உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாமல் உலகம் முழுவதும் பரப்பியதற்காக உலகிற்கு 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம் அளிக்க வேண்டும் சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.
அமெரிக்க டெக்சாஸை மாகாணத்தை சார்ந்தவர் வழக்கறிஞர் லாரி க்ளேமேன். இவர், அமெரிக்க மாவட்ட மேற்கு டெக்சாஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் , கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டது என்றும் இந்த வைரஸ் உலகப்போருக்கான அடிப்படை ஆயுதமாக உருவாக்கி, வெளியிட்டுள்ளது. என்றும் இதன் மூலம் சீனா, சர்வதேச சட்டம், ஒப்பந்தம், விதிமுறைகளை மீறிவிட்டது.
சீனாவின் எதிரிகளை மிரட்டுவதற்காக பிறரைக் கொல்வதற்காவும் சீனா, தனது ஆராய்ச்சி ஆய்வகத்துக்குள் இந்த கொடூர வைரஸை பாதுகாத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. கோவிட்-19 வைரஸ் இயல்பில் மிகவும் அபாயகரமானது கொடூரமானது. மனிதனுக்கு மனிதன் தன் இயல்பைப் பிறழ்வாக்கிக் கொள்வது. எளிதிலும் வேகமாகவும் பரவக்கூடியது. இந்தப் புதிய நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் ஃப்ளூவை விட, 10 மடங்கு அபாயகரமானது. உலகின் அதிக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த சீனா தயாரித்துள்ளது எனவும் கொரோனா வைரசால் இதுவரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட சுமார் 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களிடம் தொற்று ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை உருவாக்கி, அதை பரவவிட்ட சீன அரசு இதற்காக 20 லட்சம் கோடி டாலர்களை அபராதம் அளிக்க வேண்டும்” என்று அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 14,652 பேர் பலியாகியுள்ளதாகவும் 3,34,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















