உலக முழுவதும் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகின்றது. இந்தியாவை பொறுத்தவரை இது கட்டுக்குள் இருந்து வருகிறது. இதற்கு காரணம் நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஆகும். இந்தியாவில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 937 பேர் உயிரிழந்துள்ளதார்கள்.
இந்த நிலையில் மத்திய அரசு ஒரு அதிரடி அறிவிப்ப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கவும் வேலைக்கு செல்வோரின் நலனை காப்பாற்றவும் சமூக இடைவெளி என்பது முக்கிய அம்சம் ஆகும். இதுதான் கொரோனா பரவலிலிருந்து நம்மை பாதுகாக்கும், இதன் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்களும்,ஏப்ரல் 30ம் தேதி வரை, வீட்டிலிருந்து பணியாற்ற மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், இந்த நடைமுறையை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக, மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.
அனைத்து மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன், காணொளி மூலம் ரவிசங்கர் பிரசாத் நேற்று ஆலோசனை நடத்தினார். பின் செய்தியாளர்களின் அவர் கூறியதாவது: கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து நாடுகளிலும பணி செய்யும் இடம் மாறியுள்ளது . உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 80 சதவீத ஊழியர்கள் அவரவர் வீட்டிலிருந்தே பணி செய்து வருகின்றார்கள்.
இந்தியாவிலும் , ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற இம்மாதம் இறுதி வரை அனுமதி வாழ்க்கை இருந்தோம். அந்த அனுமதியை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து பணி செய்யும் ஐ.டி மற்றும் பி.பி.ஓ. ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம்.
ஆன்லைன் சுகாதார சேவைகளை தென் மாநிலங்கள் சிறப்பாக கையாளுகின்றன. மற்ற மாநிலங்களும் இதனை பின்பற்ற வேண்டும். ஊரடங்குக்கு பின் பணி நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க, பாரத் நெட் பிராட்பேண்ட் சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்க குழு அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















