Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

எண் மண் எண் மக்கள் நிறைவுவிழா மாநாடு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து.

Oredesam by Oredesam
February 28, 2024
in அரசியல்
0
எண் மண் எண் மக்கள்  நிறைவுவிழா மாநாடு குறித்து  பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து.
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற்ற எண் மண் எண் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி களைந்துகொண்டது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது என்னவென்றால்.

பாரதப் பிரதமர்நரேந்திரமோடி அவர்களின் பத்தாண்டு கால நல்லாட்சி சாதனைகளை, தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் #EnMannEnMakkal பயணம், கடந்த 2023 ஜூலை 28 அன்று, புண்ணிய பூமியான ராமேஸ்வரம் மண்ணில், நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா. அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, கடந்த 7 மாதங்களாக, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பயணம் செய்து, இன்றைய தினம், திருப்பூர் மாவட்டத்தில் நிறைவு பெற்றிருக்கிறது.

READ ALSO

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழகத்தில் ஒரு நேர்மையான, சாமானிய மக்களுக்கான அரசியல் மாற்றம் அமைய வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பும், உற்சாகமிக்க வரவேற்பும்,தமிழக பாஜக சகோதர சகோதரிகளின் எழுச்சியும், நமது யாத்திரைக்கு திமுக அரசு விதித்த பல தடைகளைத் தவிடுபொடியாக்கி, இந்த நடைபயணத்தை மாபெரும் வெற்றிப் பயணமாக்கியிருக்கிறது.

இன்று பல்லடத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி.அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தது, தமிழக மக்கள் மீது நமது பிரதமர் அவர்கள் கொண்ட பேரன்பை வெளிக்காட்டியிருக்கிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊரில் இருந்தும், லட்சக்கணக்கில் திரண்டு வந்து, நமது பிரதமர் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்ற நம் தமிழக மக்களின் அன்பும் ஆதரவும், நமது பிரதமர் அவர்களின் பத்து ஆண்டு கால நல்லாட்சிக்குச் சான்றாக விளங்கியிருக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி. அவர்களின் ஊழலற்ற, நேர்மையான, சாமானிய மக்களை முன்னிறுத்தி நடந்து வரும் நல்லாட்சி மூலம், உலக அரங்கில் பாரதம் தலைநிமிர்ந்து நிற்கிறது. உலகப் பொருளாதாரத்தில், 11 ஆவது இடத்தில் இருந்து, 5 ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. நமது பிரதமர் அவர்களின் ஆசை, கனவு, விருப்பம் எல்லாமே, நமது நாடு அனைத்துத் துறைகளிலும் உலக அரங்கில் முதலிடம் வகிப்பதுதான். அனைவருக்குமான வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உயரிய நோக்கத்தில், நாட்டின் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து, அனைவருக்குமான நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர் அவர்கள்.

சுதந்திரம் கிடைத்துப் பல ஆண்டுகளாக பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்ட பட்டியல், பழங்குடி சமூக சகோதர சகோதரிகள், மகளிர், ஏழை எளிய மக்கள் அனைவரும் நமது பிரதமர் அவர்களின் கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியில் உயர் அதிகாரத்துக்கு வந்திருக்கிறார்கள். சமூக நீதியை வெறும் பேச்சளவில் நிறுத்திக் கொள்ளாமல், முழுமையாகச் செயல்படுத்தி வருகிறார் நமது பிரதமர் அவர்கள். அது மட்டுமின்றி, நமது தமிழ்மொழியின் தொன்மையையும், செழுமையையும் உலக அரங்கில் பல நாடுகளுக்குக் கொண்டு சென்று பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இன்றைய நிறைவு விழாவில் பேசிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி. அவர்கள், கொங்கு பகுதி, இந்தியாவின் முக்கியமான தொழில் பகுதி என்றும், ஜவுளி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தியில், கொங்கு பகுதியின் முக்கியத்துவம் குறித்தும், உலக அரங்கில் வேகமாக முன்னேறி வரும் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, கொங்கு பகுதியின் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன என்றும் பெருமையுடன் குறிப்பிட்டார். மேலும், தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம் என்றும், நாட்டின் வளர்ச்சியில், தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கின்றது என்றும், தான் மேற்கொண்ட ஒற்றுமை யாத்திரை இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது போல #EnMannEnMakkal பயணம், தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கி, வரலாறு படைக்கும் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

வரும் பாராளுமன்றத் தேர்தல், வளர்ச்சிப் பாதையிலான, சாமானிய மக்களுக்கான, நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கான தேர்தல். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி. அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, அவர் மீது மிகுந்த பற்று கொண்ட தமிழக மக்கள், தங்கள் முழு அன்பையும் ஆதரவையும் வழங்குவார்கள் என்பது உறுதி.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
குடும்ப கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள்! ஸ்டாலின்.ராகுல்காந்தி, தேஜஸ்வியாதவை, சொல்லியடித்த வானதி சீனிவாசன்!
அரசியல்

குடும்ப கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள்! ஸ்டாலின்.ராகுல்காந்தி, தேஜஸ்வியாதவை, சொல்லியடித்த வானதி சீனிவாசன்!

August 28, 2025
தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர் எழுப்பிய கேள்வி!
அரசியல்

தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர் எழுப்பிய கேள்வி!

August 28, 2025
AI மூலம் எடிட்செய்து மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு-ஆதாரத்தை வெளியிட்ட நயினார்நாகேந்திரன்
அரசியல்

AI மூலம் எடிட்செய்து மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு-ஆதாரத்தை வெளியிட்ட நயினார்நாகேந்திரன்

August 21, 2025
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உயிருக்கு ஆபத்தா? மத்திய ரிசர்வ படை பாதுகாப்பு அளிக்க அமித் ஷா முடிவு!
அரசியல்

நெல்லையில் மாநாட்டில் அமித்ஷா ! தமிழக அரசியலில் அடிக்கப்போகும் சூறாவளி இதுதானாம் !

August 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்துக்களை இழிவுபடுத்திய ஆ.ராசா: மக்களவை சபாநாயகரிடம் பாஜக புகார்!

இந்துக்களை இழிவுபடுத்திய ஆ.ராசா: மக்களவை சபாநாயகரிடம் பாஜக புகார்!

September 21, 2022
ஜஸ்டின் கனடா

கனடாவில் காலியானது காலிஸ்தான் ! இதுதான் இந்தியாவின் பவர்! ஜஸ்டின் ட்ரூடோவை மாற்றி வல்லரசுக்கு போட்டியாக இறங்கிய இந்தியா!

April 30, 2025
இந்தியாவின் இஸ்ரோ அமெரிக்காவின் நாசா இணைந்து செயல்பட திட்டம்.

இந்தியாவின் இஸ்ரோ அமெரிக்காவின் நாசா இணைந்து செயல்பட திட்டம்.

June 22, 2023
துப்பாக்கி ஏந்தி தில்லி போலீசை அச்சறுத்திய கலகக்கார முகமது ஷாருக் வாயை மூடிக்கொண்டிருக்கும்  ஊடகங்கள்.

துப்பாக்கி ஏந்தி தில்லி போலீசை அச்சறுத்திய கலகக்கார முகமது ஷாருக் வாயை மூடிக்கொண்டிருக்கும் ஊடகங்கள்.

February 26, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x