உடல் முழுவதும் ஊழல் ஊறி போய் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு நல்ல விஷயங்களை பற்றி எப்படி பேச தெரியும் என பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, ராகுலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டதன் முதலாம் ஆண்டைகருப்பு நாளாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட காங் முன்னாள் தலைவர் எம்.பி.,ராகுல், இந்த தாக்குதலால் பலனடைந்தவர்கள் யார் என மத்திய அரசிடம்கேள்விகேட்டுள்ளார்..
இதற்கு பதிலளிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், புல்வாமா தாக்குதல் மிககொடூரமான தாக்குதல். இது கொடூரமான கருத்து. யார் அதிகம் பயனடைந்தது? ராகுல் அவர்களே பலன் பெறுவதை தாண்டி உங்களால் சிந்திக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது.

ராகுல் குடும்பத்திற்கே கிடைக்கும் பலனைத் தாண்டி சிந்திக்க தெரியாது. பொருட்களில் மட்டும் ஊழல் இல்லை. அவர்களின் உடல் முழுவதும் ஊழல் ஊறிப்போய் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















