Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

பிகாரில் நிதிஷ்குமார் சகாப்தம் முடிந்து நித்தியானந் தராய் சகாப்தம் ஆரம்பம்

Oredesam by Oredesam
November 9, 2020
in அரசியல், செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

பீகார் தேர்தலின் பெரும்பாலான எக்சிட் போல்கள் நிதிஷ்குமார் அவுட் என்றே கூறுகின்றன. நிதிஷ் குமாரும் அதை உணர்ந்தே இதுதான் என்னுடைய கடைசி தேர்தல் என்று கூறி விட்டார். பிஜேபி எதிர் பார்த்ததும் இதைத்தான் .

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

நிச்சயமாக பீகார் தேர்தல் முடிந்த பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட இருக்கிறது. அது யார் தலைமையில் ஆட்சி? எந்த கூட்டணியின் ஆட்சி என்பதற்கான விடைகள் தா ன் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு
தெரிய வரும்.

இப்பொழுது உள்ள நிலையில் ஒரு கட்சிக்கான ஆட்சிக்கு நிச்சயமாக வாய்ப்புகள் இல்லை. பிஜேபி கூட்டணியோ இல்லை ஆர்ஜேடி கூட்டணியோ எந்த கூட்டணி
வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு இடையில் மிக அதிக அளவில் தொகுதி வித்தியாசம் இருக்க போவதில்லை.

எந்த கட்சி தனிப்பெரும் கட்சியாக வருகிறதோ அந்த கட்சியின் தலைமையில்தான் அடுத்து வரும் பீகார் ஆட்சி அமைய
இருக்கிறது.பீகாரில் பிஜேபி ஐக்கிய ஜனதா தளம் ராஷ்டிரிய ஜனதா தளம் இந்த மூன்று கட்சிகளும் சமபலத்தில் இருந்தாலும் வாக்கு வங்கி அடிப்படையில் பிஜேபிக்கு தான் 1ம் இடம்

ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 2வது இட ம் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 3 வது இடம்.இந்த அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் இருக்கலாம் இருக்கும் என்கிற அடிப்படையில் அடுத்து வரும் ஆட்சி யாருடையதாக இருக்கும் என்று பார்ப்போம்.

இந்த இடத்தில் ஒன்றை யோசித்து பார்க்க வேண்டும். கடந்த 2014 லோக் சபா தேர்தலில் பிஜேபிக்கும் நிதிஷ்குமார்க்கும் இடையே இருந்த கூட்டணி உடைந்ததால் பீகாரில் நீண்ட நாட்களுக்கு பிறகு
மும்முனை போட்டி நடைபெற்றது.

அதாவது பிஜேபி லோக்ஜன சக்தி ஆர் எஸ்எல்பி ஒரு கூட்டணி ஆர்ஜேடி காங்கிரஸ் ஒரு கூட்டணி நிதிஷ்குமார் ஒரு கூட்டணி என்று மும்முனை போட்டி நடை
பெற்றது. அதில் பிஜேபி கூட்டணிக்கு 31 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது பிஜேபி-2,2 லோக்ஜன சக்தி-6 ஐஆர்எஸ்
எல்பி-3 என்று பிஜேபி கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது.

நிதிஷ்குமார் பிஜேபி கூட்டணிக்கு வந்து 17 வருட தேர்தல் அரசியலில் அவர் இல்லாமல் தனியாக போட்டியிட்டு பிஜேபி தன்னுடைய வலிமை என்ன என்று பீகாரில் உணர்ந்த முதல் தேர்தல் 2014 லோக்சபா தேர்தல் தான்.முதல் தேர்தலிலேயே தன்னுடைய வலிமையை பிஜேபி உணர்ந்து கொண்டது.

ஆர்ஜேடி காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு,ஆர்ஜேடிக்கு 4 காங்கி
ரஸ் கட்சிக்கு 4 தேசிய வாதகாங்கிரஸ் கட்சிக்கு 1 என்று 7 தொகுதிகளும் நிதிஷ்குமார்க்கு 2 தொகுதிகளும் கிடைத்தது.

நிதிஷ்குமார் தன்னுடைய வலிமையை முதலில் உணர்ந்த தேர்தல் அது தான்.
பீகாரில் தன்னை தன்னிகரற்ற தலைவராக நினைத்து வலம் வந்து கொண்டு இருந்த நிதிஷ்குமார்க்கு பீகாரில் 3 வது இடம் தான் என்று உணர்த்தியதும் அந்த
தேர்தல் தான்.

அதனால் தான் பிஜேபியை வீழ்த்த தன்னுடைய பரம விரோதியான லாலுவுடன் கை கோர்த்து காங்கிரஸ் துணையுடன்
2015 சட்டமன்ற தேர்தலில் பிஜேபியை தோற்கடித்து 2014 லோக்சபா தேர்தலில் தன்னை தோற்கடித்த பிஜேபியை பழி
தீர்த்துக் கொண்டார்.

பிஜேபி கூட்டணியில் 17 வருடம் இருந்து மத்திய அமைச்சர் பீகார் முதல்வர் என்று அனுபவித்த நிதிஷ் பிஜேபியை பீகாரில் ஒழிக்க தன்னுடைய பரம விரோ தியான லாலுவுடன் கைகோர்த்து 2015 தேர்தலில் களம் கண்ட பொழுதே நிதிஷ்க்கு போட்டியாக நித்தியானந்த ராயை வளர்க்க ஆரம்பித்தது.

நித்தியானந்த ராய் இப்பொழுது மத்திய உள்துறை இணை அமைச்சராக இருக்கிறார்.

நித்தியானந்த ராய் கிரிராஜ் சிங்.
மாதிரி சர்ச்சைகளுக்கு உள்ளாகும் அரசியல் வாதி அல்ல. தேவேந்திரர் பட்னாவிஸ் மாதிரி ஒரு அறிவு ஜீவியான அரசியல் வாதி.

பீகார் அரசியலை தீர்மானிக்கும் யாதவ சமுதாயத்தில் இருந்து வந்தவர். அதனால் பீகார் அரசியலை தன்னுடைய ஆளு மைக்கு கொண்டு வர பிஜேபி வைத்து இருக்கும் துருப்பு சீட்டு நித்யானந்த ராய் தான்.

இந்த இடத்தில் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன். நிதிஷ்குமார் லாலு காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் வரை நமக்கு பீகாரில் மட்டுமல்ல மத்திய ஆட்சிக்கே டேஞ்சர் என உணர்ந்த பிஜேபி நிதிஷ்க்கு நூல் விட்டுக்கொண்டு இருந்தது.

இன்னொரு விசயம் தெரியுமா? நிதிஷ்குமார் மட்டும் லாலு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து இருந்தால் 2019 லோக் சபா
தேர்தலில் மோடிக்கு எதிராக அவர் தான் எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக இருந்து இருப்பார்.2019 தேர்தல் களம் கூட மாறி இருக்கும்.

இதனால் தான் பிஜேபி நிதிஷுடன் மீண்டும் கை கோர்க்க இறங்கி வந்தது.நிதி ஷ் உடனே அதை பற்றிக்கொண்டார்.ஏனெனில் தன்னுடைய அரசியல் அனுபவம் கூட வயதாக இல்லாத லாலு மகன்க ளின் ஆணவ அரசியலுக்கு கட்டுப்பட்டு இருக்க நிதிஷ் குமார் ஈகோ விரும்பாத தால் மீண்டும் பிஜேபி கூட்டணிக்கு வந்து விட்டார்.

ஆக நிதிஷ்க்கு இனி பிஜேபியை விட வேறு போக்கிடம் கிடையாது என்கிற நிலையை நிதிஷ்க்கு பிஜேபி உருவாக்கிவிட்டது.அதே நேரத்தில் நிதிஷ்குமார் இருக்கும் வரை பிஜேபி தலைமையில்
பீகாரில் ஆட்சி அமைய வாய்ப்புகள் இல்லை.

இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்த பிஜேபி இந்த சட்டமன்ற தேர்தலை சரியாக பயன் படுத்தி கொண்டது.பிஜேபி நினைத்து இருந்தால்லோக்ஜன சக்தியை கூட்டணிக்கு கொண்டு வந்து இருக்க முடியும்.


பீகாரில் ஆட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளதை மதுரையில் இரு க்கும் நானே அறியும் பொழுது டெல்லியி ல் இருக்கும் மோடி அமித்ஷா அறிய மாட்டார்களா..

லோக்ஜன சக்தி கூட்டணி யை விட்டு வெளியேறினால் அதனால்
பிஜேபி கூட்டணி யின் வெற்றி பாதிக்கும் என்று அறிய மாட்டார்களா..

அறிவார்கள்.இருந்தாலும் இப்பொழுது தேர்தலை நடத்தினால் நிதிஷ்குமார் வீழ்வார்.

அதனால் அவர் அரசியலை வி
ட்டே விலகுவார் அந்த இடத்திற்கு பிஜேபி வந்து விடலாம் என்பதற்கு தான் சிராக் பஸ்வானை வைத்து பிஜேபி வேட்பாளர்களுக்கு ஆதரவு நிதிஷ்குமார் வேட்பாள ர்களுக்கு போட்டிஎன்கிற விசித்திரமான
கூட்டணியை உருவாக்கியது பிஜேபி.

பிஜேபியின் நோக்கம் இந்த தேர்தலில் நிதிஷை பலம் இழக்க வைத்து பீகார் அரசியலில் இருந்து ஓரம் கட்டுவது தான்
பிஜேபி ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் பிஜேபி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால் நிதிஷ்குமாரே பிஜேபிக்கு
முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்துvவிட்டு அரசியலில் இருந்து விலகி விடுவார்.

இதற்கான வாய்ப்புகள் அதிகமாக இரு க்கிறது. அப்படி ஒரு சூழ்நிலை உருவா னால் பிஜேபியின் நித்தியானந்த ராய் தான் அடுத்த பீகார் முதல்வர் என்று உறு தியாக நம்பலாம்.இன்னொரு விசயமும்
நடக்க வாய்ப்புகள் இருக்கிறது.

அது என்னவென்றால் நிதிஷ்குமார் சிராக் பஸ்வானை வைத்து தனக்கு தண்ணி
காட்டிய பிஜேபிக்கு பாடம் கற்பிக்க மீண்டும் நிதிஷ்குமார் ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு அளிக்கலாம்

ஆனால் அப்படி நடந்தால் நிதிஷ் கட்சி பிஜேபிக்கு ஆதரவாக உடையவும் வாய்ப்புகள் இருப்பதால் நிதிஷ்குமார் பிஜேபி
தலைமையில் ஆட்சி அமைய வழி விட்டு ஒதுங்கி விடுவார்.

ஒரு வேளை ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்து விட்டால் பிஜேபி இப்போதைக்கு
அமைதியாகி விடும்.

தேஜஸ்வி யாதவ் முதல்வராகி விடுவார்.ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும்
குறைவு என்பதால் பீகாரில் பிஜேபி தலைமையில் ஆட்சி அமையவே நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அதாவது பீகா ரில் நிதிஷ்குமார் சகாப்தம் முடிந்து நித்தி யானந்த ராய் யாதவின் சகாப்தம் ஆரம்ப
மாகிறது…

கட்டுரை:- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
அரசியல்

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தமிழகத்தில் மின்வெட்டு! செந்தில் பாலாஜியின் பொய்யான தகவலை வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்டாலின்..

தமிழகத்தில் மின்வெட்டு! செந்தில் பாலாஜியின் பொய்யான தகவலை வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்டாலின்..

April 25, 2022
இந்துக்களின் ஒற்றுமை ஓங்கியது! சேதப்படுத்தப்பட்டசிறுவாச்சூர் கோவிலை மீண்டும் புதுப்பிக்க 7 மணி நேரத்தில் 12 லட்சம் நன்கொடை!

இந்துக்களின் ஒற்றுமை ஓங்கியது! சேதப்படுத்தப்பட்டசிறுவாச்சூர் கோவிலை மீண்டும் புதுப்பிக்க 7 மணி நேரத்தில் 12 லட்சம் நன்கொடை!

October 11, 2021
அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

தெலுங்கானாவில் அடுத்த தேர்தல் அமித்ஷா அடுத்த திட்டம் என்ன ?

December 7, 2020
aditya l1 mission

இஸ்ரோவின் அடுத்த டார்கெட் சூரியன்! உலகின் விண்வெளிதுறையை மிரட்ட வருகிறது ஆதித்யா L1.

August 16, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x