கத்துறை! அடுத்த ரெய்டுக்கு ரெடி ! பீதியில் பினாமிகள் !

Oredesam by Oredesam
August 6, 2023
in செய்திகள், தமிழகம்
0
செந்தில் பாலாஜி வழக்கு அடித்து நொறுக்கும் அமலாக்கத்துறை! அடுத்த ரெய்டுக்கு ரெடி ! பீதியில் பினாமிகள் !
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜி வழக்கு அடித்து நொறுக்கும் அமலாக்கத்துறை! அடுத்த ரெய்டுக்கு ரெடி! பீதியில் பினாமிகள்!

அமலாக்க துறையினால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகள் மற்றும் அலுவலங்களில் மூன்று நாட்களாக அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. சோதனையின் முடிவில் செந்தில் பாலாஜி தொடர்புடைய 60 நில ஆவணங்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். 16.6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளார்கள். மேலும் திமுக அமைச்சர் செந்திலை பாலாஜி யின் நண்பர் பல முக்கிய ஆவணங்களை, மறைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.அமலாக்க துறை.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக 81 பேரிடம் ரூபாய் 1.62 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில், அமலாக்கத் துறை விசாரணை தீவிரம் பெற்றுள்ளது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் செந்தில் பாலாஜி வழக்கில் பல திருப்பங்கள் நடந்துள்ளது. விசாரணை தோண்ட தோண்ட கணக்கில் வராத பல கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் , திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் தெற்கு தி.மு.க., ஒன்றிய செயலருமான சாமிநாதனிடம், சட்டவிரோத வருமானத்திற்கான ஆவணங்கள் இருப்பதும், அவற்றை மறைக்க முயன்றதையும், அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து மீண்டும் அதிரடியில் இறங்கியது அமலாக்கத்துறை. கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனம். சின்ன ஆண்டாங்கோவிலில் உள்ள கிரானைட் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் வீடு, அவரது நிறுவனம்; கோவை ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் முத்துபாலன் வீடு. ஒன்றிய செயலர் சாமிநாதன் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட ஒன்பது இடங்களில், அமலாக்கத் துறையினர் கடந்த 3ம் தேதி முதல் சோதனை நடத்தினர்.நேற்று பிற்பகல் வரை நீடித்த இந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

செந்தில்பாலாஜியின் யார்யாருக்கெல்லாம் பணம் கொடுத்துள்ளார் வெளிநாடுகளில் முதலீடு திமுகவின் முக்கிய புள்ளிகளிடம் பணப்பரிமாற்றம் குறித்த ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக அமலாக்கத்துறை. வட்டரங்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக செந்தில் பாலாஜியிடம் பணம் பணப்பரிமாற்றம் செய்தவர்களிடம் விசாரணையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது அமலாக்கத்துறை.

இது தொடர்பாக, அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய ஒன்பது இடங்களில், சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, அவரது நெருங்கிய நண்பர் சாமிநாதன், ஆவணங்களை மறைக்க முயற்சி செய்தார். ஆவணங்கள் இருந்த பையை, சாமிநாதனின் உறவினர் சாந்தி எடுத்து சென்றார்.

பின், அந்த பையை, ஓட்டுனர் சிவாவிடம் கொடுத்ததும், ‘சிசிடிவி’ கேமரா வாயிலாக தெரியவந்தது.
ஓட்டுனர் சிவா வீட்டில் சோதனை நடத்தியபோது, அவர் தலைமறைவாகி விட்டார். அவரது மொபைல் போன், ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.சாமிநாதனின் உறவினர் சாந்தி மற்றும் ஓட்டுனர் சிவா வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய் ரொக்கம்; 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், 60 நில ஆவணங்களும் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.

இல்லத்தரசியான சாந்தி, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை; அவரிடம் வருமானத்திற்கான ஆதாரங்களும் இல்லை; அதே நேரம், சாமிநாதனின் பினாமியாக செயல்பட்டுள்ளார். தொடர்ந்து, சாந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட பணம், பொருட்கள், நில ஆவணங்கள் அனைத்தும், செந்தில் பாலாஜியின் கூட்டாளியான சாமிநாதனுக்கு சொந்தமானவை என தெரிய வந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சோதனையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான வலுவான ஆதாரங்களை, அமலாக்கத் துறையினர் கைப்பற்றி உள்ளனர். இதன் வாயிலாக, அவரது கூட்டாளிகள், உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோர் கைது செய்யப்படுவர் என தெரிகிறது. இந்த ஆதாரங்கள், செந்தில் பாலாஜி வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என, அமலாக்கத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி தொடர்புடைய ஒன்பது இடங்களில் சோதனை நடத்தியது குறித்து, அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சட்டசபை உறுப்பினர் செந்தில் பாலாஜி’ என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. அமைச்சர் என்ற வார்த்தையை அமலாக்கத் துறை தவிர்த்து உள்ளது.

இரண்டாம் கட்ட சோதனை நிறைவு செந்தில் பாலாஜி, அசோக்குமார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் தலா இரண்டு கட்டமாக சோதனை நடத்தியுள்ளனர். மூன்றாம் கட்ட சோதனையும் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம், பொத்தனுாரைச் சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் காளியப்பன், 70, வீடு, ‘டயர்’ நிறுவனங்கள் மற்றும் அவரது மகள் பிரியங்காவிடம், மூன்று நாட்களாக, நேற்று முன்தினம் நள்ளிரவு 2:00 மணி வரை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்களின் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளி பொருட்கள், கணக்கில் வராத ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அடுத்த கட்ட விசாரணை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பிரதமர் மோடியுடன் கை கோர்ப்போம் கேரளா முதல்வர் பினராயி விஜயன் !

பிரதமர் மோடியுடன் கை கோர்ப்போம் கேரளா முதல்வர் பினராயி விஜயன் !

March 21, 2020
RNRAVI

ஆளுநர் ரவி போட்ட போடு… தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் 40% அதிகரிப்பு…கதிகலங்கிய சமூக நீதி கட்சிகள்..

October 3, 2024
மோடி பிரதமராக பதவியேற்ற தினத்தில் ராமர் கோவிலுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன!

மோடி சர்க்கார் 2.0 வில் ஓராண்டில் சாதித்தது என்ன? ராமர் கோவில் முதல் முத்தலாக் வரை சொன்னதை செய்தது !

May 30, 2020
திமுக ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் ஃப்ரீ! நம்மால இந்த வாக்குறுதி மட்டும்தான் குடுக்க முடியும்! வைரலாகும் பேச்சு!

கிருஸ்த்தவர்கள் வக்பு சட்ட திருத்தத்திற்கு ஆதரவு.. அடிபணிந்த கம்யூனிஸ்ட் .. முதல் மாநிலமாக வக்பு சட்டத்தை பயன்படுத்தும் கேரளா..ஸ்டாலினுக்கு விழுந்த ஆப்பு..

April 9, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x