தெலுங்கானாவை புரட்டிப்போட்ட பாஜக யாத்திரை! கொடியே பறக்க முடியாத இடத்தில் ஓங்கி ஒலித்த பாரத் மாதா கி ஜெய் !

ஒரு காலத்தில் ஓல்டு சிட்டி என்று அழைக்கப்படும் ஹைதரபாத்தின் அடையாளமான சாரமினார் அருகே பி.ஜே.பிக்கொடி தாங்கி யாரும் செல்ல முடியாது ஆனால் இப்பொழுது சார்மினாரை சுற்றி பாஜகவினரின் கொடி தான் பறக்கிறது அங்கே பிரமாண்ட கூட்டமே நடத்தும் அளவிற்கு பாஜக வளர்ந்துள்ளது.

தெலுங்கானா மாநில பிஜேபி தலைவர் பண்டி சஞ்சய் குமாரின் பிரஜா சங்க்ரம யாத்திரையின் ஆரம்பம் சார்மினாரை புரட்டி போடும் அளவுக்கு செம கூட்டம். சார்மினாரின் ஓரத்தில் உள்ள அன்னை பாக்யலஷ்மி கோயிலில் இருந்து பண்டி யாத்திரையை துவக்கி இருக்கிறார்.

ஹூசுராபாத்தில் யாத்திரை முடிவடைகிறது.ஹூசுராபாத் எம்எல்ஏவாக இருந்த எடலா ராஜேந்தர் தெலுங்கானா சுகாதார அமைச்சராக இருந்தவர் எடலா ராஜேந்தர் தன்னுடைய எல்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பிஜேபிக்கு வந்து விட்டார்.

இதனால் மிக விரைவில் ஹூசுராபாத்தில் இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்புகள இருக்கிறது. இதன் காரணமாக தான் பிரஜா சங்க்ரம யாத்திரை சார்மினாரில் உள்ள பாக்யலஷ்மி கோயில் இருந்து ஆரம்பித்து ஹூசுராபாத்தில் முடிவடைகிறது.

ஹூசுராபாத்தில் பிஜேபி வெற்றி பெறுவது உறுதி.தெலுங்கானாவில் 2023 ல் ஆட்சி அமைய ஹூசுராபாத் நிச்சயமாக பாஜகவிற்கு நுழைவாயிலாக இருக்கும் இந்த நுழைவாயில் அடித்தளம் தான் இந்த கூட்டம் என்கிறார்கள், உள்ளுர் பாஜகவினர்.

மேலும் ஹூசுராபாத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றால் சார்மினாரை புரட்டி போட்டு அங்கு இருந்த அன்னை பாக்யலஷ்மியி ன் கோயிலை பிரமாண்டமாக கட்டவும்முடிவு செய்துள்ளது. இது நடந்தால் தெலுங்கானாவில் மிக பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

அன்னை பாகய்லஷ்மி அருள் பாவிக்கும் பாக்ய நகரை முகம்மது குலி குதுப் ஷாவி 1590 ல் ஹைதராபாத்தாக மாற்றி பாக்யநகரின் வரலாற்றை மாற்றினார்.

இது நம்முடைய காலம்.தெலுங்கானாவில் பி ஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வே லை ஹைதராபாத்தும் சார்மினாரும் இந்திய வரலாற்றில் இந்து அடையாளமாக்க ப்படும்அதற்கான ஆரம்பம் தான் இந்த பிரஜாசங்க்ரம யாத்திரை..என்கிறது தெலுங்கானா பாஜக

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version