Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சென்னையில் ‘போக்சோ’வில் கைதான நபர் நடத்தும் சர்ச்; ‘சீல்’ வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Oredesam by Oredesam
April 23, 2023
in செய்திகள், தமிழகம்
0
சென்னையில் ‘போக்சோ’வில் கைதான நபர் நடத்தும் சர்ச்; ‘சீல்’ வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
FacebookTwitterWhatsappTelegram

‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர் சென்னை ஆதம்பாக்கத்தில் அனுமதி பெறாமல் நடத்தும் சர்ச்சுக்கு ‘சீல்’ வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூக சேவகியும் தடை தாண்டுதல் போட்டியில் தேசிய அளவில் தங்க பதக்கம் வென்றவரும் நடிகையுமான எமி கூறியதாவது:

இலங்கையை சேர்ந்த ஷெரார்டு மனைவி ஹெலன் ஆதம்பாக்கம் கிராம சர்வே எண் 233/52 குடியிருப்புகள் உள்ள இடத்தில் அனுமதி பெறாமல் சர்ச் நடத்தி வருகின்றனர். அதில் 650 சதுர அடி ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சர்ச்சும் அதை ஒட்டி ஓட்டல் கேட்டரிங் சமையல் கூடமும் நடத்துகின்றனர். இதற்கு முறைகேடாக மின் இணைப்பு பெற்று வணிக நோக்கில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

கடந்த ஆண்டில் ஷெரார்டு மனோகர் சர்ச்சில் இருந்த மூன்று தலித் சிறுமியர் ஒரு இஸ்லாமிய சிறுமி மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அந்த சிறுமியர் ஆலந்துார் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.முன்னதாக மூதாட்டி ஒருவர் தன் மருமகள் இரண்டு பேத்திகளை தன்னிடம் இருந்து ஷெரார்டு பிரித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக ஆதம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

மூதாட்டி நான் நிர்மலா இமானுவேல் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தோம். அவரின் உத்தரவின் படி பரங்கிமலை துணை கமிஷனர் விசாரித்தார்.

பின் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் தலைமையில் மகளிர் போலீசார் விசாரித்து நவ. 6ல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஷெரார்டு மனோகர் உடந்தையாக இருந்த அவரின் மனைவி ஹெலன் கார் டிரைவர் ஜீவா ஜேக்கப் என்கிற ஜீவானந்தம் பெண் ஊழியர் விஜயலட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஷெரார்டு ஹெலன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சர்ச்சுக்கு வரும் பெண்களை வைத்து மகளிர் சுய உதவி குழு பெயரில் வங்கிகளில் கடன் வாங்குவது அவர்களின் நகை பணம் பெறுவது போன்ற மோசடிகளில் மனோகர் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 22 பேர் உள்துறை செயலர் ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதானவர்கள் ஆக்கிரமித்துள்ள சர்ச் அதை ஒட்டிய வீடு மற்றும் சமையல் கூடம் தான் குற்றம் நடந்த இடம். எனவே சர்ச்சுக்கு ‘சீல்’ வைக்குமாறு சமூக நலத்துறை வருவாய் துறை செயலர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கலெக்டர் அமிர்தஜோதியை ஐந்து முறை சந்தித்தும் தென்சென்னை ஆர்.டி.ஓ. ஆலந்துார் தாசில்தாரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சீல் வைக்கக் கோரி 12 பேர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளோம்.

இந்த சூழலில் இரு மாதங்களுக்கு முன் தம்பதியர் சிறையில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் சர்ச் உள்ள இடத்தை விற்கும் நோக்கில் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் அவசர கதியில் சர்ச் கட்டடத்தில் உள்ள ஜன்னல் கதவுகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர் அனுமதி பெறாமல் நடத்தும் ஏ.சி.ஏ. ஜீசஸ் மிராக்கஸ் மினிஸ்ட்ரீஸ் சர்ச்சுக்கு ‘சீல்’ வைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

டாக்டர்.பாரிவேந்தர் பிறந்த நாளை ஒட்டி ஐஜேகே சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு,பேனா வழங்கப்பட்டது.

டாக்டர்.பாரிவேந்தர் பிறந்த நாளை ஒட்டி ஐஜேகே சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு,பேனா வழங்கப்பட்டது.

August 24, 2024

What Your Legs Could Be Telling You About Your Heart Health

January 16, 2020
Narendra Modi

ஈரோடு,விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரத்தில் ரூ.151 கோடிக்கு 18 தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவுகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்.

October 30, 2024

பழனி மலைக்கும் அமெரிக்க விஞ்ஞானி நிக்கோலஸ் டெஸ்லாவுக்கும் என்ன சம்பந்தம் ?

April 9, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x