Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

இந்திய வரலாற்றில் முதன் முறையாக கடல் தாண்டி சென்று குற்றவாளியை தூக்கிய அண்ணாமலை !

Oredesam by Oredesam
August 7, 2023
in அரசியல், செய்திகள்
0
இந்திய வரலாற்றில் முதன் முறையாக கடல் தாண்டி சென்று  குற்றவாளியை தூக்கிய அண்ணாமலை !
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வரலாற்றில் முதன் முறையாக கடல் தாண்டி சென்று குற்றவாளியை தூக்கிய அண்ணாமலை !

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் பன்னஞ்சே ராஜா, பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய நிழல் உலக தாதா பன்னஞ்சே ராஜாவை மொரோக்கோ நாட்டிற்கு சென்று சேசிங் செய்து கைது செய்துள்ளார் முன்னாள் காவல்துறை அதிகாரியும் தற்போது தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை அவர்கள்.

READ ALSO

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

ரியல் எஸ்டேட் துறையில் கர்நாடகா மாநிலத்தையே கன்ட்ரோலில் வைத்திருப்பது முத்தப்பா ராய் தான்.  பெங்களூரு நகரின் முன்னாள் நிழல் உலக தாதா,தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் போன்ற பெரிய டான்களுக்கே குடைச்சல் கொடுத்த படா பெங்களூரு டான். 

அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கொலைகள் என அசால்ட்டாய் ஆட்கள் வைத்து ஏ.டி.எம் மெஷின் போல பணம் கொடுத்தால் ஆட்களை ஸ்கெட்ச் போட்டு ‘செய்யும்’ பலே தாதா. இதனாலேயே ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் செல்லப்பிள்ளையாய்க் குறுகிய காலத்திலேயே ஆக்டோபஸாய் பெங்களூருவையே அசாதாரணமாய் வளைத்துவிட்டார் ‘அப்பா’ என செல்லமாக அழைக்கப்படும் முத்தப்பா ராய்.

இந்த காலகட்டத்தில் தான் பன்னஞ்சே ராஜா 1998ல், கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு கொண்டு, முத்தப்பாராய் கோஷ்டியுடன் தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். பின் சட்டத்திற்கு புறம்பான பல தொழில்களை செய்து தன்னை தாதாவாக அடையாளப்படுத்தி வலம் வந்தான்.

பன்னஞ்சே ராஜா கைது செய்ய பல தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கியது கார்நாடக காவல்துறை. இதனை தொடர்ந்து துபாய்க்கு தப்பியோடிய பன்னஞ்சே ராஜா அங்கு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அதே போன்று, பல்லாரி, மங்களூரு உட்பட, கர்நாடக மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் மாமூல் வசூலிப்பது, தொழிலதிபர்களை மிரட்டுவது, கொலை செய்வது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். துபாயில் இருந்து கொண்டே, தன் கூட்டாளிகள் மூலம், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

மைக்கோ லே – அவுட்டை சேர்ந்த தொழிலதிபரை மிரட்டியது உட்பட, பெங்களூருவில், பன்னஞ்சே ராஜாவுக்கு எதிராக, 11 வழக்குகள் பதிவாகியிருந்தன. அவர் மீது, மங்களூருவில் கலவரத்தை ஏற்படுத்தியது, ஆள் கடத்தல் உட்பட பெரும்பாலான வழக்குகள் உள்ளன. இதுவரை, மாநிலத்தில், 26 வழக்குகள் தொடர்பாக, பன்னஞ்சே ராஜாவை போலீசார் தேடி வந்தனர். கடந்த 1997ல், ரவுடி சீனாவின் கொலை வழக்கு, முன்னாள் நிழல் உலக தாதா ஸ்ரீதரை கொல்ல முயற்சி, பில்டர் சுப்புராஜூ கொலை வழக்கு போன்ற வழக்குகளிலும், பன்னஞ்சே ராஜாவுக்கு தொடர்புள்ளது.

பன்னஞ்சே ராஜாவின் வீடு, உடுப்பி மான்வியில் உள்ளது. கடந்த 2009 அக்டோபரில், அபுதாபியிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம், மலேசியாவுக்கு தப்பி செல்ல முயற்சித்தவரை, விமான நிலையத்தில், துபாய் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து, அவரை கைது செய்து அழைத்துவர, கர்நாடக போலீசார் முயற்சித்தனர். ஆனால், அவர் அங்கிருந்து வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொரோக்கோவுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.தப்பியோடி விட்டதால், அவரை கைது செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

அடுத்த முயற்சியில் 2015 ஆம் ஆண்டு பக்காவாக ஸ்கெச்ட் போட்டது அண்ணாமலை டீம் மொரோக்கோ சென்று அங்குள்ள விமான நிலையத்தில் சேஸிங் செய்து குற்றவாளியை பிடித்து கைது செய்துள்ளார் பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை அவர்கள். மொராக்கோவில் இருந்து நிழல் உலக தாதா பன்னஞ்சே ராஜாவை அழைத்து வந்தது, தப்பியோடிய தாதா மற்றும் அவரது ஆட்கள் முன்வைத்த 18 ஆண்டுகால சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக, இந்தியாவுக்கு வெளியில் இருந்து செயல்பட்டு வந்த குற்றவாளியை மாநில காவல்துறையினர் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்து தண்டனை பெற்று கொடுத்தது இதுவே முதல்முறையாகும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சென்னையில் பயங்கரம் திமுக வட்ட செயலாளர் வெட்டிக்கொலை !

சென்னையில் பயங்கரம் திமுக வட்ட செயலாளர் வெட்டிக்கொலை !

February 2, 2022

சீர்காழியில் மீன் மார்க்கெட் கட்டுவதை எதிர்த்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.

August 6, 2020
தலித் இளைஞரை வெட்டி கொன்ற சம்பவம்! வாய் மூடி வேடிக்கை பார்க்கும் திருமா மற்றும் RSB மீடியாக்கள்!

தலித் இளைஞரை வெட்டி கொன்ற சம்பவம்! வாய் மூடி வேடிக்கை பார்க்கும் திருமா மற்றும் RSB மீடியாக்கள்!

October 16, 2021
தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறாதது ஏன்? மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறாதது ஏன்? மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

January 18, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x