Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா? – அமெரிக்காவில் வைத்து அமெரிக்காவை வச்சு செய்த சசி தரூர்! காங்கிரசையும் விடவில்லை!

Oredesam by Oredesam
June 6, 2025
in இந்தியா, உலகம், செய்திகள்
0
sasi tharur

sasi tharur

FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்துார் மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு அம்பலப்படுத்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையில், அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டது. சசி தரூரின் பெயரை காங்கிரஸ், பரிந்துரைக்காத நிலையில், அவரது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்தது.மேலும், அதிருப்தி அடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள், பாஜகவின் சூப்பர் செய்தித் தொடர்பாளர் போல் சசி தரூர் செயல்படுவதாக விமர்சித்தனர். இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், நாட்டின் நலனுக்காக சேவை செய்யும்போது, வெளியில் இருந்து கூறப்படும் கருத்துகளை ஒருவர் கண்டுகொள்ளவே கூடாது என தெரிவித்துள்ளார் வெளிநாடுகளுக்கு தாங்கள் சுற்றுலாவுக்காக வரவில்லை என்றும், நாட்டின் ஒற்றுமைக்காக ஒன்றுக்கூடி வந்துள்ளதாகவும் சசி தரூர் கூறியுள்ளார்.

வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலை டொனால்ட் ட்ரம்ப்தான் முடிவுக்குக் கொண்டு வந்தாரா என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும், பாகிஸ்தானிடம் ட்ரம்ப் பேசி இருக்கலாம் என்றும், தான் பாகிஸ்தானியோ, அமெரிக்கரோ இல்லை என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான குழு கொலம்பியா உட்பட பல்வேறு நாடுகளின் பயணங்களை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளது.இந்த பயணம் தொடர்பாக சசி தரூர் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலை, வர்த்தகத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சசி தரூர், “வெள்ளை மாளிகையுடனான எங்கள் உறவில் எந்தவிதமான சிக்கல்களையும் ஏற்படுத்த நான் இங்கு வரவில்லை என்பதால் நான் அதைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. அமெரிக்க அதிபர் பதவி மற்றும் அமெரிக்க அதிபர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. மேலும், அவரது தரப்பில் பேசியவர்கள் பாகிஸ்தானிடம் என்ன சொன்னார்கள் என்பது பற்றி எங்களுக்கு சரியாகத் தெரியாது என்று நினைக்கிறேன்.

முதல் நாளிலிருந்தே எங்கள் சமிக்ஞை என்னவென்றால், பாகிஸ்தான் திருப்பித் தாக்கினால், நாங்கள் அவர்களை இன்னும் கடுமையாகத் தாக்குவோம். அவர்கள் நிறுத்தினால், நாங்கள் நிறுத்துவோம். நாங்கள் அதை முதல் நாளிலிருந்தே சொன்னோம். கடைசி நாளிலும் அதைச் சொன்னோம்.

எனவே எங்கள் பார்வையில், எங்களை நிறுத்தச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் பாகிஸ்தான் நிறுத்தினால் நாங்கள் நிறுத்தப் போகிறோம். நிச்சயமாக, அவர்கள் பாகிஸ்தானுடன் பேசியிருக்கலாம். அவர்கள் பாகிஸ்தானிடம் பல்வேறு விஷயங்களைச் சொல்லியிருக்கலாம்.

என்ன சொல்லப்பட்டது என்பது எங்களுக்கு ஒருபோதும் தெரியாது, ஏனென்றால் அது அவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விஷயம். நான் பாகிஸ்தானியும் இல்லை, அமெரிக்கனும் இல்லை என்பதால் என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது” என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் உங்களின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நாடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்தி சொல்லப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த சசி தரூர், “ஒருவர் நாட்டுக்கான பணியில் இருக்கும்போது, ​​இந்த விஷயங்களைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். தேசிய நலனுக்காகப் பணியாற்றுவது ஒருவித கட்சி விரோதச் செயல் என்று கருதுபவர்களிடம் நான் கேள்வி கேட்பதைவிட, அவர்கள் தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

தற்போது நாங்கள் இங்கே ஒரு குறிப்பிட்ட பணியில் கவனம் செலுத்துகிறோம் என்று நான் உண்மையிலேயே உணர்கிறேன். பல்வேறு தனிநபர்களால் என்ன சொல்லப்படுகிறது அல்லது சொல்லப்படவில்லை என்பதைப் பற்றி கவலைப்பட அதிக நேரம் செலவிடத் தேவையில்லை, ஏனெனில் எங்களுடைய கவனம் இந்த மிக முக்கியமான பணியில் உள்ளது. நேரம் வரும்போது, ​​நாங்கள் அதை கையாள்வோம்” என்று தெரிவித்தார்.

நீங்கள் காங்கிரசில் தொடர்ந்து நீடிப்பீர்களா அல்லது பாஜகவில் இணைவீர்களா என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் அதிக விவாதங்கள் நடக்கிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த சசி தரூர், “நான் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். எனது பதவிக்காலத்தில் இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. இப்போது ஏன் இதுபற்றி கேட்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை” என தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தொலைபேசி அழைப்புக்கு பிரதமர் மோடி சரணடைந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சசி தரூர், “ஜனநாயகத்தில் இது இயல்பானது. கட்சிகளுக்கு இடையே போட்டி இருக்கும், விமர்சனங்களை வெளிப்படுத்தும், கோரிக்கைகளை வைக்கும். நாங்கள் இங்கு ஒரு கட்சியின் அரசியல் நோக்கத்திற்காக வரவில்லை. நாங்கள் இந்தியாவின் பிரதிநிதிகளாக இங்கு இருக்கிறோம். மூன்று மதங்கள், ஏழு மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து அரசியல் கட்சிகள் எங்கள் குழுவில் இடம்பெற்றுள்ளன.” என தெரிவித்தார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

வானதி சீனிவாசன்

கூவத்தில் முதலை கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை … மொத்தமாக இழுத்து விட்ட வானதி சீனிவாசன்….

December 5, 2023
மொராதாபாத்: மருத்துவக் குழுமீது  கல் வீசிய 13 பெண்கள் உட்பட 25 பேர் கைது.

மொராதாபாத்: மருத்துவக் குழுமீது கல் வீசிய 13 பெண்கள் உட்பட 25 பேர் கைது.

April 16, 2020
திக எதிர்ப்பு தெரிவித்த நிகழ்ச்சி “உயிரைக் கொடுத்தாவது, பிரவேசத்தை நடத்துவோம்” – மதுரை ஆதீனம் ஆவேசம்.

திக எதிர்ப்பு தெரிவித்த நிகழ்ச்சி “உயிரைக் கொடுத்தாவது, பிரவேசத்தை நடத்துவோம்” – மதுரை ஆதீனம் ஆவேசம்.

May 3, 2022
தமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிகள் ! பா.ஜ.கவை நோக்கி திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் !

தமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிகள் ! பா.ஜ.கவை நோக்கி திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் !

April 25, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x