Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் வழக்கில் உள்ளே வரும் சி.பி.ஐ..வெளியான அதிர்ச்சி தகவல்.. சிக்குவார்களா முக்கிய புள்ளிகள்..

Oredesam by Oredesam
February 4, 2025
in செய்திகள், தமிழகம்
0
kalpana

kalpana

FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் கூடுதல் டிஜிபியாக இருக்கும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக், கூறியுள்ள ஒரு புகார் மாநில அரசு தொடங்கி மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வரை கவனயீர்ப்பையும் அதிர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2024 ஜூலை 29-ஆம் தேதி காலை 11:30 மணி அளவில் சென்னை எழும்பூரில் இருக்கும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அலுவலகத்தில் ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் அவரது அறையில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.இது தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஏசி சர்க்யூட் ஃபால்ட் ஏற்பட்டு தீ விபத்து நடந்தது என அந்த வழக்கை முடித்தனர்.இந்நிலையில், சென்னை முதல் டெல்லி வரை பரபரப்பு தீயை பற்ற வைத்திருக்கிறது. இந்த விவகாரம்.அந்தத் தீ விபத்துக்கு பிறகு இரு வாரங்கள் கழித்து… 2024 ஆகஸ்ட் 14ஆம் தேதி கல்பனா நாயக் டிஜிபி அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

சீரியஸாக கவனிக்கும் மத்திய உள்துறை!
அதில், ‘எனது அலுவலகத்தில் நடந்த தீ விபத்து தற்செயலானது அல்ல. என்னை திட்டமிட்டு கொல்ல முயற்சித்து இருக்கிறார்கள். தேர்வாணையத்தில் நடந்த முறைகேடுகளை நான் தட்டி கேட்டதால் என்னைப் பழி வாங்குவதற்காக திட்டமிட்டு இந்த தீ விபத்து நடத்தப்பட்டுள்ளது” என்று புகார் கொடுத்திருந்தார்.அந்த புகார் பற்றி அப்போது செய்திகள் எதுவும் வெளிவராத நிலையில், பிப்ரவரி 3ஆம் தேதி ஆங்கில நாளிதழான தி ஹிந்து இது குறித்து செய்தி வெளியிட்டு இருக்கிறது

“கல்பனா நாயக் 1998 பேட்ச் அதிகாரி. தமிழ்நாட்டில் எஸ்.பி. யாக தனது பணியைத் தொடங்கியவர்.சில வருடங்கள் ஐஜியாக பணியாற்றி விட்டு சமீபமாக சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வருகிறார். இவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஏடிஜிபி புகார் கொடுத்திருக்கிறார் என்னும்போது அதை டிஜிபி அலுவலகம் லேசாக எடுத்துக் கொள்ளாது. உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டார். அதன் பேரில் சுமார் 30 பேர் வரை டிஜிபி அலுவலகத்தால் தனியாக விசாரணை நடத்தப்பட்டது.அலுவலக ஊழியர்கள், அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி, அந்த ஏசி சாம்சங் கம்பெனி என்பதால் அந்த பகுதிக்குரிய சாம்சங் ஏசி மெக்கானிக் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கல்பனா நாயக் அறையில் இரண்டு ஏசிகள் இருந்தன. அவர் காலை அலுவலகத்துக்கு வருவதற்கு முன் 9.45 மணிக்கு எல்லாம் ஏசிக்கள் ஆன் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அவர் அலுவலகத்தை விட்டுப் புறப்பட்ட பின்பு தான் அந்த ஏ.சி.க்கள் ஆஃப் செய்யப்படும். அதனால் தினந்தோறும் காலை 9.45 மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை இரண்டு ஏ.சி.க்களும் ஓடிக் கொண்டிருக்கும் என்பது அவரது அலுவலக ஊழியர்களிடம் நடத்திய விசாரணை மூலம் தெரிந்தது.

புகார் கூறியிருக்கும் பெண் அதிகாரி கல்பனா நாயக் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இது தொடர்பாக தேசிய எஸ்சி எஸ்டி ஆணையமும் கவனித்து வருவதாக டெல்லியில் இருந்து தகவல்கள் வருகின்றன.இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் இன்று அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.“கல்பனா நாயக் புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடலாம் என சில உயரதிகாரிகள் யோசனை தெரிவித்தனர். அதே நேரம் சில முக்கிய அதிகாரிகள், ‘தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை இதை அரசியல் ரீதியாக அணுக வாய்ப்பு இருக்கிறது. விவகாரம் ஐபிஎஸ் உயரதிகாரி தொடர்பானது என்பதால், ஒன்றிய அரசே இதை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே இந்த வழக்கை நாமே சி.பி.ஐ விசாரணைக்கு கொடுத்துவிடலாம் என முதல்வருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பாரதிய ஜனதா கட்சி இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கிறதா ?

July 31, 2021
பெட்ரோல், டீசல் விலை: தி.மு.க.வின் இரட்டை வேடம்  புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்கவிட்ட அன்புமணி ராமதாஸ்!

பெட்ரோல், டீசல் விலை: தி.மு.க.வின் இரட்டை வேடம் புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்கவிட்ட அன்புமணி ராமதாஸ்!

June 21, 2021
78வது சுதந்திரதின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் மோடியின் முழுஉரை

பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் 30.51 கோடிக்கும் அதிகமானோர் பதிவு

March 4, 2025
சிறுபான்மை நலனில் மோடி அரசு சிறுபான்மையினர் ஆணையம் மறுசீரமைப்பு.

சிறுபான்மை நலனில் மோடி அரசு சிறுபான்மையினர் ஆணையம் மறுசீரமைப்பு.

August 3, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x