சாமானிய மக்களுக்கு ஒரு நீதி எம்.பி க்கு ஒரு நீதியா? வசந்தகுமார் இறுதி ஊர்வலத்தில் கரொனா கட்டுபாடுகள் எல்லாம் எங்கே!

மறைந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கரொனா கட்டுபாடுகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. சமுக இடைவெளி கடைபிடியுங்கள் என்று தொலைபேசி அமைப்புக்கள் வரும் பொழது தினமும் வரும் விளம்பரங்கள் எல்லாம் அறவே கிடையாது. ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி ஊர்வலத்தில் எந்த வித சமுக இடைவெளி இல்லாமல் நடந்தே சென்றனர் .சென்னையில் பொதுமக்கள் அனுமதி செலுத்த காமராஜர் அரங்கத்தில் வசந்தகுமார் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள் கூட்டம் கூட்டினார்கள். கன்யாகுமரியில் ஊர்வலம் இதெற்கெல்லாம் அனுமதி வழங்கியது யார் ? மேலும் ஒருவர் கொரோனவால் இறந்துவிட்டால் அவர் முகத்தை பார்க்க கூட பார்க்கா அனுமதிக்காத இந்த அரசு திருமாவளவன் அக்கா இறந்த போதும் இதே போல் தான் அரசின் உத்தரவுகள் காற்றில் பறக்கவிடப்பட்டது.

கொரோனா காலகட்டத்தில் இறந்த கொரோனா களப்பணியாளர்கள் காவலர்கள் ஆகியோரை அவர்களின் சொந்தங்கள் பார்க்க கூட அனுதிக்கவில்லை. மேலும் ஒரு பையால் முகம் முதல்காலின் அடி வரை பிளாஸ்டிக் பையால் மூடப்பட்டு புதைத்தார்கள். எந்த வித சடங்குகள் இன்றி.கொரோனாவால்இறந்த மருத்துவரை இரவோடு இரவாக புதைத்தும் அதில் ஏற்பட்ட பிரச்சனைகளும் அனைவருக்கும் தெரிந்ததே

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த கடும் கட்டுபாடுகள் விதிக்கும் அரசாங்கம் இதில் ஏன் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூட எடுக்கவில்லை. எல்லா சட்டங்களும் அப்பாவி மக்களுக்குத் தான் ஒழிய அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பதை மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் இறுதி ஊர்வலம் வெளிச்சம் போட்டு காட்டியது. மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நல்ல மனிதர் அவர் இழப்பு மிகவும் வருத்தத்திற்குரியது. இருந்தாலும் சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.

தமிழக அரசே உங்கள் நியாயம் தான் என்ன சாமானிய மக்கள் என்றால் கிள்ளு கீரையா? கொரோனவால் பாதிக்கப்பட்டு இறந்த நண்பரின் அம்மாவிற்கு அவரை காரியம் கூட செய்யவிடாத அரசே ஏழை ஆன்மாக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது?

காங்கிரஸ் கட்சிக்கு அறிவு இருக்கிறதா கொரோனா பரவிவரும் நிலையில் இவ்வாறு ஊர்வலம் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தால் இதனால் கொரோனா பரவதா. எங்கே சென்றது உங்களின் குரல் எப்போதும் கொரோனா கட்டுப்படுத்துவதில் அரசு தவறவிட்டது என வாய்கிழிய பேசுவோர் இப்போது எங்கே சென்றார்கள். நீங்களே காட்டியும் கொடுப்பீர்கள் கூட்டியும் கொடுப்பீர்கள் அது தானே காங்கிரஸ்

கொரானா பாதித்த சமானிய மனிதனின் பிரேதத்தை தர மறுக்கும் அரசாணை.எப்படி வசந்தகுமாரின் உடலை மட்டும் வீடு பவனம்.மற்றும் 600 கி.மீ எடுத்துச்செல்ல அனுமதித்தது. திருமாவளவன் அக்காவுக்கும் இதே சிபாரிசுகள் ஏன்?

தமிழக ஏழைகளின் குமுறல்கள்!

Exit mobile version