Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழர்களை வஞ்சிப்பது மத்திய அரசா? தமிழக அரசியல்வாதிகளா?

Oredesam by Oredesam
August 17, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 04/08/2020 அன்று திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிக்கு வடமாநிலங்களில் இருந்து சான்றிதழ் சரிபார்க்க சுமார் 500 பேர் பணி வந்தனர் என்றும், தமிழர்களை புறக்கணிக்கும் முயற்சியே இது என்றும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டன.

பல எதிர்க்கட்சிகள் இது குறித்து தங்களின் கண்டனத்தை பதிவு செய்ததோடு மத்திய அரசின் தமிழ் விரோத போக்கு இது என்ற ரீதியில் அறிக்கையை விட்டு அகமகிழ்ந்து கொண்டனர்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

ஆனால் உண்மை நிலவரம் என்ன?

03/02/2018 (CEN No.01/2018) அன்று நாடு முழுவதும் உள்ள 21 ரயில்வே பணியாளர் தேர்வாணையங்களின் அறிவிக்கையின் படி உதவி ஓட்டுனர்கள் மற்றும் தொழில் நுட்ப பணியாளர்களுக்கான பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன் படி, உதவி ஓட்டுநர் பணிக்கு தொழில் நுட்ப கல்வி அல்லது டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். தொழில் நுட்ப பணியாளர் தேர்வுக்கு குறிப்பிட்ட பிரிவில் தொழில் நுட்ப கல்வி சான்றிதழ் பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு எங்கு விருப்பமோ, அந்த மண்டலத்திற்கு மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மண்டலத்தில், சென்னை, திருச்சி மற்றும் சேலம் பிரிவுகள் உள்ளன. உதவி ஓட்டுநர் தேர்வுக்கு மூன்று நிலை தேர்வுகளும், தொழில் நுட்ப பணிக்கு இரு நிலை தேர்வும் நடைபெற்றன.

இந்த மண்டலத்தில், மொத்தமுள்ள 3218 க்கான காலியிடங்கள் உள்ளன. அதில் 752 உதவி ஓட்டுநர்களுக்கான பணியிடங்களுக்கும், 2466 இடங்கள் தொழில் நுட்ப பணியாளர்களுக்குமானவை.

கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதனடிப்படையில், பொன்மலை பிரிவில் தேர்வு செய்யப்பட்டது 541 தொழில் நுட்ப பணியாளர்கள் மட்டுமே. கடந்த 04/08/2020 முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வெளி மாநிலத்திலிருந்து அழைக்கப்பட்டார்கள்.

04/08/2020 அன்று அழைக்கப்பட்டவர்கள் 114 பேர் மட்டுமே. அதிலும் வந்தவர்களின் எண்ணிக்கை 63 மட்டுமே. ஆனால் 500 பேர் வந்ததாக செய்திகள் வெளியிடப்பட்டது.

அதிக எண்ணிக்கையில் வடமாநிலத்தவர்கள் தேர்வு பெற்றதாக சொல்லப்படுவது உண்மையா?

சென்னை மண்டலத்தின் உதவி ஓட்டுனர்கள் பணியிடங்கள் 752. அதில் தமிழகத்தை சார்ந்தவர்கள் மட்டும் 402 பேர். அதாவது சுமார் 53 விழுக்காடு. காரணம் இவர்களில் பலர் பொறியியல் பட்டதாரிகள். தொழில் நுட்ப பணியாளர்கள் தேர்வில் தகுதியானவர்கள் எண்ணிக்கை 2466. இதில் தமிழகத்திலிருந்து 173 பேர் மட்டுமே.

அதாவது 7 விழுக்காடு மட்டுமே. காரணம் இந்த பணியிடங்களுக்கு குறிப்பிட்ட பிரிவில் தொழில் நுட்ப கல்வி சான்றிதழ் (ITI) பெற்றவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள். தமிழகத்தில் பெரும்பாலும் பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பயின்றவர்கள் என்பதாலும், பீஹார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக அளவு தொழில் நுட்ப பயிற்சி மையங்கள் இந்த துறையில் இயங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது தேவைக்கேற்ற தகுதியை விட அதிக தகுதியை கொண்டதால் அவர்கள் தேர்வாகவில்லை. மேற்கண்ட அனைத்து பணியிடங்களும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரெண்டிஸ்ஷிப்) பணி முடித்தவர்களுக்கு இந்த பணியை அளிக்க வேண்டும் என்று சொல்வது சரியல்ல. இந்திய ரயில்வே துறையின் ஆட்சேர்ப்பு பிரிவு (ஆர்.ஆர்.சி) தான் ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சியை அளிக்கிறது.

மேலும், இந்த பயிற்சியானது இளைஞர்களுக்கு திறன் பயிற்சியை வழங்கவும், திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும் தான் என்பதோடு, இந்த பயிற்சி பெறுபவர்களுக்கு வேலை உத்தரவாதம் எதையும் தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரெண்டிஸ்ஷிப்) சட்டம் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை ஏற்று கொண்டே அவர்கள் இந்த பயிற்சியை பெறுகிறார்கள். ஆனாலும், பாஜக ஆட்சியில் தான் கடந்த இரண்டு வருடங்களாக குரூப் – D பிரிவு பணியிடங்களுக்கு மட்டும் தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரெண்டிஸ்ஷிப்) பெற்றவர்களுக்கு 20 விழுக்காடு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவர்களும், இந்திய ரயில்வே துறையின் ஆட்சேர்ப்பு பிரிவு நடத்தும் தேர்வுகளில் பங்கு பெற்று தேர்வு பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, தொடர்ந்து ரயில்வே தேர்வுகளில் வட மாநிலத்தவர் அதிகம் இடம் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தவறானது என்பதையும், தகுதி அதிகமாக தேவைப்படும் பணியிடங்களில் அதிக தமிழர்கள் இடம்பெறுகிறார்கள் என்பதையும், ஒரு சில பணியிடங்களில் தமிழர்களின் தேர்வு குறைவாக இருப்பதற்கு காரணம் தேவைக்கு அதிகமான தகுதி என்பதையும் உணர்தல் வேண்டும்.

ஆகவே, தமிழக அரசியல் கட்சிகள் இதை உணர்ந்து கொள்வதோடு, தேவையில்லாத வகையில் மொழி அரசியலை திணித்து, உண்மைக்கு மாறான தகவல்களை அவசர கோலத்தில் தெளித்து மக்கள் மத்தியில் பதட்டத்தை உருவாக்குவதை நிறுத்தி கொள்வது சிறப்பை தரும். புற்றீசல் போன்று பொறியியல் கல்லூரிகளை வியாபார நிறுவனங்களை போல் திறந்து விட்டு, கல்வியை வியாபாரமாக்கியவர்கள் தான் கடந்த இரு தலைமுறை இளைஞர்களின் ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற நிலைக்கு காரணம்.

கல்விக்கேற்ற பணியை உருவாக்காமல், பணிக்கேற்ற கல்வியை கொடுக்காமல் கல்வியை வியாபாரமாக்கி, கடந்த 30 வருடங்களாக தமிழகத்தை சீரழித்து விட்டவர்கள், இன்று தங்களின் தவறை மறைக்க, ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்று அறிக்கைகள் விடுவதும், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று பேசுவதும் தமிழக இளைஞர்களுக்கு செய்யும் மிக பெரிய துரோகம்.

தொழிற்கல்வி வேண்டும் என்றால், அதை குலக்கல்வி என்று சொல்பவர்கள், அரசியல் மூலம் மொழியை வளர்க்க தவறியவர்கள், மொழியின் மூலம் தங்களின் அரசியல் பிழைப்பை நடத்தி கொள்வது அடுத்த தலைமுறையினை அதல பாதாளத்தில் தள்ளிவிடும். நம்மை நாம் திருத்தி கொள்ளாமல் மற்றவர்களை பழித்து, இழித்து மாணவர்களின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளும் போக்கினை சில தமிழக அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்வது நலன் தரும்.

கட்டுரை:- நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி- தமிழ்நாடு.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

‘காசா மக்களை முஸ்லிம் நாடுகள் ஏற்க மறுப்பது ஏன்?’ வாயைமூடி மவுனம் காக்கும் போராளிகள் !

‘காசா மக்களை முஸ்லிம் நாடுகள் ஏற்க மறுப்பது ஏன்?’ வாயைமூடி மவுனம் காக்கும் போராளிகள் !

October 16, 2023
vikraman

பாலியல் வழக்கில் சிக்கிய வி.சி.க விக்ரமன்..விசாரணை முடிந்து முகத்தை மூடிக்கொண்டு காரில் ஏறி ஓடிய விக்ரமன்..

January 9, 2024
அடேங்கப்பா 1,400 கோடி! துணை முதல்வர் குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம்! முடிவுக்கு வரும் மகாராஷ்டிரா அரசு!

அடேங்கப்பா 1,400 கோடி! துணை முதல்வர் குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம்! முடிவுக்கு வரும் மகாராஷ்டிரா அரசு!

November 3, 2021
கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், திமுக ஆட்சிக்கு வந்துள்ளது! சொன்னது பல்வளத்துறை அமைச்சர் நாசர்!

தி.மு.க ஆட்சிக்கு வந்ததற்கு கிறிஸ்துவர்களின் ஜெபம் தான் என, கிருஸ்துவ மக்களின் உற்சாகத்துக்காக பேசினேன். அமைச்சர் அடித்த அந்தர் பல்டி!

August 5, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x