விநாயகர் சதுர்த்தியை தடுக்க மூன்றாவது அலை பீதியை கிளப்பும் இந்து விரோத சிவசேனா…

விநாயகர் சதுர்த்தியை தடுக்க மூன்றாவது அலை பீதியை கிளப்பும் இந்து விரோத சிவசேனா…

“நாக்பூரில் கோவிட் தொற்று இரட்டிப்பாகி விட்டது. இது மூன்றாவது அலை வந்துவிட்டது என்பதை உறுதி செய்கிறது. எனவே, லாக்டௌன் அறிவிக்கிறோம்.” என்று சிவசேனா நிதின் ராவுத் செப்டம்பர் 6 அன்று அறிவிக்க…

உடனே மும்பை மேயர் கிஷோரி பட்னேகர் (சிவசேனா) “மூன்றாவது அலையை நாக்பூர் உறுதி செய்துள்ளது. எனவே, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்” என அறிவித்திருக்கிறார்.அமைதிமார்க்க அன்புமார்க்க கொண்டாட்டங்களுக்கு எந்த தடையும் இல்லை.

ஆனால் இந்துக்கள் கொண்டாடினால் கண்ணெரிச்சல் இவர்களுக்கு.சரி… சிவசேனா நிதின் ராவுத், “தொற்று இரட்டிப்பாகி விட்டது” என்று சொனாரே…? ஆமாம் – செப்டம்பர் 4இல் 6 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை, செப்டம்பர் 5இல் 12ஆக உயர்ந்தது.

இரட்டிப்பு தானே? அடேய்….! நாக்பூர் நியூஸ் தளம் செய்திப்படி அந்த எண்ணிக்கை இன்று மீண்டும் 6 ஆகியுள்ளது.மொத்தத்தில் விநாயக சதுர்த்தி தடைக்கு ஒரு நொண்டிச் சாக்கு! குறிப்பு: இரண்டாவது அலை வரக் காரணம் – புதிய டெல்ட்டா வகை + பலருக்கும் தடுப்பூசி போடாததால் (தடுப்பூசி பயம் / தயக்கம்) நோய் தொற்று அபாயம்.

அதே போல மூன்றாவது அலை வரவேண்டுமென்றால், டெல்டாவை போல புதிய வகை கொரோனா வைரஸ் வர வேண்டும் (variant / mutant). அதோடு, மக்களும் வியாதி “தொற்றக்கூடியவர்களாக” இருக்க வேண்டும். அந்த தொற்றக்கூடிய அபாயாம் இல்லை என்றே கூறலாம் – ஏனெனில் பெரும்பாலோருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. டெல்டா variantஐ இந்திய தடுப்பு மருந்துகள் தாக்குப் பிடித்தன.

அதே போல, புதிய variant வந்தாலும் அவை தாக்குப் பிடிக்க வாய்ப்பு என்கிறார்கள். எனவே, புதிய variant வராத வரை, மூன்றாவது அலைக்கு வாய்ப்பு குறைவு என்கிறார்கள். என்றாலும், மைனாரிட்டிகள் சந்தோஷப்படுவார்கள் இந்து பண்டிகைகளுக்கு தடை விதித்தால் என்ற ஒரே காரணத்துக்காக இந்த கேப்மாரி தனத்தை செக்குலர் சேனா, காங், விடியல்கள் செய்கின்றன.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.

Exit mobile version