Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் குறித்து நிதிக்குழு மின்சார அமைச்சகத்துடன் கலந்துரையாடல்.

Oredesam by Oredesam
May 29, 2020
in இந்தியா
0
மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் குறித்து நிதிக்குழு மின்சார அமைச்சகத்துடன் கலந்துரையாடல்.
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களில் மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து என். கே. சிங் தலைமையிலான நிதிக்குழுவும் அதன் உறுப்பினர்களும் மூத்த அதிகாரிகளும் மத்திய மின்துறை அமைச்சர் ஆர். கே. சிங் தலைமையிலான மின்துறை அமைச்சக அதிகாரிகளுடன் இன்று விரிவான சந்திப்பை மேற்கொண்டனர். இந்த சந்திப்பு நிதி ஆணையம் 2020 – 2021 நிதியாண்டிற்கான தனது அறிக்கையில் மின்துறை குறித்து வழங்கியிருந்த பரிந்துரைகளின் தொடர்ச்சியாக நடைபெற்றது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான ஊரடங்கில் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவை எதிர்த்துப் போராட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து தவணைகளாக நிதியுதவி பற்றி அறிவித்ததில் முதல் தவணையில் இடம் பெற்றிருந்த 15 நடவடிக்கைகளில், நிதிநிலைமை மிக மோசமாக மாறியுள்ள மின்பகிர்வு நிறுவனங்களில் ரூ. 90,000 கோடி ரொக்கத் தொகை ஈடுபடுத்தப்படும்  என்ற அறிவிப்பும் ஒன்றாகும். இதனைக் கருத்தில் கொண்டும், 2021 – 2026 நிதியாண்டு காலப்பகுதிக்கான நிதிக்குழுவின் அடுத்த அறிக்கையில் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் வகையிலும் இந்த சந்திப்பு நடைபெற்றது. மின் துறையை தொடர்ந்து நெருக்கடியிலேயே ஆழ்த்தி வரும் பிரச்சினைகளை கணக்கில் கொண்டு மின்துறையில் சீர்திருத்தங்களை மேலும் வேகப்படுத்துவதற்கு பிரதமர் முன்னுரிமை அளித்துள்ளதை பிரதிபலிப்பதாகவே நிதியமைச்சரின் இந்த அறிவிப்புகள் இருந்தன.

READ ALSO

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

மின்துறை தொடர்பாக மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகள், இதன் விளைவாக ஏற்படும் நிதிரீதியான பின்விளைவுகள், இதன் விளைவாக மின்பகிர்மான நிறுவனங்கள் நட்டத்தில் ஆழ வேண்டிய நிலை ஆகிய மின் அமைப்பின் கட்டமைப்புகளில் தற்போது நீடித்து வரும் பொருத்தமின்மையை மத்திய மின்துறை அமைச்சர் நிதிக்குழுவிடம் சுட்டிக் காட்டினார். முற்றிலும் மாநில அரசுகளுக்கே சொந்தமான மின்பகிர்வு நிறுவனங்களின் நிதிசார் நலன்களுக்கு மாநில அரசுகள் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதற்கென மாநில அரசுகளின் இந்தப் பொறுப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்ட வகையில் நிதிசார் பொறுப்புகள் மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் கடன் வாங்கும் அளவு சீரமைக்கப்பட வேண்டியுள்ளது.

மின்பகிர்வு நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நிலையில் உள்ள மாநில அரசுகளின் பொறுப்புகளை இது முன்னுக்குக் கொண்டு வரும். மேலும் மின்பகிர்வு நிறுவனங்களைப் பொறுத்தவரையில் நிதி ரீதியாகவும் மேலாண்மை ரீதியாகவும் மாநில அரசுகள் பொறுப்பாக நடந்து கொள்வதற்கும் நிதிசார்ந்த வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரவும் இந்த நடவடிக்கைகள் உதவி செய்யும்.

மின்பகிர்வு நிறுவனங்களின்  செயல்பாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கென மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்தும் அமைச்சர் நிதிக்குழுவிடம் விளக்கினார். அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் புதிய கட்டணக் கொள்கையும் இதில் அடங்கும். மின்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பாதையை உருவாக்கவுள்ள சீர்திருத்தங்களில் இதுவும் அடங்கும். 2003ஆம் ஆண்டின் மின்சார சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மின்துறை அமைச்சகத்தின் பழைய திட்டங்கள் அனைத்தும் ஒன்று திரட்டப்பட்டு புதியதொரு திட்டமாக உருவாக்கப்படுகிறது என்று தெரிவித்த அமைச்சர் இதற்கென ஐந்தாண்டு காலப்பகுதிக்கு தேவைப்படும் ரூ. 3 லட்சம் கோடியை ஒதுக்கும் வகையில் நிதிக்குழு தனது ஆதரவை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். திருத்தி அமைக்கப்படும் இத்திட்டமானது இழப்புகளைக் குறைப்பது, விவசாயத்திற்கான வழங்கல் முறைகளை தனியாக மேற்கொள்வது, முன்கூட்டியே நுகர்வுக் கட்டணங்களைச் செலுத்தும் வகையிலான நவீன அளவிகள் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.

மின்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகளுக்கான மின்துறை அமைச்சரைப் பாராட்டிய நிதிக்குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் ஒழுங்குமுறையை பின்பற்றுதல், நிதிசார்ந்த ஒழுங்கமைவு, சீர்திருத்தங்கள் தொடர்ந்து நீடித்து இருப்பதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து மின்துறை அமைச்சகத்திற்கு பயனுள்ள ஆலோசனைகளையும் வழங்கினர்.

15வது நிதிக்குழு 2020-21ஆம் நிதியாண்டிற்கான தனது அறிக்கையில் 2016-17ஆம் நிதியாண்டில் மின்துறை பகிர்வு நிறுவனங்களுக்கான உறுதித்திட்டத்தை (உதய் திட்டம்) அமலாக்கிய பிறகு பெரும்பாலான மாநிலங்கள் தங்களது சராசரி தொழில்நுட்ப, வணிக ரீதியான இழப்புகளையும், மின் வழங்கலுக்கான சராசரி மதிப்பு மற்றும் பெறக்கூடிய சராசரி வருவாய் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளையும் இழப்புகளையும் ஓரளவிற்கு குறைத்துள்ளன என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கதாகும். எனினும் மின்துறையில் நிலவிவரும் அமைப்புரீதியான பிரச்சினைகளில் உரிய கவனம் செலுத்தவில்லையெனில் இத்துறையில் ஏற்பட்டுள்ள் முன்னேற்றத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்த முடியாது என்றே தோன்றுகிறது. இதன் விளைவாகவே மின்துறையின் செழிப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான துடிப்பான, அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்று மின்துறை அமைச்சரும் நிதிக் குழுவும் கருத்து தெரிவித்தனர்.

தங்களது எதிர்கால விவாதங்களின் போதும் தனது இறுதி அறிக்கையை உருவாக்கும் போதும் மின்துறை அமைச்சகம் முன்வைத்த ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளும் எனவும் நிதிக்குழு உறுதி கூறியது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025
ArtOfPrediction
இந்தியா

விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!

June 13, 2025
Modi
இந்தியா

மோடி 3.0 ஓராண்டு நிறைவு: நக்சல் வேட்டை.. தொடரும் நலத் திட்டங்கள் அனைத்துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி!

June 10, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஊடகங்களை புரட்டி எடுத்த அண்ணாமலை! தரமான சிறப்பான சம்பவம் என்னா அடி!

ஊடகவியலாளர்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்றால், அரசியல் தலைவர்களுக்கு இல்லையா? பாஜக தலைவர் ஆவேசம் .

January 4, 2022
Jaffer Sadiq

போதை பொருள் கடத்தல்.. சினிமா தயாரிப்பாளர்..திமுகவில் அரசியல்..சிக்கிய சாதிக்..சிக்கலில் அரசியல் சினிமாத்துறையினர்…

March 5, 2024
தலையில் முக்காடு அணிய வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை! ஆசிய செஸ் போட்டியில் இருந்து விலகிய இந்திய வீராங்கனை!

தலையில் முக்காடு அணிய வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை! ஆசிய செஸ் போட்டியில் இருந்து விலகிய இந்திய வீராங்கனை!

June 20, 2021
சர்வதேச கட்சியாகிறதா பாஜக! அமித்ஷா வின் அடுத்த திட்டம் !

2029 தேர்தலுக்கு பிறகும் பிரதமர் மோடியின் ஆட்சி தான் அமையும் அமித்ஷா பேச்சு !

August 5, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x