உலகத்தை ஆட்டி படைத்தது வரும் கொடிய வைரஸ் கொரோனா. இது உலக அளவில் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 ஆயிரம் பேர் பலியாகியுள்ளார்கள் இந்தியாவில் த்ரோபோது வரை 1000 மக்களுக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில் கொரோனா பரவாமல் இருப்பதற்கு நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு.
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது வேகமாக பரவி வருவதை தொடர்ந்து அதன் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் பல பிரபலங்கள், தாராளமாக நிதி அளித்து வருகின்றனர். டாடா குழுமம் மட்டுமே 1500 கோடி நிதி வழங்கியுள்ளது. பா.ஜ.க எம்.பிக்கள் அனைவரும் தலா 1 கோடி வழங்கியுள்ளார்கள்.

இந்நிலையில், அதானி குழுமம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், அரசுக்கு உதவ, பிரதமர் அவசரகால நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்குகிறது’ என பதிவிட்டுள்ளார்.
இதே போல், ஜே.எம்.டபிள்யூ குழுமமும் ரூ.100 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்னும் பாருங்கள் சன் குழுமம் வேடிக்கை தான் பார்க்கிறது
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















