நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அண்ணாமலை அவர்கள் திமுகவிற்கு பல்வேறு கேள்விகளை முவைத்தார் ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல்,டீசலை கொண்டு வந்தால் 30 முதல் 35 ரூபாய் விலை குறையும் .தமிழக அரசு எதற்காக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என மக்களுக்கு விளக்க வேண்டும்!
பேட்டியின் இடையே செய்தியாளர் ஒருவர் அண்ணாமலையிடம் திருமுருகன் காந்தி அண்ணாமலை அவர்கள் ஒரு அரசியல் தலைவர் கிடையாது, மேகதாதுவிற்கு எதிராக போராடியவர் கர்நாடகாவுக்கு எதிராக போராடுவாரா என கேள்வி எழுப்பியுள்ளார் என அண்ணாமலையிடம் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை மாத பெயரில் நாள் பெயரில் வைத்தவர்களுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என்றும், மேலும் நாங்கள் 18 கோடி உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய கட்சி நாட்டினை ஆளும் கட்சி, பல மாநிலங்களில் ஆளும் கட்சி,அதனால் இந்த டிவிட்டரு, லெட்டர் பேடு கட்சிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. என திருமுருகன் காந்தியை சம்பவம் செய்துவிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















