Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தீண்டத்தகாத ஜாதி எது என்று கேட்கப்பட்ட 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வியால் சர்ச்சை.

Oredesam by Oredesam
September 21, 2022
in செய்திகள், தமிழகம்
0
தீண்டத்தகாத ஜாதி எது என்று கேட்கப்பட்ட 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வியால் சர்ச்சை.
FacebookTwitterWhatsappTelegram

மதுரையிலுள்ள தனியார் பள்ளி நடத்தப்பட்ட தேர்வில், தீண்டத்தகாத ஜாதி எது என்று கேட்கப்பட்ட 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஜாதி ரீதியிலான பல்வேறு தீண்டாமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் தென்காசி மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது என்று தீண்டாமை கொடுமை செய்த, தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். தவிர, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சிப் பதவிகளில் தலைவர், கவுன்சிலராக இருக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஊராட்சி தலைவர்களாக இருக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அமர்வதற்கு நாற்காலிகூட தராத கொடுமை நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்து சந்தி சிரித்தது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

அவ்வளவு ஏன், அமைச்சர்களே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை பொதுவெளியில் அசிங்கப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஊராட்சி ஒன்றிய பெண் தலைவரை மேடையிலேயே ஏம்மா நீ எஸ்.சி. தானே என்று கேட்டு அவமானப்படுத்திய சம்பவம் அரங்கேறியது. அதேபோல, அமைச்சர் துரைமுருகன் ஒரு மேடையில் பேசும்போது, தன்னிடம் பெரியார் ஜாதியைப் பற்றி கேட்டதாகவும், அதற்கு தான் வன்னியர் என்று சொன்னதாகவும், அதற்கு அவர் அப்படின்னா நீயும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன்தான் என்று சொன்னதாகவும் சொல்லி, பட்டியல் சமூகத்தினரை கேவலப்படுத்தினார். அதேபோல, எம்.பி. தயாநிதி மாறன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் எங்களை அவமரியாதை செய்து விட்டார். நாங்கள் என்ன தீண்டத்தகாதவர்களா என்று கேட்டு பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தினார்.

இந்த நிலையில்தான், மதுரையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் தீண்டத்தகாத ஜாதி எது என்று கேட்கப்பட்டிருக்கும் கேள்வி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரையில் ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தற்போது பருவத் தேர்வு நடந்து வருகிறது. அந்த வகையில், 6-ம் வகுப்பு சமூக அறிவியல் பருவத் தேர்வு நேற்று நடந்தது. இக்கேள்வித் தாளில் மும்பை மாகாணத்தில் தீண்டத்தகாத ஜாதியாக இருந்தது எது என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே, மேற்படி கேள்வி கேட்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே, சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் முதுகலை வரலாற்றுத் துறையின் தமிழ்நாடு விடுதலைப் பாடத்தில், தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட ஜாதி எது? என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக, திராவிடர் கழகமும், தி.மு.க.வும்தான் ஜாதியை ஒழித்தது என்று பீற்றிக்கொள்ளும் தி.மு.க.வினர்தான் பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்துகிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்கிறார்கள் பொதுமக்கள்.

source MEDIAN.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Krivak_III

நண்பேன்டா! களத்தில் இறங்கிய ரஷ்யா போர்க் கப்பல்! அலறும் அரபிகடல்! பதறும் பாகிஸ்தான்! துருக்கியாவது …..

May 6, 2025
தொழில்முனைவோரும், சொத்து உருவாக்குநர்களும் நாட்டில் நிறைந்துள்ளனர்: பிரதமர் நரேந்திர மோடி.

தொழில்முனைவோரும், சொத்து உருவாக்குநர்களும் நாட்டில் நிறைந்துள்ளனர்: பிரதமர் நரேந்திர மோடி.

December 20, 2020
கொரோனா நிவாரண நிதியாக  5 லட்சம் வழங்கிய பாஜக பிரமுகர்   VSJ  சீனிவாசன்

கொரோனா நிவாரண நிதியாக 5 லட்சம் வழங்கிய பாஜக பிரமுகர் VSJ சீனிவாசன்

May 22, 2020
புதிய எம்.பிக்கள் ‘கொள்கை விவகாரங்களில் புதுப்பிப்புடன் இருங்கள்’ மோடி அறிவுரை!

சமூக வலைதளங்களை நாட்டின் நலனுக்கு எதிராக பயன்படுத்த வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு.

July 26, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x