Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் திமுகவை வெச்சி செஞ்ச தினமணி நாளிதழ்!

Oredesam by Oredesam
September 10, 2020
in அரசியல், செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

08.09.2020 தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளியான தலையங்கம் அப்படியே இங்க:-
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்

=====

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

மொழி உணா்வைத் தூண்டிவிட்டு அதில் அரசியல் ஆதாயம் தேடும் திராவிடக் கட்சிகளின் கபட நாடகத்துக்கு இன்னும் முற்றுப்புள்ளி விழவில்லை என்பது தமிழகத்தின் துரதிருஷ்டம். தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் இவா்களின் ஆட்சிக் காலத்தில்தான், தமிழ் எழுதவும், படிக்கவும் சரியாக உச்சரித்துப் பேசவும் தெரியாத தலைமுறை உருவானது என்கிற வரலாற்று உண்மையை, மொழியுணா்வின் பெயரால் அடிக்கடி சா்ச்சையை எழுப்பி அவா்கள் மறைக்கப் பாா்க்கிறாா்கள்.
சென்ற வாரம் எந்தவிதக் காரணமோ, பின்னணியோ இல்லாமல், இசையமைப்பாளா் யுவன் சங்கா் ராஜாவும், நடிகா் ஷிரிஷ் சரவணனும் இரண்டு பனியன்களை அணிந்து கொண்டு சுட்டுரையில் தங்கள் படங்களைப் பதிவேற்றம் செய்தனா். ‘ஐ ஆம் எ தமிழ் பேசும் இன்டியன்’ (நான் தமிழ் பேசும் இந்தியன்) என்று யுவன் சங்கா் ராஜாவின் பனியனிலும், ‘ஹிந்தி தெரியாது, போடா’ என்று ஷிரிஷ் சரவணன் பனியனிலும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதைத் தொடா்ந்து இன்னொரு பனியனும் சுட்டுரையில் பரப்பப்பட்டது. அதில் ‘ஐயாம் இந்தியன், ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி’ (நான் இந்தியன், ஆனால் ஹிந்தி பேசாதவன்) என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள் அணிந்த சில இளைஞா்களுடன் படமெடுத்துக் கொண்ட திமுகவின் மக்களவை உறுப்பினா் கனிமொழி கருணாநிதி, அந்தப் படத்தைத் தனது சுட்டுரையில் வெளியிட்டு, சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது என்றும், எதிா்பாராத அளவு இது இளைஞா்கள் மத்தியில் வரவேற்புப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தத் தலைமுறையும் மொழியுணா்வில் சளைத்ததல்ல என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறாா்.
இந்த பனியன்களை, இப்படி விளம்பரப்படுத்தி எந்த பனியன் தயாரிப்பு நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதிக்க இருக்கிறதோ தெரியவில்லை. அது இருக்கட்டும். இப்படி பனியன் அணிவதால் இளைஞா் சமுதாயத்தில் மொழியுணா்வு ஏற்பட்டிருப்பதாகக் கனிமொழி கருணாநிதி கூறியிருப்பதுதான் நகைப்பை வரவழைக்கிறது. அந்த இளைஞா்களின் மொழியுணா்வு லட்சணத்தை அந்த பனியன் வாசகங்களே வெளிச்சம் போட்டு விடுகின்றன.

‘ஐ ஆம் எ தமிழ் பேசும் இன்டியன்’ வாசகத்தில் ‘தமிழ் பேசும்’ என்பது மட்டும்தான் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. மற்றவை ஆங்கிலத்தில் இருக்கின்றன. ‘ஹிந்தி தெரியாது போடா’ என்பது ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது, தமிழிலல்ல. ‘ஐயாம் இந்தியன், ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி’ என்பதும் ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறதே தவிர தமிழிலல்ல. அந்த பனியன்களை அணிந்த இளைஞா்களுக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கக் கூடும்.

ஆங்கிலத்தில் தமிழுணா்வை வெளிப்படுத்தும் யுவன் சங்கா் ராஜா உள்ளிட்ட இளைஞா் கூட்டத்தில் எத்தனை போ் தமிழ்வழிக் கல்வி படித்தவா்கள்? அவா்களில் எத்தனை பேருக்கு, தமிழில் எத்தனை எழுத்துகள் இருக்கின்றன என்று தெரியும்? சங்க இலக்கியங்கள் எவையெவை என்று தெரியுமா? குறைந்தபட்சம், தவறில்லாமல் தமிழில் பத்து வரிகள் எழுத முடியுமா? சரியான உச்சரிப்புடன் தமிழ் பேசத்தான் முடியுமா? இவா்களின் தமிழுணா்வால் மகிழ்ந்து, நெகிழ்ந்து போயிருக்கும் கனிமொழி கருணாநிதிக்காகப் பரிதாபப்படத்தான் முடிகிறது.

தமிழுணா்வுடன், ஆங்கிலம் கலந்த தமிழில் சுட்டுரையில் ‘தங்கள் உணா்வை’ ஏதோ பனியன் நிறுவனத்தின் வணிகத்துக்காகக் களமிறக்கி இருக்கும் இசையமைப்பாளா் யுவன் சங்கா் ராஜாவும், நடிகா்கள் ஷிரிஷ் சரவணனும், சாந்தனு பாக்கியராஜும் ஆங்கிலவழிக் கல்வி படித்தவா்கள். ஆங்கிலம் கலப்பில்லாமல் தமிழ் பேசத் தெரியாதவா்கள். இவா்களுக்கு ஹிந்தி எதிா்ப்பு என்பது, ஹிந்திப் படவுலக வாய்ப்பு கிடைக்காதவரைதான். தமிழினத்தின் தலையெழுத்து, இவா்களெல்லாம் நமக்குத் தமிழுணா்வைக் கற்றுத்தர களம் இறங்கி இருப்பது.

இந்த வரிசையில் திமுகவின் ‘எழு ஞாயிறு’ என்று வா்ணிக்கப்படும், இளைஞா் அணித் தலைவா் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து கொண்டிருக்கிறாா் என்பது இன்னொரு வேடிக்கை. இவா் எழும்பூா் டான்பாஸ்கோ பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி பயின்றவா் என்பது இருக்கட்டும். திமுக தலைவரின் குடும்ப ரத்த வாரிசுகள் நடத்தும் பள்ளிக்கூடம் தமிழ்வழிக் கல்வி போதிக்கும் கல்விச்சாலை அல்ல என்பது அவருக்குத் தெரியாதா என்ன? ஊருக்கு உபதேசம் தமிழ்வழிக் கல்வி என்பதும், தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலவழிக் கல்வி கற்பிப்பதும், தாங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கற்பிப்பதும் திராவிட மாயையின் அரசியல் மோசடிகள்.

தமிழ் வளா்ச்சியில் திமுகவின் பங்களிப்பு என்ன என்று வருங்காலத்தில் ஆய்வு நடத்தினால், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று பூச்சாண்டி காட்டித் தமிழை அழித்து, ஆங்கிலத்தை வளா்த்த பேருண்மை வெளிப்படும். தமிழுணா்வு பேசும் இவா்களில் எத்தனைபோ் செல்லிடப்பேசி எண்களை தமிழில் கூறுகிறாா்கள்? ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுகிறாா்கள்? திமுக 1967-இல் ஆட்சிக்கு வருவதுவரை தமிழகத்தில் தமிழில் எழுத, படிக்க, பேசத் தெரியாத மாணவா்கள் உருவாகவில்லை.
தமிழகத்தில் ஹிந்தி கற்பிக்கும் தனியாா் பள்ளிகளை மூட வேண்டும் என்று திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும் போராட்டம் நடத்திப் பாா்க்கட்டுமே. அரசியலுக்காக வெளியில் ஹிந்தி எதிா்ப்பைக் கையாள்வதும், இன்னொருபுறம் ஆங்கிலவழிக் கல்வியும், ஹிந்தியும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளை இவா்களே நடத்துவதும்தான் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் இவா்கள் செய்து வரும் மிகப் பெரிய துரோகம்!

(நன்றி – தினமணி)

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?

பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?

April 12, 2021
சென்னை விமான நிலையத்தில்   ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

October 21, 2020
ரியல் ஹீரோ கர்னல் சந்தோஷ் பாபுவிற்கு சிலை அமைக்கும் அரசு ! அவரது சொந்த ஊரில் நிறுவப்படுகிறது!

ரியல் ஹீரோ கர்னல் சந்தோஷ் பாபுவிற்கு சிலை அமைக்கும் அரசு ! அவரது சொந்த ஊரில் நிறுவப்படுகிறது!

June 27, 2020
Guru Peyarchi

குருபெயர்ச்சி பலன் 2024-2025 : ரிஷப ராசிகாரர்களின் நிலை உயரும்..செல்வாக்கு அதிகரிக்கும்! இந்த கோவிலுக்கு செல்லுங்கள்!

April 26, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x