வெளிமாநிலத்தவர் என்ற போர்வையில் வங்கதேசத்தவர்கள் ஊடுருவல்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு பல தளர்வுகளுடன் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர் அவரவர் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர் .

மத்திய அரசு இதற்கென தனி சிறப்பு ரயில்கள் இயக்கி புலம் பெயர் தொழிலார்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்ப படுகிறார்கள். சில தொழிலாளர்கள் சைக்கிள் மற்றும் நடந்தும் சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் வெளிமாநிலங்கள் சேந்தவர்கள் அவரவர் சொந்த மாநிலம் செல்ல வேண்டுமானால் தமிழக அரசில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் பின்பற்றி பதிவு செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளது. ஆனாலும்வெளி மாநிலத்தவர் சைக்கிள் நடை பயணமாக செல்லுகிறார்கள்.

ஏன் என விசாரித்த போது அவர்களிடம் போதிய ஆவணங்கள் இல்லை என்னும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதன் காரணமாக தான் அங்கங்கு வெளி மாநிலத்தில் இருந்து வந்து வேலை செய்தவர்கள் கூட்டு சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்

வன்முறையில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் போது அவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்துள்ளார்கள். அவர்களின் ஆவணங்களை கேட்கும் போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து உள்ளார்கள். பின் தீவிர விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் மேற்கு வங்கம் வந்து பின் தமிழகம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

சென்னையில் மட்டும் 73000 வங்காள தேசத்தவர்கள்.உரிய அனுமதி இன்றி ஊடுருவியர்கள். என தெரிய வந்துள்ளது .இது கொரானாவால் வெளி வரும் உண்மைகள்.சென்னையில் மட்டுமே இவ்வளவு பேர் என்றால் தமிழகம் முழுக்க,நாடு முழுக்க எவ்வளவு பேர் இருப்பார்கள். ஏன் CAA வை எதிர்க்கிறார்கள் என்பது இப்போது நன்கு புரியும்.

Exit mobile version