கொரோன தடுப்பூசி தகவல்களை இந்தியாவிற்கு வழங்கியது ரஷ்யா! இந்த ஆண்டு இறுதிக்குள் கொரானாவின் தாண்டவம் முடித்து வைக்கப்படும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோர தாண்டவம் ஆடிவருகிறது. எப்போது இந்த கொரோன வைரஸின் தாக்கம் குறையும் என்பதையும் கூறமுடியாத நிலை தற்போது, இந்த நிலையில் உலகின் செயல்பாடுகளை கொரோனா மாற்றி அமைத்துள்ளது. சில நன்மைகள் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகமே சீர்குலைந்து விட்டது இந்த கொரோனவின் கொடூர தாக்குதலால் .இந்த நிலையில் உலக நாடுகள் கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டுபிடித்து அதை சோதனை செய்து வருகின்றர்கள்

உலகில் முதலாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்தது ரஷ்யா. ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்து ஸ்புட்னிக்-5 குறித்த தகவல்களை அந்நாட்டு ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஸ்புட்னிக்-5 என்ற பெயர் கொண்ட அந்த மருந்தின் மூன்று கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் அம்மருந்தினை தயாரிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் அம்மருந்தினை தயாரிக்க ரஷ்யா விருப்பம் தெரிவித்த நிலையில் அம்மருந்து குறித்த விவரங்களை அந்நாட்டின் கமாலேயா ஆராய்ச்சி நிறுவனத்திடம் இந்தியா கேட்டிருந்தது. தற்போது மருந்து குறித்த விவரங்கள் இந்தியாவுக்கு ரஷ்யாவிடமிருந்து அனுப்பப்பட்ட நிலையில் இந்திய வல்லுநர்கள் அதை ஆய்வு செய்து வருகின்றனர்.

ரஷ்யா அனுப்பிய விவரங்களின் அடிப்படையில் ஸ்புட்னிக் -5 மருந்து முதல் மற்றும் இரண்டு கட்டங்களில் நல்ல பலனை கொடுத்துள்ளது. மூன்றாவது பரிசோதனையை சவுதி அரேபியா, பிரேசில், யு.ஏ.இ.உள்ளிட்ட நாடுகளில் ரஷ்ய நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ரஷ்ய சென்றிருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய தடுப்பு மருந்து குறித்தும் அதன் ஆராய்ச்சிகள் குறித்தும் தனது ரஷ்யாவுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிலையில் லான்செட் மருத்துவ இதழ், மனித உடலில் ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து ஆன்டி பாடிகளை உருவாக்குவதாக அறிவித்திருந்தது. சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 76 பேரிடம் இத்தகவல்கள் பெறப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்தியாவில் இந்த தடுப்பூசிகள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டால் இந்தியாவிற்கு தடுப்பூசிகள் கிடைப்பது எளிதாகி விடும். மேலும் கோவாக்ஸின் இந்தியாவின் தடுப்பூசி இதுவும் தற்போது சோதனை கட்டங்களை முடிக்கும் நிலையில் உள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கிய கோவிஷீல்ட் எனும் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை கர்நாடகாவின் மைசூரில் உள்ள JSS மருத்துவமனையில் தொடங்கியது. கொரோனாவிற்கு எந்த நாடு மருந்து கண்டுபிடித்தாலும் உலகம் முழுவதும் விநியோகம் செய்ய இந்தியாவின் உதவி அவசியம். எனவே இந்த ஆண்டு இறுதியில் கொரானாவின் விளையாட்டு இந்தியாவின் உதவியால் முடித்து வைக்கப்படும். என்கிறார்கள் வல்லுநர்கள்.

Exit mobile version