Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

நல்ல செய்தி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக்கூடும் வரி விலக்கு உட்பட பம்பர் பரிசுகள்…..

Oredesam by Oredesam
January 27, 2022
in இந்தியா, செய்திகள்
0
நல்ல செய்தி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக்கூடும் வரி விலக்கு உட்பட பம்பர் பரிசுகள்…..
FacebookTwitterWhatsappTelegram

பிப்ரவரி 1 ஆம் தேதியன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இந்த முறை பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. 

பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாலும், கொரோனா பாதிப்பால் பணவீக்கம் அதிகரித்து வருவதாலும், இந்த பட்ஜெட்டில் (Budget 2022) தங்களுக்கு அரசு நிவாரணம் அளிக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். இந்த வரிசையில், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிப்படுவதைத் தவிர, பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கும் பெரிய நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளாக வரி செலுத்துவோர் பெரிய பலனைப் பெறும் வகையிலான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இவ்வாறான நிலையில் இம்முறை அரசாங்கம் வரிவிலக்கை பரிசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

அரசாங்கம் நல்ல செய்திகளை வழங்கக்கூடும்

இந்திய வங்கிகள் சங்கம் (IBA) 3 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்புத்தொகையை வரி விலக்கு வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்தால் நிச்சயம் பெரிய நிவாரணம் கிடைக்கும். வரி செலுத்துவோரை மகிழ்விக்க அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

எஃப்டிக்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை

இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) வரியில்லா நிரந்தர வைப்புத்தொகையின் (Fixed Deposit) லாக்-இன் காலத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, ​​5 வருட FD-க்கு வரி விலக்கு கிடைக்கிறது. ஆனால், அதை 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சங்கத்தின் கூற்றுப்படி, 3 வருட FD-யை வரி விலக்கின் கீழ் கொண்டு வருவதன் மூலம், வரி செலுத்துவோருக்கு மற்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கான வசதியும் கிடைக்கும். 

தற்போது மக்கள் குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக எஃப்டிக்கு பதிலாக பிபிஎஃப் மற்றும் சுகன்யா போன்ற பிற திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்கிறார்கள். அதே சமயம், மியூச்சுவல் ஃபண்டுகளும் துணிகர முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

80C வரம்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தற்போது 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வரிவிலக்கு (Tax Exemption) அளிக்கப்படுகிறது. இதில், பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா, ஆயுள் காப்பீடு என பல திட்டங்கள் உள்ளன. முன்னதாக 2014-ம் ஆண்டு 80சி வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதாவது கடந்த 8 வருடங்களாக இதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. குறிப்பாக சம்பளம் பெறும் வகுப்பினருக்கு, வரியைச் சேமிக்க 80சி பிரிவு சிறந்த வழியாக உள்ளது. இந்தப் பிரிவின் கீழ் அரசு விலக்கு வரம்பை அதிகப்படுத்தினால், அதிகமானோர் அதில் முதலீடு செய்வார்கள்.

அடிப்படை வரம்பை அதிகரிக்கலாம்

அடிப்படை வரி விலக்கு வரம்பு தற்போது ரூ.2.5 லட்சமாக உள்ளது. முன்னதாக 2014-ம் ஆண்டு இது 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக இதிலும் எந்த மாற்றமும் இல்லை. 

எனவே, வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அரசாங்கம், அடிப்படை வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அடிப்படை வரம்பு அதிகரிக்கப்பட்டால், வரி செலுத்துவோர் அதாவது ஒரு குறிப்பிட்ட வகுப்பின் வாக்காளர்கள் மகிழ்ச்சியடையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

source zee news

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

படுதோல்வி அடைந்த “ஒன்றிணைவோம் வா” திட்டம், பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகம் அனைத்தும் தொடர்ந்து தோல்வி அதிர்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின்

படுதோல்வி அடைந்த “ஒன்றிணைவோம் வா” திட்டம், பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகம் அனைத்தும் தொடர்ந்து தோல்வி அதிர்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின்

August 14, 2020
பஞ்சாபிலும் காங்கிரஸ் கதை முடிகிறது பாஜகவில் இணையும் முதல்வர்.

சித்து விளையாட்டால் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி டமால் !

September 18, 2021
rasipalan

ஜோதிடம் என்றால் என்ன ! அது உண்மையா ?

March 5, 2024
சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக ”ஜெய்பீம் சூர்யா” மீது அமலாக்க பிரிவு அதிரடி நடவடிக்கை பாய்கிறதா !

சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக ”ஜெய்பீம் சூர்யா” மீது அமலாக்க பிரிவு அதிரடி நடவடிக்கை பாய்கிறதா !

November 18, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x