அண்ணாமலையின் அதிரடிக்கு திமுக பணிந்தது – மோடிக்கு எதிரான சுவர் விளம்பரங்கள் அழிப்பு …

பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலையின் அதிரடிக்கு திமுக பணிந்தது – மோடிக்கு எதிரான சுவர் விளம்பரங்கள் அழிப்பு …

அண்ணாமலை பாஜகவில் இணைந்தபோது சமூக வலைத்தளத்தில் ஒரு திமுக உடன்பிறப்பு கேலியாக கேட்கிறார், “யாருப்பா அது அண்ணாமலை? 

பால்காரர் தானே?”.  அதற்கு ஒரு காவியின் பதில், “அண்ணாமலை பால்காரர் தான்; திமுகவுக்கு பால் ஊத்துவார்” .

அண்ணாமலை அண்மையில் கரூர் மாவட்ட திமுக மற்றும் செந்தில் பாலாஜிக்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார். 

“இன்னும் ஏழு நாட்களுக்குள் மோடிக்கு எதிராக எழுதப்பட்ட சுவர் வாசகங்களை அழிக்காவிட்டால், நானே முதல் ஆளாக வந்து உங்கள் சுவர் விளம்பரங்களை அழிப்பேன்.

அதுமட்டுமல்ல அஞ்சு கட்சி அம்மாவாசை என்றும் சுடலை என்றும் எழுதுவேன் என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த எச்சரிக்கையை அடுத்து நேற்று கரூர் நகரில் திமுக சார்பான சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டிருந்த மோடி எதிர்ப்பு வாசகங்கள் அழிக்கப்பட்டன. 

இதுகுறித்து பாஜக வின் எஸ்.ஜி. சூர்யா ட்விட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார்..

திமுகவுக்கு பாகிஸ்தானுடன் கள்ள உறவு உள்ளதா?  கோ பேக் மோடி என்று ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்யப்பட்டபோது 80 சதவிகிதத்திற்கும் அதிகமான ட்வீட்கள் பாகிஸ்தானிலிருந்து பதிவுசெய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கோ பேக் மோடி என்ற வாசகம் திமுகவின் கண்டுபிடிப்பு அல்ல, அது பாகிஸ்தானிய தீவிரவாதிகள் உருவாக்கிய கோஷம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமல்ல அண்மையில் திமுகவின் குடும்ப வாரிசு உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் இந்தியாவின் வரைபடம் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் காஷ்மீர் பகுதிகள் இந்தியாவின் வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டு பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டிருந்தன.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் உருவாக்கிய வாசமான கோ பேக் மோடி என்பது கரூர் சுவர் விளம்பரங்களில் திமுக சார்பாக திடீரென்று வரையப்பட்டன. 

பாஜகவின் அண்ணாமலையின் எச்சரிக்கைக்குப் பயந்து இந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.பயம் நல்லது.  

கட்டுரை:- எழுத்தாளர் பத்மநாபன் நாகராஜன்

Exit mobile version