Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கவும் குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தல்!

Oredesam by Oredesam
August 7, 2020
in இந்தியா, செய்திகள்
0
இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கவும்  குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தல்!
FacebookTwitterWhatsappTelegram

புதுதில்லி,

அண்டைநாடுகள் உள்ளிட்டு, மற்ற நாடுகள் இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு இன்று அறிவுறுத்தினார். ஜம்மு-காஷ்மீர் தொடர்பான 370வது பிரிவு நீக்கம் என்ற முடிவானது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக பொதுவான நலன்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதையும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

முன்னாள் வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் முதலாவது நினைவு தினத்தை ஒட்டி பஞ்சாப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த திருமதி. சுஷ்மா சுவராஜ் முதலாவது நினைவு சொற்பொழிவை நிகழ்த்திய குடியரசுத் துணைத்தலைவர், இந்தியா நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பின்பற்றி வரும் ஒரு நாடு; 370வது பிரிவை அகற்றுவது என்ற முடிவு நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்களுக்குப் பின்னர் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என்பதையும் சுட்டிக் காட்டினார். 

மற்ற நாடுகளின் விஷயங்களில் தலையிடுவதற்குப் பதிலாக தங்களது சொந்த நாட்டு விஷயங்களில் இதர நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் திரு. நாயுடு கேட்டுக் கொண்டார்.

இறப்பதற்கு முன்பாக திருமதி. சுஷ்மா சுவராஜ் 370வது பிரிவு குறித்து வெளியிட்ட கருத்துக்களை சுட்டிக் காட்டிய குடியரசுத் துணைத்தலைவர் வெளியுறவு அமைச்சர் என்ற வகையில் இந்தியாவின் நிலைபாட்டை மிகவும் திறமையோடு அவர் வெளிப்படுத்தி வந்ததோடு, அவற்றை மிகுந்த இனிமையோடும், மென்மையோடும் வெளிப்படுத்தினார் என்று குறிப்பிட்டார். அதே நேரத்தில் நாடு மேற்கொண்டுள்ள நிலைபாட்டை மிகவும் உறுதியாகவும் வெளிப்படுத்துவதும் அவரது வழக்கமாக இருந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு புகழாரம் சூட்டிய அவர், முன் உதாரணமானதொரு இந்தியப் பெண் ஆகவும் அவர் திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார். தான் வகித்த பொறுப்புகள் அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்துச் சென்ற திறமையானதொரு நிர்வாகியாகவும் அவர் விளங்கினார்.

இளம் அரசியல்வாதிகள் அவரை முன் உதாரணமாகக் கொண்டு அவரது தனித்தன்மைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திரு. நாயுடு மேலும் கூறுகையில் திருமதி. சுஷ்மா ஜி மிகவும் அருமையானதொரு மனிதராக, கனிவானவராக, நண்பர்கள், ஆதரவாளர்கள் அல்லது பொதுமக்கள் என எவரிடமிருந்தும் வரும் எந்தவொரு கோரிக்கைக்கும் உடனடியாக பதிலளிப்பவராக விளங்கினார் என்றும் குறிப்பிட்டார். 

திருமதி. சுவராஜ் மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தவர் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர் 1996ஆம் ஆண்டில் மக்களவையில் நடைபெற்ற ஒரு விவாதத்தின் போது  ‘இந்தியத் தன்மை’ என்பது குறித்து மிகச் சிறப்பாக உரையாற்றியதையும் நினைவு கூர்ந்தார். பேசும் மொழியின் தூய்மை, தேர்வு செய்யப்பட்ட வார்த்தைகள், தெளிவான சிந்தனை ஆகிய அனைத்துமே அனைவராலும் போற்றப்பட்ட பேச்சாளராக அவரை உருவாக்கியது.

உணர்ச்சிபூர்வமானதொரு தேசியவாதியாகத் திகழ்ந்த அவர் தனது கருத்துக்களை எவ்வித ஒளிவு மறைவுமின்றி எப்போதும் வெளிப்படுத்தியவர் என்றும் குடியரசுத் துணைத்தலைவர் குறிப்பிட்டார். 

*****


(Release ID: 1643698)

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ட்விட்டரை கூண்டில் அடைத்தது நைஜீரியா! நைஜீரியாவில் அதிகாரபூர்வமாக சிறகடித்து பறக்கும் இந்தியாவின் ‘கூ’ செயலி!

ட்விட்டரை கூண்டில் அடைத்தது நைஜீரியா! நைஜீரியாவில் அதிகாரபூர்வமாக சிறகடித்து பறக்கும் இந்தியாவின் ‘கூ’ செயலி!

June 11, 2021

திமுக.,விற்கு வெறும் 34 தொகுதிகள் தான் கிடைக்கும்: முதல்வர் பழனிசாமி.

January 25, 2021
அண்ணாமலையை மாற்றிய தென்னிந்திய அயோத்தியா ?

அண்ணாமலையை மாற்றிய தென்னிந்திய அயோத்தியா ?

October 31, 2020
Hanooman AI

ChatGPT க்கு சவால் விடும் பாரத் GPTயின் ஹனுமான் AI! இந்தியாவின்AI புரட்சிக்கு வித்திடும் ஹனுமன்!…

February 22, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x