கிறிஸ்தவமிஷநரியின் சூழ்ச்சியை முறியடித்த இந்து முன்னணி..!

மனிதர்களை மாற்றி வந்த கிறிஸ்தவ மிஷநரிகளின் கும்பல் இன்று ஒரு படி மேல சென்று ஊரின் பெயர்களையே மாற்றி வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்..

மாற்றநல்லூர்வயல் என்னும் கிராமத்தின் பெயரை காருண்யா என்று மாற்றியது பால் தினகரன் தலைமையிலான கிறிஸ்தவ மிஷநரி குழு என்பது அனைவரும் அறிந்ததே.. இதனை அடுத்து விழிப்படைந்த ஹிந்துக்கள் காருண்யா என்கின்ற பெயரை புறம் தள்ளி விட்டு நல்லூர் வயர் என்னும் பெயர் பலகையை நிலை நிறுத்தி இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக  தஞ்சாவூர் மாவட்டம் வழிகாட்டுதல் பெயர் பலகையில் கிறிஸ்தவ மிஷநரிகள் தங்களின் சூழ்ச்சியை அரங்கேற்றி இருந்தனர்.. இதனை அறிந்து களத்தில் இறங்கிய இந்து முன்னணி அச்சூழ்ச்சியை முறியடித்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Exit mobile version