தமிழகத்தில் திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு பக்தர்களின் வருகை தொடர்ந்தது ஒரு நிலையில் மாசி மாத பௌர்ணமியை ஒட்டி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்:-இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:விழுப்புரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 9.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06130) காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
இதில் 8 மெமு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.