புனேவை சேர்ந்த 22 வயதான சந்த் அக்பர் ஷேக் தனது இன்ஸ்டாகிராமில் பழகிய 16 வயது சிறுமியை ஏமாற்றி கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்நது சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சந்த் அக்பர் ஷேக் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.
அக்பர் ஷேக் என்பவன் இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாக பழகி வந்துள்ளார்கள். ஒருமாதம் தான் பழகியுள்ள நிலையில் அக்பர் ஷேக் அண்ணன் போல் அக்கறையாக பேசி வந்துள்ளான்.
சிறுமியிடம் ரொம்ப அக்கறையுடன் நடந்துகொள்வது போல் நடித்துள்ளான், ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர் சிறுமியை அவளது வீட்டில் சந்தித்துள்ளான். அண்ணன் போன்று பழகியதால் சிறுமியும் வீட்டிற்கு வர வைத்துள்ளார்.
சிறுமியை சந்தித்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை இதை பயன்படுத்தி கொண்ட காமக்கொடூரன் தனது வைக்கின்ற புத்தியை சிறுமியிடம் கட்டியுள்ளான். அவள் வீட்டில் தனியாக இருந்ததால் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
தம்மை நாசம் செய்ப்பட்டதை அந்த சிறுமி தாயிடம் சொன்னதை தொடர்ந்து அவரது தாயார் அறிந்ததும், அவர் காம கொடூரன் அப்துல் ஷேக் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல் துறை தேடுதல் வேட்டையில் 22 வயதான சந்த் அக்பர் ஷேக் கைது செய்யப்பட்டு அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவன் செப்டம்பர் 21 வரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளான்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















