காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் செய்த பேஸ்புக்கில் இஸ்லாம் குறித்தும் முகமது நபி குறித்தும் பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றை பகிர்கிறார்.இதனால் ஆத்திரம் அடைந்த முஸ்லீம்கள் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி. 60க்கும் மேற்பட்டோர் காயம். எம்எல்ஏ வின் இரண்டு கார்களுக்கு தீவைப்பு.தீயணைப்பு வாகனங்கள் மீது தாக்குதல்.டிசிபியின் இரண்டு கார்கள், இருசக்கர வாகனங்கள் தீவைப்பு பெங்களூரு நகரத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு.கலவரக்காரர்கள் 110 பேர் கைதாகி உள்ளார்கள் .
எதற்காக முகமது நபியை பற்றி பட்டியலின எம்.எல்.ஏ வின் உறவினர் முகநூலில் ஒரே ஒரு படம் போட்டதற்கு அதற்கு சம்பந்தமே இல்லாத பட்டியலின எம்.எல்.ஏ வின் வீட்டை அடித்து நொறுக்கியது என்ன வித நியாயம் ? நவீன் தண்டிக்கப்படவேண்டும் சட்ட ரீதியாக தவிர சட்டத்தை கையில் எடுத்தது எந்த வித பொறுப்பு என்பது புரியவில்லை
தமிழகம் வேற மாதரி பூமி நாம் எத்தனை அமைதியாக, சகிப்பு தன்மையுடன் இருக்கின்றோம். தமிழக தலைவர்களும் அதே போல் தான் பெங்களுருவில் நடந்த சம்பவம் ஏதும் தெரியாதது போல் இருப்பார்கள்.கருத்து சுதந்திரம் என்றால் என்ன என கேட்பார்கள்,மேலும் சமூக நீதிக்கு போராடும் தி.மு.க வாய் அனைத்தையும் மூடி கொண்டு இருக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளுக்கு சில கேள்விகள்
யூட்யூப், முகநூல் என நீங்க எந்த பக்கம் போனாலும் இந்து மத இந்து கடவுள்கள் அவதூறு மட்டுமே கொட்டி கிடக்கின்றது. இதை பார்த்து இந்துக்கள் கொதித்தெழுந்தால் அது கருத்து சுதந்திரம் என்பீர்களே இப்போது எங்கே போனது உங்களின் கருத்து சுதந்திரத்தின் பேச்சு
நடிகர் பிரகாஷ் ராஜ் நாட்டில் சகிப்பு தன்மை பற்றி வாய் கிழிய பேசுவாரே தற்போது எங்கே ஒளிந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறார்இந்து பெண்கள் அனைவரும் தவறான உடலுறவு கொள்பவர்கள் என விமர்சனம் செய்த பெருமாள் முருகனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு கரம் நீட்டினார் இது கருத்து சுதந்திரம் என்று தற்போது எங்கே உள்ளார்.
கந்த சஷ்டி கவசம் இழிவு படுத்தியதை திமுக எம்.பி ஆ.ராசா கருத்தியல் மோதலைக் கருத்தியலாகத்தான் பார்க்கவேண்டும் என புது விளக்கம் அளித்தார் இப்போது பட்டியலின எம்.எல்.ஏ தாக்கப்பட்டதற்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. சமூக நீதி காவலர்கள் கம்யூனிஸட் திருமாவளவன் போன்றோர் எங்கே சென்றார்கள்
இதற்கெல்லாம் மேலாக காங்கிரஸ் வாய் திறக்கவில்லை அவரது சொந்த கட்சி பட்டியலின எம்.எல்.ஏ மீது தாக்குதல் நடைபெற்றிருக்கிறது அதற்கு கருத்தும் தெரிவிக்கவில்லை கண்டனமும் தெரிவிக்கவில்லை.. காங்கிரசில் இருக்கும் இந்து பற்று கொண்ட எம்.எல்.ஏ எம்.பி களே சற்று கவனமாக இருந்து கொள்ளுங்கள்..
மேலும் தமிழக ஊடகங்கள்மயான அமைதியில் இருக்கிறார்கள் இதுவே இந்துக்கள் செய்திருந்தால் எவ்வளவு பிரேக்கிங் நியூஸ் எவ்வளவு விவாதம் என ஒரு வாரத்திற்கு இந்த சம்பவம் வைத்து பணம் பார்த்திருப்பார்கள். எல்லாரும் ஏன் அமைதியாக உள்ளார்கள் எல்லாவற்றிருக்கும் காரணம் ஒன்றே ஒண்டுக்கு தான் ஓட்டு வங்கி.நாம கடந்து போறோம். ஆனால் பெங்களுருவில் ஆளை கடத்தி மிரட்டல் விடுகிறார்கள் கலவரம் செய்கிறார்கள்.இதற்கு யாரும் வாய் திறக்கமாட்டோம். நல்ல வேளை இது பா.ஜ.க எம்எல்ஏ செய்யவில்லை செய்திருந்தால் நாடு கலவர பூமியாக மாற்றிருப்பார்கள்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















