இந்தக் கட்டிடத்தை இடித்துத் தள்ளுவதற்கான அத்தனை வேலைகளும் மும்முரமாக நடக்கிறது. இந்த மொத்த கட்டிடமும் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டதாம். அதோடு இந்த கட்டிடத்திற்கு இதுவரை பிராபர்டி டாக்ஸ் கட்டியதே இல்லையாம். இதுவரை பலமுறை உள்ளூர்வாசிகள்இது தொடர்பாக எத்தனையோ அதிகாரிகளிடம் பல லெவல்களில் புகார் அளித்தபோதும் யாரும் எந்த முயற்சியும் இது தொடர்பாக எடுத்ததே கிடையாதாம்.
அறிக்கைகளின்படி, தெற்கு டெல்லி முனிஸிபல் கார்பரேஷன் இரண்டு மாடிகளை விட்டு மிச்சமுள்ள 7 மாடிகளை இடிக்கப் போகிறதாம். ஏனெனில் இரண்டு மாடிதவிர.. மற்ற தளங்களுக்கு எந்தவிதமான வரைபடமோ பர்மிஷனோ வாங்காமல் சகட்டுமேனிக்கு கட்டித் தள்ளியிருக்கிறார்கள்.
தற்போது முழு பில்டிங்கிற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது..!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















