சிவராத்திரி விழாவில் கொரோனாவா பொய் செய்திகளை பரப்பும் மத வெறியர்கள் !

ஈஷா யோக மையத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவா்கள் 150 பேருக்கு பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்பரிசோதனையின் முடிவில் யாருக்கும் கொரோனா நோய்த் தொற்று அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது

தப்லீக் மாநாடு மார்ச் 18.அங்கு சென்று வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனை முடிவு என்ன என்பதை தற்போது பார்த்து வருகின்றோம். இது இந்தியா அதுவே மலேசிய பக்கம் பார்த்தால் பிப்ரவரி 8 தேதி பத்துமலையில் தைப்பூசம் விழாவில் 15 லட்சம் மக்கள் கூடினார். ஒருவாரம் விழா வெகு விமர்சையாக நடந்தது. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்று பயணிகளும் கூடினர். பிப்ரவரி 20 தேதி பினாங்கு தீவில் மாசி மக தெப்ப திருவிழா நடந்தது . 30 ஆயிரம் பேர் கூடினர். ஆனால் அந்த இரண்டு திருவிழாக்களில் கலந்து கொண்ட ஒருவருக்கு கூட கோரானா இல்லை. மலேசிய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்தும் விட்டது.

ஆனால் பிப்ரவரி 27 மார்ச் 2 வரை கோலாலம்பூர் அருகே நடந்த தப்லீக் நிகழ்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நூற்றுகணக்கில் கொரொனா. அவர்கள் மூலமே மலேசியாவில் பெருமளவில் பரவி உள்ளது. மலேசிய அரசாங்கம் மலாய் மக்கள் உட்பட அனைவரும் ஏற்று கொண்டு விட்டனர்.

இந்தியாவிலும் இதே நிலைமைதான். நிச்சயமாக தப்லீக் நிகழ்வு மூலமே பரவி இருக்கும். ஆனால் வியாதி இருப்பது தெரியாமலும் நிகழ்வில் கலந்து கொண்டு இருக்கலாம். பிரச்சனை அதுவல்ல… வியாதியின் வீரியத்தை உணர்ந்த பிறகும் வெளிநாட்டு இஸ்லாமியர்களை உள்ளுரில் தங்க வைத்திருப்பதும், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பதும் எந்த விதமான மனநிலை என்று தெரியவில்லை.

தப்லீக் நிகழ்சியில் கலந்து கொண்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய சொல்லியும் ஒத்துழைப்பு இல்லை. இது மத மோதல்களை உருவாகும் வண்ணம் சிவராத்தி விழாவினை உள்ளே இழுத்து விடுகின்றார்கள் சில மத வெறியர்கள்!

Exit mobile version