சீன மொபைல்களின் விற்பனை படு பயங்கர சரிவை சந்தித்து உள்ளது! இந்து பத்திரிகையின் முகத்திரை கிழிந்தது

சீன மொபைல்களின் விற்பனை படு பயங்கர சரிவை சந்தித்து உள்ளது….

தேசவிரோத இந்து பத்திரிகையின் முகத்திரை கிழிந்தது

விஷமத்தனமாக சீனவை சேர்ந்த Oneplus 8, இந்தியர்களின் எதிர்ப்பை மீறி, சில வினாடிகளில் 10 லட்சம் மொபைல்கள் விற்று தீர்ந்தன என்று அப்பட்டமான பொய்யை வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பி உள்ளது.

இந்து பத்திரிகையின் இணையதளத்தில் இன்று இந்த கேவலமான செய்தியை வெளியிட்டுள்ளது. சில நொடிகளில் அவை விற்று தீர்ந்து விட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக மகா பொய் இதுதான். இந்த நிமிடம் வரை அமேசானில் ஒன் பிளஸ் 8 மொபைல் விற்பனை ஆகவில்லை. கோவை பின்கோடை பயன்படுத்தி சோதித்துப் பார்க்க முடிகிறது. இன்று(25.06.2020) பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வந்தது. இதுவரை அவுட் ஆப் ஸ்டாக் ஆகவில்லை.

லக்னோவில் உள்ள மிக முக்கியமான ஓப்போ ஷோரூமை, கடந்த ஐந்து தினங்களாக ஒரு வாடிக்கையாளர் கூட தீண்டவில்லை என்பதுதான் உண்மையான செய்தி

எனவே சீன பொருட்களை நமது மக்கள் புறக்கணிக்க தொடங்கி விட்டார்கள் என்பதே அப்பட்டமான உண்மை. அதுவும் 80 சதவீதம் அளவிற்கு சீன மொபைல் விற்பனை சரிந்து உள்ளது

இந்த உண்மைகளை மூடி மறைப்பதற்காக, சில தேசதிற்கு எதிராகஇருக்கும் பத்திரிகைகளும், அதில் வேலைபார்க்கும் தேச துரோக நிருபர்களும் தொடர்ந்து இந்தியர்களுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் ஒரு அங்கமாக தான் விஷமத்தனமாக நிருபர் ஒருவர் இன்று வேண்டுமென்றே oneplus8 மொபைல்கள் 10 லட்சம்வரை விற்பனையாகி உள்ளன என்று அப்பட்டமாக பொய்யை பரப்பி உள்ளார்.

முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, குறிப்பிட்ட நிமிடங்களில் பத்தாயிரம் மொபைல்கள் விற்றாலே, அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்திகளை வெளியிட்டு தம்பட்டம் அடிக்கும்

ஆனால் ஒன் பிளஸ் நிறுவனம் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ செய்திகளையும் விற்பனை தொடர்பாக வெளியிடவில்லை. காரணம் கடந்த வாரம் அதிகபட்சமாக 5 ஆயிரம் மொபைல்கள் விற்பனையாகி இருந்தாலே அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்பதே உண்மை. இந்தவாரம் அதுவும் கூட விற்பனையாகவில்லை .

இதற்கிடையில் அடுத்த வாரம் 29-ஆம் தேதி அடுத்த விற்பனை என்று அமேசான் நிறுவனம் முதல் பக்கத்தில் விளம்பரத்தை வெளியிட்டு இந்திய மக்களை பைத்தியக்காரர்கள் ஆக்கி வருகிறது.

இது போல இன்னும் ஏராளமான தேச விரோதிகளின் கதறல்களை அடுத்தடுத்த நாட்களில் நாம் காணலாம்…

Exit mobile version