Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! மூன்று சட்டங்களில் திருத்தம்! மூன்று ஆண்டுகளில் தண்டனை!

Oredesam by Oredesam
August 12, 2023
in அரசியல், இந்தியா, செய்திகள்
0
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! மூன்று சட்டங்களில் திருத்தம்! மூன்று ஆண்டுகளில் தண்டனை!
FacebookTwitterWhatsappTelegram

பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களை திருத்தும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றைய தினம் மூன்று மசோதாக்களை, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் குற்றவியல் நீதி அமைப்பில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட மூன்று மசோதாக்களும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எந்த மூன்று சட்டங்களில் திருத்தம் :
ஐ.பி.சி., எனப்படும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டம்,
சி.ஆர்.பி.சி. எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம்,
ஐ.இ.சி. எனப்படும் இந்திய சாட்சிகள் சட்டம்

READ ALSO

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

பழைய சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களின் பெயர் :
பாரதீய நியாய சன்ஹிதா எனப்படும் இந்திய நீதித்துறை சட்ட மசோதா;
பாரதீய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா எனப்படும் இந்திய மக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா;
பாரதீய சாக்ஷ்யா எனப்படும் இந்திய சாட்சிகள் மசோதா

இது குறித்து மக்களவையில் உள்துறை அமைச்சர் பேசியதாவது :

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மசோதாக்கள் தற்போது நடைமுறையில் உள்ள இந்திய குற்றவியல் நீதி முறையில் மிகப் பெரியமாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் நீதி விரைவாக கிடைக்கும் வகையில் வழிவகைசெய்யப்பட்டுள்ளது . இந்த புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், குற்றவியல் நீதி அமைப்பு புத்துயிர் பெறும். வழக்குகளில் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் அனைவருக்கும் நீதி கிடைக்கும்.

இந்திய நீதித்துறை சட்ட மசோதாவில், தேச துரோக சட்டத்தை ரத்து செய்யும் விதிகள் உள்ளன. கும்பல் படுகொலைகள், சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுத் தரவும் இம்மசோதா வழி செய்கிறது.இந்த மசோதாக்கள், நம் குற்றவியல் நீதி அமைப்பில் மிகப் பெரிய சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் என்பதை இந்த சபையில் என்னால் உறுதிபட கூற முடியும்.

இந்தியாவை அடிமைப்படுத்தவும், தங்கள் ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவுமே ஆங்கிலேயர்கள் குற்றவியல் தண்டனை சட்டங்களை கொண்டு வந்தனர். அதை தான் நாம் இன்று வரை பின்பற்றி வருகிறோம். ஆனால், இந்த புதிய மசோதாக்களின் நோக்கம் தண்டனை வழங்குவதல்ல; நீதி வழங்குவதையே நோக்கமாக வைத்து இயற்றப்பட்டுள்ளது.

பழைய சட்டங்களை மாற்றி, இந்த மூன்று புதிய மசோதாக்களை நிறைவேற்றுவதன் வாயிலாக, நம் மக்களின் உரிமை பாதுகாக்கப்படும்.

இந்திய ஜனநாயகத்தின் 70 ஆண்டு கால அனுபவத்தில், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட நம் குற்றவியல் சட்டங்களை விரிவாக மறு ஆய்வு செய்து, மக்களின் சமகாலத் தேவைகளுக்கு ஏற்ப மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

  • இந்த புதிய சட்டங்களின்படி, வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். நிலைமைக்கு ஏற்ப, கால அவகாசத்தை மேலும், 90 நாட்களுக்கு நீதிமன்றம் நீட்டிக்கலாம். போலீஸ் விசாரணை, 180 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணையை துவங்க வேண்டும். விசாரணை முடிந்து, 30 நாட்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
  • திருமணம், வேலை, பதவி உயர்வு போன்ற காரணங்களுக்காக அல்லது அடையாளத்தை மறைத்து, பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது குற்றமாக கருதப்படும்.
  • கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு, 20 ஆண்டுகள் சிறை முதல், ஆயுள் தண்டனை வரை விதிக்க, இந்த சட்டங்கள் வழி செய்கின்றன. அதுவே, சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், மரண தண்டனை விதிக்கவும் விதிகள் உள்ளன.
  • கும்பல் படுகொலைகளுக்கு, ஏழு ஆண்டு முதல், ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை வரை விதிக்க வழி உள்ளது.
  • இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை உள்ளது. எனவே, தேச துரோக சட்டம் முற்றிலுமாக நீக்கப்படும்.
  • பயங்கரவாதம் என்பது, முதல் முறையாக சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் இணையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாதியின் சொத்துக்களை முடக்க, இந்திய நீதித்துறை சட்ட மசோதா வழி செய்கிறது.
  • அரசு வழங்கும் தண்டனை தள்ளுபடியை, அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மட்டுமே மாற்ற முடியும் என்றும், ஆயுள் தண்டனையை ஏழு ஆண்டுகளுக்குள் மட்டுமே குறைக்க முடியும் என்றும், புதிய விதிகள் இயற்றப்பட்டுள்ளன.
  • வழக்குகளில் தண்டனையை அதிகரிக்க, தடயவியல் அறிவியலை பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தண்டனை விகிதத்தை 90 சதவீதம் ஆக்குவதே இந்த மசோதாக்களின் நோக்கம்.இந்த மூன்று புதிய மசோதாக்களை, உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்படி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைக்கிறேன்.இவ்வாறு அமித் ஷா பேசினார்.
ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அண்ணாமலை

உண்மையை சொன்ன கார்த்திக் சிதம்பரத்திற்கு நோட்டீஸா.. களமிறங்கிய அண்ணாமலை…. செம்ம ட்விஸ்ட்..

January 12, 2024
மர்ம நபர்கள் அட்டூழியம் 22 சுவாமி சிலைகள் உடைப்பு.

மர்ம நபர்கள் அட்டூழியம் 22 சுவாமி சிலைகள் உடைப்பு.

June 22, 2022
இதுவரை இல்லாத அளவிற்கு  மோடி அரசு தமிழகத்திற்கு  சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு ரூ.478 கோடி ஒதுக்கீடு.

இதுவரை இல்லாத அளவிற்கு மோடி அரசு தமிழகத்திற்கு சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு ரூ.478 கோடி ஒதுக்கீடு.

June 10, 2020
நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!

திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி !

November 28, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x