Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

முக்கிய பாயிண்டுகளை பிடித்து டாஸ்மாக் நிர்வாகத்தை நொறுக்கிய அமலாக்கத்துறை.. விழிபிதுங்கிய தமிழக அரசு.. அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி அதிரடி

Oredesam by Oredesam
April 25, 2025
in செய்திகள், தமிழகம்
0
tasmac

tasmac

FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு அரசின் மதுவிற்பனை நிறுவனமான டாஸ்மாக்கின் தலைமை அலுவலகம் சென்னை எழும்பூரில் இருக்கிறது. இந்த அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது நடந்தசோதனை முடிவில் 1000 கோடி அளவிற்கு டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தது.

இந்நிலையில் டாஸ்மாக்கில் நடந்த சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும், அந்த சோதனையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆகியோர் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் நேற்று தீர்ப்பு அளித்தனர்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

நீதிபதிகள் தீர்ப்பு

அதில் நீதிபதிகள் கூறுகையில், டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மது பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இதை டாஸ்மாக் மேற்பார்வையாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளில் மதுவாங்கும் வாடிக்கையாளர்களிடம் கூட அதிக பணத்தை வசூலித்துள்ளார்கள். இதுகுறித்து 41 வழக்குகளை தமிழ்நாடு முழுக்க போலீசார் பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

மது கொள்முதல், மது விற்பனை, டெண்டர் ஆவணங்கள், ஊழியர்கள் இடம் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஊழல்கள் நடந்துள்ளன. இதுதொடர்பான ஆதார ஆவணங்கள் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருக்கிறது. அந்த அலுவலகம்தான் மையக் களஞ்சியமாக உள்ளது எனவே தான் அங்கு சோதனை நடத்தப்பட்டது. எனவே, இந்த அலுவலகத்தில் சோதனை நடத்தியது சரியா, தவறா? என்பதை மேற்கொண்டு ஆய்வு செய்யத் தேவையில்லை என்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டிருக்கிறது.

தனிநபர் சுதந்திரம்
இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளும்போதுதான் சம்பந்தப்பட்ட நபரின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படும். ஆனால், சட்டத்தின் அடிப்படையில், திடீர் சோதனை நடத்தி, ஆதாரங்களை சேகரிக்கும்போது, சில நபர்களின் உரிமை சிறிது நேரத்துக்கு பாதிக்கப்படத்தான் செய்யும். அதற்காக அது மிகப்பெரிய பாதிப்பு என்று கூற இயலாது.

100 கேள்விகள்
டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் டெண்டர், மது விற்பனை, பார் உரிமை உள்ளிட்டவைகள் குறித்து 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு அமலாக்கத்துறை மிரட்டியதாக அரசு தரப்பில் கூறும் குற்றச்சாட்டுகளை ஏற்க இயலவில்லை. இதுபோன்ற சோதனைகளுக்கு அரசு ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

புகார்கள் இல்லை
அதேநேரம், மிரட்டலுக்கு ஆளானதாக கூறப்படும் அதிகாரிகள் இதுகுறித்து புகார் எதுவும் கூறவில்லை. பஞ்சநாமா ஆவணத்திலும் சோதனை அமைதியாக, சட்டப்படி, பொருளுக்கோ, மனிதர்களுக்கோ எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நடந்தது என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அதனால், ஆதாரமே இல்லாமல் அதிகாரிகள் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று அரசு எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகின்றனர் என்பதே தெரியவில்லை.

ஆச்சரியமாக உள்ளது
அரசு அலுவலகத்தில் ஒரு சட்டப்பூர்வமான புலன் விசாரணை அமைப்பு திடீர் சோதனையை நடத்தியுள்ளது. அப்போது, ஆதாரங்கள் கசிந்து விடக்கூடாது என்று டாஸ்மாக் ஊழியர்கள் பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்காக தங்களை கொடுமை செய்தனர் என்று டாஸ்மாக் அதிகாரிகள் சிலர் கூறுவது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.

சாதாரண சோதனை
அதுவும் ஓய்வு தரவில்லை. உணவு தரவில்லை. உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை அதிகாரிகள் சுமத்தியுள்ளனர். தன்னுடைய உரிமைக்காகவும், அரசாங்கத்தின் சலுகைகளை பெறுவதற்காகவும் அரசு அலுவலகத்தில் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். சில சமயங்கள் பல நாட்கள் நிற்கின்றனர். ஆனால், தன்னுடைய சொந்த அலுவலகத்தில் சோதனையின்போது சிறிது நேரம் சிறைப்பட்டிருந்ததை கொடுமை என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறுவதை ஏற்க இயலாது. ஊழலுக்கு எதிரான சோதனையில் டாஸ்மாக் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டுமே தவிர, சாதாரண ஒரு சோதனையால், அனைத்தும் உடைந்து விட்டது என்பது போல குற்றம் சாட்டக்கூடாது.

ஏன் அரசு தாக்கல் செய்தது
ஒருவேளை சோதனையின்போது, அதிகாரிகள் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள்தான் வழக்கு தொடர்ந்து இருக்கவேண்டும். ஏன் டாஸ்மாக் நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது? என்பதை எங்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.. ஒரு அரசாங்க அதிகாரிகள் நடத்திய சோதனையால் மற்றொரு அரசாங்க அதிகாரிகள் எப்படி பாதிக்கப்படுவார்கள்? ஒரு சுமுகமான சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

விசித்திரமானது
இதுபோன்ற வழக்கை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த வழக்குகளை ஏற்றுக் கொண்டால், சட்டத்தையே அது சீர்குலைத்து விடும். மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் எல்லாம் விசித்திரமானதாக இருக்கிறது. அதுவும் சோதனையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும் என்று அரசு தரப்பு கோரிக்கை நியாயமானது இல்லை..

கேடயம்
மேலும், பெண் அதிகாரிகள் பிடித்து வைக்கப்பட்டு, பாதுகாப்பு இல்லாத நேரத்தில் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று மனுதாரர்கள் குற்றம் சாட்டுகிறார். ஆவணங்களை பார்க்கும்போது, அமலாக்கத்துறையின் சட்டப்படியான நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக பெண் அதிகாரிகளையும், ஊழியர்களையும் அரசு ஒரு கேடயமாக பயன்படுத்தி இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளதோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.

பெண்கள் திறமை
இப்போதெல்லாம், பெண்கள் அனைத்து துறைகளிலும் முக்கிய பொறுப்புக்களை வகிக்கின்றனர். முப்படைகளிலும், ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாகவும், எம்.பி., எம்.எல்.ஏ.வாகவும் இரவு பகலாக பணியாற்றுகின்றனர். கொரோனா காலத்தில் பெண் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியாற்றினார்கள். அதனால் பெண்களின் திறமையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. பெண் ஊழியர்கள் ஊக்கத்தையும், அதிகாரத்தையும் இழக்கச் செய்யும் விதமாக அரசு செயல்படக்கூடாது.

ஒரு வார்த்தை கூட கூறவில்லை
டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன், பொதுமேலாளர் சங்கீதா, துணை பொதுமேலாளர் ஜோதி சங்கர் ஆகியோர் சோதனை முடிந்து 10 நாட்களுக்கு பின்னர், அமலாக்கத்துறை இணை இயக்குனர் எழுதிய கடிதத்தில் ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார்களே தவிர, சோதனையின்போது கொடுமைக்கு உள்ளானோம் என்று ஒரு வார்த்தைக்கூட கூறவே இல்லை..

சட்டப்படி செல்லும்
எனவே, சட்டத்தை தவறாக பயன்படுத்தி இந்த வழக்குகள் (அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டப்படி செல்லும். அதிகாரிகளின் மொபைல் போனை பறிமுதல் செய்தது பேச்சுரிமை, தனிநபர் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக கூறுவதையும் ஏற்க இயலாது

41 வழக்குகள்
சட்டவிரோத பண பரிமாற்றம் தடைச்சட்டதின் பிரிவு 54 (ஜே) -வின்படி, மாநில அரசு அதிகாரிகளின் உதவியுடன்தான் விசாரணை நடத்தவேண்டும் என்று கூறவில்லை. மாநில போலீசார் பதிவு செய்துள்ள 41 வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளது. டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது. இதுகுறித்து ஆழமான விசாரணை தேவை. அந்த விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளபோது இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

காழ்ப்புணர்ச்சி காரணமா
இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் என்பது தேசத்துக்கு எதிரான குற்றச்செயலாகும். அதனால், இந்த சோதனையே தேச நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறுதியாக இந்த சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்தது என்றும் மனுதாரர்கள் கூறுவதை ஏற்க இயலாது. ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பது இயல்பாக இருக்கிறது.
இதையெல்லாம் இந்த உயர்நீதிமன்றம் பரிசீலிக்க முடியாது.

அமலாக்கத்துறை சம்மன்
உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரை எங்கள் முன்புள்ள ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா, இல்லையா? என்பதை மட்டுமே பார்க்க முடியும். அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக கருதுவதால், இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். சோதனையின் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டப்படி மேல்நடவடிக்கை எடுக்கலாம்” இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தனர். இந்த தீர்ப்பை தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன், பொதுமேலாளர் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தியாவில் முதன்முறையாக அவசர கால ஆட்டோ ஊர்தி சேவை வழங்கிய நீலகிரி பெண்ணிற்கு பிரதமர் மோடி பாராட்டு.

இந்தியாவில் முதன்முறையாக அவசர கால ஆட்டோ ஊர்தி சேவை வழங்கிய நீலகிரி பெண்ணிற்கு பிரதமர் மோடி பாராட்டு.

July 25, 2021
Murder

பா.ஜ.க ஓபிசி அணி செயலாளர் ஓட ஓட வெட்டி கொலை… பதட்டத்தில் மதுரை…

February 15, 2024
இஸ்லாமிய மதவெறி அமைப்புக்கு எச்சரிக்கை! இனி நீங்கள் செய்தால் நாங்களும் செய்வோம்-ஹெச்.ராஜா!

இஸ்லாமிய மதவெறி அமைப்புக்கு எச்சரிக்கை! இனி நீங்கள் செய்தால் நாங்களும் செய்வோம்-ஹெச்.ராஜா!

November 2, 2021

எல்லையை தாண்டி வந்தா செஞ்சிடுவோம் – ராஜ்நாத் சிங் அதிரடி.

September 6, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x