சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் சமையல் சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் விலையை இன்று ரூ.25 உயர்த்தியது இன்றைய சில்லரை விற்பனை விலை – 5% GSTயையும் சேர்த்து : ₹900. இதில் மத்திய அரசு ₹21.50 எடுத்து கொள்கிறது, மாநில அரசு ₹21.50 எடுத்து கொள்கிறது.
மத்திய அரசு சென்ற வருடம் வரை ஒரு சிலிண்டர் விலையில் 25% மானியம் + போக்குவரத்து கட்டணம் கொடுத்து வந்தது.ஒரு குடும்பம் வருடம் 12 சிலிண்டர் வரை மானியம் பெறலாம்.
சென்ற வருடம் கோவிட் காரணமாக 9 கோடி உஜ்வாலா பயனாளிகளுக்கு 3 சிலிண்டர் முற்றிலும் இலவசமாக அளித்தது.தமிழ்நாட்டில் மட்டும் 31 லட்சம் குடும்பங்கள் 3 சிலிண்டர்கள் இலவசமாக 2020-21 நிதியாண்டில் பெற்றனர்.
இந்த வருடம் போக்குவரத்து கட்டணம் மட்டுமே மத்திய அரசு பயனாளிகள் கணக்கில் செலுத்துகிறது. ஒவ்வொரு சிலிண்டருக்கும் ₹30 முதல் 60 வரை மானியமாக செலுத்த படுகிறது.
சிலிண்டருக்கு ₹21.50 வருவாய் பெறும் மத்திய அரசு ₹30 முதல் ₹60 வரை மானியமாக தருகிறது.இந்த மானியம் இந்தியாவில் அனைவருக்கும் சமையல் எருவாயு ஒரே விலையில் கிடைக்க உதவுகிறது
அதே ₹21.50 மானியமாக பெறும் மாநில அரசு என்ன செய்கிறது ? தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் மாதம் ₹100 மானியம் தருமா விடியல் அரசு ?
இந்த நிதி ஆண்டில் சமையல் எரிவாயு மொத்த மானியத்தை மத்திய அரசு ₹26,842 கோடி குறைத்துள்ளது ஆனால் உணவு தானியத்திற்கான மானியத்திற்கு சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ₹1,27,266 கோடி அதிகரித்துள்ளது இதன் மூலம் நாடு முழுதும் ஏப்ரல் முதல் நவம்பர் வரை இலவச அரிசி கோதுமை வழங்கபட்டு வருகிறது.
அதாவது – அனைத்து பிரிவு மக்களுக்கும் போகும் சமையல் எரிவாயு மானியத்தை குறைத்து
விவசாயிகளிடம் இரண்டு மடங்கு அதிக உணவு தானியத்தை மத்திய அரசு வாங்குகிறது
விலையின்றி அரிசி கோதுமை அனைத்து ஏழை எளிய மக்களுக்கு அளிக்கிறது இதுதான் உண்மையான சமூக நீதி
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















