கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருகிறது இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் முதல்வர் உள்ளிட்டோர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறது.

பல தொண்டு நிறுவனங்களும் உதவிகளை செய்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒடிசா மற்றும் கர்நாடகாவில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஏழை மக்களுக்கு மருத்துவ முககவசங்களை விநியோகித்து, கொரோனா நோயை குறித்து அவர்களுக்குக் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மட்டுமில்லாமல் கேரளாவில், மருத்துவமனைகளை சுத்தம் செய்தும், நகரத்தை சுற்றி கிருமிநாசினி தெளித்தும், கேரளாவின் கோத்தமங்கலம், கொடுங்கல்லூர் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றியும் வருகிறார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















