பஞ்சாப்பில் உடைகிறது காங்கிரஸ்! தனித்தனி கூட்டம் முதல்வர் அமரீந்தர்சிங் – சித்து மோதல்!

பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிவுக்கு வர இருக்கிறது. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்துள்ளது சோனியா குடும்பம். இதனால் கடுப்பாகி இருக்கும் அம்ரீந்தர்சிங் சோனியாவுக்கு நேரடியாகவே எச்சரிக்கும் விதத்தில் பஞ்சாப் அரசியலிலும் ஆட்சியிலும் தலையிடுவது நல்லதல்ல இதனால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்தார். அனைத்தையும் மீறி சித்துவிற்கு காங்கிரஸ் பதவி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அம்ரீந்தர்சிங் , சித்துவும் தங்களுக்கு உள்ள பலத்தை நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றர்கள் ஏனெனில் காங்கிரஸ் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் அறிவிக்க இருக்கிறது இதன் காரணமாக இருவரும் நேற்று தனித்தனியே ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர்.முதல்வர் அமரீந்தர் சிங்கின் வீட்டில் நடந்த கூட்டத்தில், சட்டசபை சபாநாயகர் ராணா, அமைச்சர்கள் பல்பிர் சிங் சித்து, சாது சிங் தரம்சோத், பிராம் மஹிந்திரா உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.

அமைச்சர் திரிபத் ரஜிந்தர் சிங் பாஜ்வா இல்லத்தில், நவ்ஜோத் சிங் சித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் பாஜ்வா மட்டுமின்றி, அமைச்சர்கள் சரண்ஜித் சன்னி, சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சுனில் ஜாக்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அனேகமாக அம்ரீந்தர் சிங் காங்கிரசில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது இதனால் 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மரண அடி உறுதி.கடந்த 2017 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ராகுலை பிரச்சாரத்திற்கே வர வேண்டாம் என்று கூறிய கேப்டன் அம்ரீந்தர் சிங் தேர்தல் பிரச்சாரத்தில் வால் போஸ்டரில் கூட சோனியா ராகுலின் படங்களை கூட போடாமல் பிரச்சாரம் செய்து காங்கிரஸை வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர்த்தினார்.இதனால் தான் அம்ரீந்தர் சிங்கிற்கு போ ட்டியாக சோனியா குடும்பத்தினர் சித்து வை வளர்த்து வந்தார்கள்.இப்பொழுது சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரசின் தலைவராக சோனியா குடும்பம் கொண்டு வர நினைக்கிறது.

பதிலுக்கு கேப்டன் காங்கிரசை உடைத்துக்கொண்டு தனிக்கட்சி ஆரம்பிக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு வேளை கேப்டன் தனிக்கட்சி ஆரம்பித்து வருகி ன்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அம்ரீந்தர் சிங் சிரோன்மணி அகாலி தளம் இடையே தான் தேர்தலில் போட்டி இருக்கும். காங்கிரஸ் 4 வது இடத்திற்கு போய்விடும் வாய்ப்புகள் இருக்கிறது இதனால் தேர்த லுக்கு பிறகு பஞ்சாபில் பிஜேபியின் ஆதிக்கம் கொண்ட ஆட்சி அமைய முடியும்.

பிரசாந்த் கிஷோரை வைத்து காங்கிரசை கரையேற்றி விடலாம் என்று சோனியா குடும்பம் கனவில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி என்று ஒன்று இருந்தால் தானே கரையேற முடியும்.பஞ்சாபில் கேப்டன் அம்ரீந்தர் சிங் ராஜஸ்தானில் சச்சின் பைலட் ஹரியானாவில் முன்னாள் முதல்வர் பூபேந்தர் ஹூடா சட்டிஸ்கரில் இப்போதைய சுகாதார அமைச்சர் சிங்டியோ எப்பொழுது வேண்டு மானாலும் காங்கிரசில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பிக்கலாம்.

Exit mobile version